Cart is Empty
by கோ.நம்மாழ்வார்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்?’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.
RS. 123 More...by டாக்டர் மைக்கேல் செயராசு
சாதாரண காய்ச்சல் முதல் நஞ்சு முறிக்கும் சிகிச்சை வரை, பாட்டிகளிடமும் உள்ளூர் வைத்தியரிடமும் சென்றனர் நம் முன்னோர். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. லேசான தலைவலிக்கு மருத்துவமனை வாசலில் தவமிருக்கும் நிலைதான் இப்போதுள்ளது. நமக்கென இருந்த, இருக்கும் மூலிகைச்செடிகளின் அருமையை அறியாததால் அவற்றை உதாசினப்படுத்தி விட்டு, உடல் நலம் கெட்டால் மாத்திரைகளை விழுங்கி, அதனால் ஏற்படும் பக்க விளைவுக்கும் ஒரு மாத்திரை என மாத்திரைகளுக்கும் ஊசிகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கிறது நம் ஆரோக்கியம். ஒரு மூலிகையால் பல நோய்களைக் குணமாக்கினார்கள் நம் முன்னோர். அந்த மகா மருந்து, நோயைக் குணமாக்கியதோடு அல்லாமல் அந்த நோய் மீண்டும் நம்மைத் தாக்காமல் தடுத்தாட்கொண்டது! நம்மைச் சுற்றியுள்ள செடி கொடிகளின் மருத்துவக் குணங்களை விளக்கி பசுமை விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். நீரிழிவை நீக்கும் விளா.. வாத நோயைத் தீர்க்கும் நொச்சி.. காமாலையை விரட்டும் கீழாநெல்லி... என ஒவ்வொரு மூலிகைச் செடியிலும் உள்ள மருத்துவ மகத்துவத்தை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். வந்த நோயை விரட்டவும், இனி நோய் வராமல் தடுக்கவும் வழிகாட்டும் இந்த நூல் உங்கள் ஆரோக்கியத்தின் அரண்!
RS. 200 More...by ஜி.பழனிச்சாமி
இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்போயின, மாறிக்கொண்டும் வருகின்றன. `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்திய விழிப்புஉணர்வின் பயனாக, பெரும்பாலான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விளைச்சலைப் பெருக்கும் இயற்கை விவசாய முறைக்கு ஈடு இணையற்ற உரமாக விளங்கும் பஞ்சகவ்யம் கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது. நுண்ணூட்டச் சத்துக்களும் நுண்ணுயிர் சத்துக்களும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ள, நல்ல உயிர் உரம் பஞ்சகவ்யா. நோய் விரட்டி மற்றும் பக்க விளைவில்லாத உரமான பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி பெருமளவில் பயன் அடைந்த விவசாயிகளின் அனுபவங்களை, பசுமை விகடன் தொடராக வெளியிட்டது. அந்தத் தொடரின் தொகுப்பு நூல் இது. மிக மிக எளிய முறையில், சொற்ப செலவில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, விளைச்சலைப் பெருக்கி விவசாயிகளுக்கு பெரும் லாபம் கொடுக்கிறது. இந்த நூல் பஞ்சகவ்யா பயன்படுத்துவதை இன்னும் பரவலாக்கி, விளை நிலங்களை பசுமையாக்கிட உதவும்.
RS. 180 More...by டாக்டர் ரா.கிஷோர் குமார்
கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள், நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தன் எஜமானனையே எல்லாமுமாக நினைத்து வாலைக் குழைத்து வாஞ்சை காட்டும் நாய்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய புத்தகம் இது! விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் என்ற பெருமை பெற்ற லைக்கா என்ற நாய், ஹிட்லர் படையில் இருந்த பேசும் நாய்கள், இறந்துவிட்ட தன் எஜமானன் வருகைக்காக பல வருடங்களாக தினமும் ரயில் நிலையம் சென்று காத்திருந்து உயிர்விட்ட ஹச்சிக்கோ போன்ற நாய்களின் நற்குணங்களைப் பற்றிய அரிய தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நாய்களின் தோற்றம், பரிணாமம், நாய்களின் வகைகள், அவற்றின் குணங்கள், தமிழக வேட்டை நாய் இனங்களான கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய் இனங்களின் குண இயல்புகள், நாய் வளர்ப்பு முறைகள், நாய்களுக்கு வரும் நோய்கள் அதற்கான தீர்வுகள், நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது எப்படி என அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில், விரிவாக விவரித்துள்ள நூலாசிரியர், நாய்களைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். நன்றியுள்ள ஜீவனின் நலன் காக்கவும் அதை நன்கு பராமரிக்கவும், அந்த ஜீவனை வளர்த்து வருவோருக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்த நூல்!
RS. 193 More...