Cart is Empty
கோடையில் குளிர்ந்த நீரோடையையும், மழை வருமுன் வீசும் குளிர்ந்த காற்றையும் உணரும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நம்மில் ஊடுருவி இருப்பது நகைச்சுவை உணர்வு. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சோர்வையும் நீக்கி நம் மனதைச் சமப்படுத்துவதில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செயலையும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் செய்யும்போது அதன் வலி தெரியாமல் புத்துணர்வை அளிக்கும். இப்படி, சீரியஸான கருத்தையும் சின்ன ஜோக்குகளாக எழுதி அனைவரின் மனதிலும் எளிதில் பதிய வைத்திருக்கிறார்கள் விகடனின் ஜோக் எழுத்தாளர்கள். 2007_ம் வருடம், ஆனந்த விகடனில் வெளிவந்த ஜோக்குகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கையடக்க நூலாக வெளியிட்டிருக்கிறோம். சுவைத்து, சிரித்து மகிழுங்கள்!