Cart is Empty
by சி.சரவணன்
‘ஆறிலிருந்து அறுபது வரை’ அனைத்து பெண்மணிகளும் விரும்புவது தங்க ஆபரணங்கள் என்றால் மிகை இல்லை. அதேசமயம், மகளுக்குக் கல்யாணம், உறவினர் வீட்டுக்குச் செய்முறை, நேர்த்திக்கடன் போன்ற சமயங்களில் நடுத்தரக் குடும்பங்களைக் கவலைப்படுத்தும் மிகப் பெரிய விஷயம், தங்கத்தின் ‘கிடுகிடு’ விலை உயர்வுதான்! ‘இந்த விலை உயர்வு எங்கே போய் நிற்குமோ?’ என்ற கேள்வி அனைவரின் மனதிலும் அலைபாய்கிறது. பல குடும்பங்களில், ஆத்திர அவசரத்துக்கு அடமானம் வைக்க உதவுவதும், வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி வரும் சமயங்களில், குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதும் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் தங்கம்தான். தங்கநகை சேமிப்பு என்பது நமது பாரம்பரியப் பழக்கம்தான். 2010_ம் ஆண்டில் மட்டும் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். உலக அளவில் தங்கத்தைப் பயன்படுத்துவதில் இந்தியர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இன்றைய நிலையில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் வருமானம் என்பது நிலையானதாக இல்லை என்பதால் பெரும்பாலோர் விரும்பும் ஒரே முதலீடு தங்கம்தான். தங்க முதலீட்டை லாபகரமாகச் செய்வது, அதற்கான வழி முறைகள், தங்கநகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தங்கத்தைப் பாதுகாக்கும் முறைகள்... போன்ற விவரங்களை, துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டு, அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். இந்த நூலைப் படித்துவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்து லாபம் அடையலாம் என்பதை நிச்சயம் உணர்வீர்கள்!
RS. 63 More...by எஸ்.எல்.வி.மூர்த்தி
வியாபாரிகளுக்கான நூல் இது. வியாபாரத்தில் என்னதான் ‘அலர்ட் ஆறுமுகமாக’ இருந்தாலும், ஒரு சில விஷயத்தில் அலர்ட்டாக இருக்கும் சமயத்தில் நமக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்களை நாம் கோட்டை விடுவது சகஜம்! பொதுவாகவே, வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், தங்கள் பணத்தை முதலீடு செய்வதால் அதி ஜாக்கிரதையாகவே இருப்பார்கள். ஆனால், பணம் செலவாகும்போது, கண்ணுக்குத் தெரியும் ஓட்டைகளை அடைப்பதில் மட்டும்தான் ஜாக்கிரதையாக இருப்பார்களே தவிர, சட்டென்று எழும் பிரச்னைகளிலும், லாபம் வரும் விஷயங்களிலும், மெதுவாக வியாபாரத்தை அரிக்கும் விஷயங்களிலும் ஜாக்கிரதையாக இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, வியாபாரத்தை நிலைநிறுத்தி லாபம் அள்ளித்தரும் நுணுக்கமான விஷயங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. ‘இது தெரிந்த விஷயம்தானே, இதெல்லாம் வியாபாரத்தைக் கவிழ்த்து விடுமா என்ன?’ என்று அக்கறை இல்லாமல், கவனக்குறைவாக இருந்து தோல்வி அடைந்த வியாபாரிகளுக்கும் பல ‘டிப்ஸ்’கள் தரப்பட்டுள்ளன. நாம் நினைக்கும் ‘அல்ப’ விஷயம் எப்படி வியாபாரத்தைச் சாய்த்துவிடும் என்பதை உணர்த்தும் விதமாக ஏராளமான வியாபார தந்திரங்கள் தரப்பட்டிருக்கின்றன. பல வியாபாரிகளின் அனுபவங்கள் நிறைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு. நாணயம் விகடனில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. பயப்படாமலும் ஆர்வத்துடனும் வியாபாரம் செய்ய ஊக்கம் தரும் நூலாக இது அமைந்திருக்கிறது.
RS. 50 More...by விகடன் பிரசுரம்
‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ - என அன்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால், பெண் சுதந்திரத்தை, பெண் உரிமையைக் கண்டு ஆனந்தக் கூத்தாடியிருப்பார். அந்தளவுக்கு இன்று எத்துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் அறிவிற் சிறந்தோங்கித் திகழ்கிறார்கள் பெண்கள். வீட்டில் இருந்தவாறே பெண்கள் பல வகையான சிறு தொழில்களையும் அதன் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அந்தத் தொழிலை பெரிய அளவிலும் கொண்டு சென்று சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் முடங்குவது மூடத்தனம், முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பக்குவப்பட்ட நிலையில்தான் இன்றைய மாதர் குலம் உள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைத் துச்சமென எண்ணித் தூக்கி எறிந்து, தங்களுக்குத் தெரிந்த தொழிலைத் தொடங்கி அதில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் பெண்கள், வீட்டில் வீணே கிடக்கவேண்டாம் என எண்ணி சிறுதொழில் தொடங்கி வெற்றிபெற்ற பெண்கள், தாங்கள் வெற்றிபெற்றது எப்படி என்பது பற்றிக் கூறிய கட்டுரைகள் அவள் விகடனில் தொடராக வெளிவந்தன. அதன் தொகுப்பு நூல் இது! இந்த நூலை வாசிக்கும் பெண்களுக்கு, தாங்களும் தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்பது திண்ணம்!
RS. 150 More...by அனிதா பட்
இன்றைய உலகில் பணம் நினைத்ததைச் செய்கிறது. அதுவே எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதுபோல் பணம் இந்த மனிதர்களைத் துரத்துகிறது. துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதனால்தான், ஏழைகளாக, நடுத்தரக் குடும்பத்தினராகப் பிறந்து திண்டாடும் ஒவ்வொருவரும் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணத்தைப் பொன்&பொருள்களைப் பெருக்கலாம், வசதியாக வாழலாம் என்று வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்படி, வாழ்க்கையில் பணப் பிரச்னைகளாலும், செலவுகள் அதிகரிப்பதாலும், விலைவாசிகள் உயர்வதாலும் சிரமத்தில் திண்டாடிக்கொண்டு இருப்பவர்களுக்கும், வசதியாக வாழ விரும்புகிறவர்களுக்கும் தங்களின் சின்னச் சின்ன சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கையை வசதியாக, பாதுகாப்பாக வாழ வழி வகைகளைச் சொல்கிறது இந்த நூல். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவது முதல் இக்கட்டில் காப்பாற்றும் மெடிக்ளைம் பாலிசி, எதிர்பாராத இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் இன்ஷ§ரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்க முதலீடுகள், பேப்பர் கோல்ட் ஆவணங்கள் வரை, பணத்தை பெருக்கும் வழிகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. அவற்றை, எல்லோரும் உணரும்வண்ணம் மிக எளிமையாகத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அனிதா பட். அவள் விகடனில் தொடராக வரும்போதே பலபேருக்குப் பயன் தந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், நிச்சயம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கவும் வழிகாட்டும்!
RS. 50 More...by வாசு கார்த்தி
எந்த ஒரு செயலாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. திட்டமிட்ட வாழ்வு தெவிட்டாத இன்பம் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் குடும்பம் நடத்தவே ஒவ்வொரு மாதமும் திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விலைவாசி, குடும்பச் சூழல், யூகிக்க முடியாத எதிர்பாராத செலவுகள் போன்றவற்றை வைத்துப் பார்த்தால், அவசரக் காலங்களில் கைகொடுக்கும் தோழனாக காப்பீட்டு பாலிசிகள் அமையும் என்பது நிதர்சனமான உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு என்பது மிக முக்கியம். அதிலும் குடும்ப வருமானத்துக்கு முழு ஆதாரமான நபர் என்றால், காப்பீடு அதிமுக்கியமானது. ஆனால், நூற்றுக்கணக்கில் குவிந்துகிடக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் எது அவசியம்? எந்தக் காப்பீடு எடுப்பது சிறந்தது? எந்த பாலிசி குறைந்த கவரேஜில் அதிக லாபம் தரும்? என்பன போன்ற சந்தேக முடிச்சுகள் நம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த முடிச்சுகளை அவிழ்க்கும்விதமாக பல தகவல்களை இந்த நூலின் ஆசிரியர் வாசுகார்த்தி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். ஒருவரின் மாதச் சம்பளத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு எப்படி காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; குடும்ப நலனுக்கு எந்த பாலிசி சிறந்தது; பாலிசிகளை எடுக்கும் வழிமுறைகள்; அவற்றுக்கான ப்ரீமியம் கட்டவேண்டிய கால அளவுகள்; கிளைம் பெறுவது; எந்த பாலிசி எப்படிப் பயன்படும்; அவற்றில் உள்ள ப்ளஸ் மைனஸ்; பாலிசிகள் முதலீடுகள் ஆகுமா? என்பது போன்ற நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை எளிமையான நடையில், சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சில சம்பவங்களின் உதாரணங்களோடு எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு. இதுவரை காப்பீடு பாலிசிகளின் சேவைகளையும் தேவைகளையும் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும்கூட, தங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.
RS. 50 More...by வ.நாகப்பன்
அற வழியில் பொருள் ஈட்டி இன்பம் காண்பது மனிதனின் இயல்பு. அறம், பொருள், இன்பம் மூன்றும் வாழ்க்கைக்கு முக்கியமானவை. இதில் ஒன்றில் முறையான திட்டமிடல் இல்லாவிட்டாலும் அடிப்படையான வாழ்வாதாரமே அசைவு கண்டுவிடும். முதலில் அறம் செய்தல். தான் தேர்ந்தெடுத்த தொழில், அல்லது திட்டம் ஆகியவற்றில் கண்ணியமாக செயலாற்றுவதும் அதன்வழியில் பொருளீட்டலும் அதை வீணாக செலவழிக்காமல் காப்பதினால் பிற்காலத்தில் இன்பமாய் வாழலாம். இதில்தான் சிக்கலே. இந்த சிக்கலுக்கான விடையாகவே அமைகிறது இந்த நூல். உழைப்பு, முறையான திட்டமிடல், சேமிப்பு, முதலீடு, காப்பு ஆகியவற்றில் அரசு, வங்கி அமைத்துக் கொடுத்திருக்கும் திட்டத்தில் சேர்ந்து தங்களது உழைப்பையும் சேமிப்பையும் காப்பீடுகளால் தங்களை காத்துக்கொள்ளும் வழிகள் ஏராளம் உண்டு. எவ்வளவு சேமிப்பது, எப்படித் திட்டமிடுவது? எங்கு முதலீடு செய்வது? கைநிறைய சம்பாதித்தும் சேமிப்பு இல்லை... சேமித்தாலும் அதை வெகு நாட்கள் காக்க முடிவதில்லை... இதற்கான திட்டங்கள் என்னென்ன? என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்க முடியுமா? கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா? தங்கம் ஒரு சேமிப்பா? ELSS திட்டத்தில் நாம் முதலீடு செய்வதால், என்ன ஆதாயம்? நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? `பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்றால் என்ன? இதுபோன்ற அநேக புதிய திட்டங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுக்கு தெளிவான விளக்கம் தருகிறது இந்த நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த `அறம் பொருள் இன்பம்' நூல் வடிவில், இப்போது உங்கள் கைகளில். உழைத்து, திட்டமிட்டு, சேமித்து, முதலீடு செய்து காப்பீட்டில் பதிவாகி ஆயுள் காக்கும் உறுதியான வாழ்வாதாரத்தைப்பெற இந்த நூல் நிச்சயம் கைகொடுக்கும்.
RS. 105 More...by தி.ரா.அருள்ராஜன்
"ஷேர் மார்க்கெட்டா? அதுல அதிகமா பணம் பண்ணலாமே... நானும் இப்போ அதை பத்தித் தெரிஞ்சிக்கத்தான் கிளாஸ் போறேன்..." என்று சொல்லி புறப்பட்டு, புறப்பட்ட வேகத்திலேயே திரும்பி, இருந்த பணத்தை இழந்து தவித்தோர் பலர். ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்வது என்பது காய்கறி, ஜவுளி, வீட்டு சாமான்களை விலைபேசி வாங்கும் சந்தை போல் அல்ல... பங்கு வர்த்தகம் - இது அனுபவம், திறமை, அறிவு, ஆலோசனை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. கற்றுக்கொள்ள வேண்டியதும் வழிமுறைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் கையாளுவதும் மிக மிக முக்கியம்... காரணம் இதற்கான கால நேரம் மிகவும் குறுகியது. முடிவுகள் உடனுக்குடன் எடுக்கக்கூடிய மன வலிமை வேண்டும்... இல்லாவிட்டால் டிரேடிங் பண்ணி பொருட்களை வாங்கி விற்பதில் பண இழப்பு அதிகமாவதோடு, விட்டதைப் பிடிக்க மீண்டும் மீண்டும் டிரேட் செய்து மொத்தத்தையும் இழந்து வெளியேறுவதில் உடல் வலி, மனச்சோர்வுதான் மிச்சமாகும். சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டும். டிரெண்ட் மாறும்போது அதற்கேற்ப டிரேடிங் முறைகளை மாற்றுபவர்கள் வெற்றிபெறும் டிரேடர்களாக முடியும் என்று டிரேட் செய்கிறவர்களுக்கு கருத்தாய் பாடம் கற்பிப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். தங்கள் வரவு, செலவு கணக்கு, மீதம் உள்ள பணம், மற்றும் டிவியில் உள்ள ஷேர் விவரங்கள், பங்குச் சந்தை நிலவரங்களின் நுணுக்கங்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு தங்களை அப்டேட் செய்துகொள்பவர்களே சிறந்த டிரேடர்கள். ‘டிரேடர்களே உஷார்’ எனும் தலைப்பில் நாணயம் விகடனில் வெளிவந்து டிரேடர்களை உஷார்படுத்திய தொடர் நூலாக்கம் பெற்றிருக்கிறது. டிரேடிங்கில் ஈடுபடுபவர்களுக்கு எல்லா வகையிலும் கைகொடுக்கும், வழிகாட்டும், இந்த நூல்!
RS. 77 More...by பேராசிரியர் ஸ்ரீராம்
சுய தொழில் செய்து அதில் முன்னேற்றம் காணத் துடிக்கும் இளைஞர்கள் காலம் இது. அதற்கான ஆயிரம் வாசல்கள் திறந்திருந்தாலும் அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டு பாதியில் திக்கித் திணறுவது அதிகம் நடக்கிறது. சிறியதோ பெரியதோ எந்த பிசினஸ் செய்வதானாலும் அதற்கு முன் யோசிக்கவும் வேண்டும், பிசினஸ் பற்றிய புரிதலும் வேண்டும். சொந்த பிசினஸ் மட்டுமல்ல பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ-வாக, பொது மேலாளராக, மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அதில் வெற்றியாளராகத் திகழ்ந்தால்தான் அடுத்தடுத்த உயர்நிலைக்குச் செல்லமுடியும். பிசினஸோ, மேலாண்மை செய்யும் பதவியோ அதில் பல ஸ்ட்ராடஜிக்களைக் கையாண்டால்தான் நீங்கள் உங்களை அதில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அதற்கான அனைத்து தந்திரங்களையும் நடைமுறைச் சம்பவங்களின் மூலம் எடுத்துச் சொல்லி விளக்குகிறது இந்த நூல். உலக அளவில் பரந்து விரிந்த பல நிறுவனங்கள் இன்று காணாமல் போனதற்குக் காரணம், கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளாததுதான் எனச் சொல்லும் நூலாசிரியர், சிறிய முதலீடு, பரந்த சிந்தனையின் மூலம் உலகம் முழுதும் வியாபித்திருக்கும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்களைச் சொல்லியிருக்கிறார். ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப்-களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மல்டி மில்லியனர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் அல்ல, தாங்கள் கண்டுபிடித்ததை, கால மாற்றத்துக்கு ஏற்ப வெற்றிகரமான பிசினஸ் ஆக்கிக்கொண்டார்கள். பிசினஸ் செய்வதற்கும் நிர்வாகப் பணியில் வெற்றி காண்பதற்கும் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கற்றுத் தரும் இந்த நூல் உங்களின் பணியிலும் பிசினஸிலும் உங்களை வெற்றியாளராக்கும்!
RS. 160 More...by பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
நீர் மேலாண்மையை சரியாகக் கையாளாவிட்டால் ஒரு நாட்டின் விவசாயத் தொழில்வளம் பாதிக்கப்படும். நிதி மேலாண்மை தெரியவில்லை என்றால் ஒரு குடும்பம் நலிவடைந்துவிடும். வரவுக்கு ஏற்ற செலவு என்று சொல்லும்போதே, வரவு வந்தால் அது செலவுக்குத்தான் என்ற அர்த்தமும் தொனிக்கிறது. ஆனால், வரவில் பாதியை சேமித்துவைக்கும் பழக்கம் பலருக்கு இருப்பதில்லை. பெரும்பாலான குடும்பத்தினர் ஒரு பண்டிகை வரப்போகிறது என்றால், அதற்கு ஒரு மாதம் முன்பே ‘எப்படியெல்லாம் செலவு செய்ய வேண்டும், எங்கெங்கு போக வேண்டும்’ என செலவு செய்யும் சிந்தனையிலேயே இருப்பார்கள். இந்த எண்ணம்தான் சேமிக்கும் பழக்கத்தைச் சிதைக்கிறது. ஒரு குடும்ப நிம்மதியின் அடித்தளம் அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலைதான். போதிய அளவுக்கு வருமானம் இருந்தும் அந்த வருமானத்தை சிலர் செலவு வழியில் மட்டும் திருப்பிவிடுவதால் பிரச்னைகள் ஏற்படுகின்றன. நிறைவான வாழ்க்கைக்கு மிகவும் தேவையான நிதியை நிர்வகிக்கும் உத்தி பற்றி தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர். நாணயம் விகடனில் நிதி மேலாண்மையின் அவசியத்தைப் பற்றி விழிப்புஉணர்வை ஏற்படுத்திட வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இதில் கூறப்பட்டுள்ள நிதி ஆலோசனைகளைக் கையாள்பவர்களுக்கு நிம்மதி நிச்சயம்.
RS. 109 More...