Cart is Empty
by முஹம்மத் யூனுஸ்
இந்தியா என்ற தேசம் தனக்குள் எத்தனையோ வரலாறுகளை புதைத்து வைத்திருக்கிறது. கட்டிடக்கலை, ஆட்சிக்கலை, போர்திறன், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பண்டைய இந்தியாவின் வரலாற்றை நாம் பாடமாகப் படித்திருக்கிறோம். ஆனால், தற்கால வரலாறுகள் குறிப்பாக அரசியல் வரலாற்றை நாம் அறிய முற்படும்போது, நமக்கு சரியாக தரவுகள் கிடைப்பதில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகான நம் நாட்டு அரசியலில் இன்றுவரை கோலோச்சி வருகிறது பண்டித நேருவின் குடும்பம். இது எப்படி சாத்தியம்? நேருவின் தொடர்ச்சியாக, இந்திராவின் வருகை இந்திய அரசியலை எப்படி மாற்றியது? அரசியலில் சரியான ஆலோசகர் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா? அப்படிப்பட்ட ஆலோசகர்தான் முஹம்மத் யூனுஸ். காந்தியுடனும், நேருவுடனும் பழகியவர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கானின் பிரதான உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். இந்திராவின் ஆலோசகர் என இந்திய விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும் நடந்த அரசியல் நிகழ்வுகளில் தொடர்புடையவர்தான் இந்நூலாசிரியர் முஹம்மத் யூனுஸ். இந்திய அரசியல் எத்தகைய தன்மைகொண்டது? அரசியலில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் சந்தர்ப்பவாதிகள் ஆகின்றனர்? நண்பர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறியது எப்படி? என்பதையெல்லாம் இந்நூலில் விவரித்து இந்தியாவின் தற்கால அரசியல் வரலாற்றை நமக்கு சுவைபட கூறியுள்ளார் நூலாசிரியர். விடுபட்ட அரசியல் உண்மைகள்தான் பல நேரங்களில் புதிய சரித்திரங்களை உருவாக்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட விடுபட்ட உண்மைகள் பல இந்நூலில் உலா வருகின்றன. இந்தியாவை நிர்மாணித்த சக்திகளுடன், உந்துசந்தியாக இருந்த நூலாசிரியர் தம்மையும் சேர்த்து இந்நூலை வடித்துள்ளார். இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பொன்னுசாமி, சுவை குன்றாமல் மூலத்தை அப்படியே தந்திருப்பதுதான் இந்நூலின் சிறப்பு. நம் தேசத்தின் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. பக்கத்தைப் புரட்டுங்கள், விடுபட்ட உண்மைகள் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
RS. 147 More...by ம.இராசசேகர தங்கமணி
நம்மை நாம் அறிந்துகொள்ள, நமது முன்னோர்களை அறிய, நம் சமூகத்தைத் தெரிந்துகொள்ள வரலாறு அவசியம். நம் தமிழ்ச்சமூகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறு சீரும் சிறப்பும் பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சித்திறனும், அவர்கள் வளர்த்த கலையும் இன்னும் உயிர்ப்போடு உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலம் பொற்காலமாக இருந்துள்ளது. சங்ககால பாண்டியர், இடைக்கால பாண்டியர், பிற்கால பாண்டியர் என பாண்டிய அரசுகள் தொன்மைமிக்க, பெரும் புகழ்மிக்க அரசாக இருந்துள்ளது. கல்வெட்டுக்களின் மூலமாகவும், பாறை ஓவியங்கள் வாயிலாகவும், நினைவுத் தூண்கள், காலத்தால் அழியாத கோயில்கள் வழியாகவும் பாண்டியர்களின் பெருமையை நாம் அறியலாம். தமிழகத்தில் பல்லாண்டு காலமாக ஆட்சி புரிந்த பாண்டியர்கள், வரலாற்றின் அரங்கில் இருந்து மறைக்க முடியாதவர்கள். வல்லமை வாய்ந்த பாண்டியர்களின் வரலாற்றை ஆதாரங்களுடன் தந்திருக்கிறார் நூலாசிரியர் ம.இராசசேகர தங்கமணி. இந்நூலில் பாண்டியர்கள் யார்? பாண்டியர் ஆட்சிகாலத்தில் தமிழகத்தின் நிலை என்ன? பாண்டியர்கள் புரிந்த போர்கள் எத்தகையவை? பாண்டியர் ஆட்சியில் நிலவிய அரசியல் சூழல் எப்படிப்பட்டது? என பல்வேறு தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறார் ஆசிரியர். பாண்டிய மன்னர்களின் வீரம், கொடை, காதல், வாழ்வு, சடங்குகள் என அத்தனை அம்சங்களும் ஒருசேர இந்நூலில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு. இதுதவிர பாண்டிய பேரரசு குறித்து அயல்நாட்டு வணிகர்கள், பயணிகள் குறிப்பாக மெகஸ்தனிஸ், மார்க்கோபோலோ, பிளினி போன்றவர்களின் குறிப்புகள் போன்றவற்றையும் இந்நூலில் காணலாம். ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாக இந்நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. வரலாற்றை வாசியுங்கள். பாண்டியரின் மெய்கீர்த்தியை அறியுங்கள்.
RS. 221 More...by வீ.பா.கணேசன்
இந்திய சினிமாவின் பிதாமகன் பால்கே என்றாலும் கூட, சத்யஜித் ரே-யின் அழகியல், வங்க மக்களின் அரசியல், பொருளாதார வாழ்க்கை மற்றும் அவர்களின் இலக்கியத்தின் மூலம் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியதை யாராலும் எளிதில் மறுக்க முடியாது. உலகம் முழுதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் இந்திய சினிமாவை அலசி ஆராயும்போது, அவர்களால் சத்யஜித் ரே-யை தவிர்த்துவிட்டு இந்திய சினிமாவை ஆராய முடியாது. புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் விபூதி பூஷணின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதே இவரது முதல் படம் பாதேர் பாஞ்சாலி. இந்தப் படம் உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றது. பாதேர் பாஞ்சாலி படத்தை தொடங்கியது முதலே அவருக்கு படத்தை முடிக்க முடியாமல் பெரும் பண நெருக்கடி. எல்லா இடங்களிலும் கடன் வாங்கியும் படம் முடியவில்லை. இறுதியில் மேற்கு வங்க அரசுதான் அவரது உதவிக்கு வந்தது. முதன் முறையாக ஒரு மாநில அரசு திரைப்படத் தயாரிப்பாளராக ஆனது. அந்த உதவிக்குக் காரணம் ‘பாதேர் பாஞ்சாலி' என்ற பெயர்தான். பாதேர் பாஞ்சாலி (Song of the road) என்றால் சாலையின் இசை! பாதேர் பாஞ்சாலியில் மெளனப் படங்களில் நடித்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்த 80 வயது பாட்டியை நடிக்க வைத்து அசத்தினார். அந்த மூதாட்டியும் நடிப்பில் சிகரம் தொட்டார். ரே தனது வாழ்க்கையில் குறைந்த அளவே படங்களை இயக்கினாலும் இன்றளவும் அவரது புகழ் உலகம் முழுதும் நிறைந்திருக்கிறது. இதற்கு சாட்சி இவரைத் தேடி ஆஸ்கர் விருது கல்கத்தாவுக்கே வந்தது. இவரது மறைவுக்குப் பின் இந்திய அரசு, சிறப்பு தபால் தலைகளை 1994-ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட்டது. 1998-ல் `பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
RS. 120 More...by சிவ. ஜெயராஜ்
தேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்ததிலும், சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கை உறுதி செய்ததிலும் வெளிப்படும் முரசொலி மாறனின் மன உறுதி மலைப்பைக் கொடுக்கக் கூடியது. ஆனால், அத்தனை சாதனைகளையும் அதிர்ந்துகூடப் பேசாமல் அமைதியாகவே செய்து வந்தார் அவர். கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்பையும், கட்சித் தொண்டர்களிடம் அன்பையும் காட்டிய மாறனின் இழப்பைக் காலங்கள் கடந்தும் நினைவுகூர்கின்றனர் தி.மு.கவினர். தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் ஆற்றிய பணிகளைப் பற்றி அறிந்தவர்கள், அவர் இழப்பை இந்திய அரசியலின் பேரிழப்பாக வர்ணிக்கின்றனர். ஆனால் அவரை அறிந்த மக்களுக்கு அவரைப் பற்றி முழுமையாக அறிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதிகம் பேசாத, தான் அதிகம் பேசப்படுவதை விரும்பாத ஒருவராக, தனது தாய்மாமனையே தாயாகக் கொண்ட அன்பு மனிதராக வாழ்ந்து மறைந்தவர் முரசொலி மாறன். அவரைப் பற்றிக் கூறும் அரசியல் ஆவணமாகவும் ஓர் அற்புத மனிதரின் வரலாறாகவும் இந்நூல் வெளிவருகிறது.
RS. 105 More...by உதயச்சந்திரன்
எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களின் முகங்களை மலரவைப்பதற்கான பணியாகும் என்று நன்கு உணர்ந்தவர் உதயச்சந்திரன் என்பதை, அவரின் பணி அனுபவங்களில் இருந்து அறிய முடிகிறது. தான் ஆட்சியராகப் பணிபுரிந்த மாவட்டங்களில் ஆற்றிய பணிகள் குறித்தும், தான் பொறுப்பேற்ற துறைகளில் எடுத்த முன்னெடுப்புப் பணிகள் பற்றியும் அதன்மூலமாக தனக்கேற்பட்ட அனுபவப் பாடங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். சிறந்த ஆளுமையாக அறியப்பட்ட உதயச்சந்திரனை சிறந்த எழுத்தாளராகவும் அறியச் செய்யும் இந்த 40 கட்டுரைகள் வெறும் அனுபவத்தை மட்டும் சொல்பவை அல்ல. கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு, அறிவியல் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் கட்டுரைகளாகும். ஏழை எளிய விவசாயிகளை வரிச் சுமையிலிருந்து மீட்ட தாமஸ் மன்ரோவின் கருணை, மதுரை மாநகரை மாற்றியமைத்த கலெக்டர் பிளாக்பர்ன், மகாத்மா காந்தியின் தமிழ் மொழிப்பற்று... என பல வரலாற்று நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளோடு முடிச்சுப்போட்டு நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அரசு ஊழியர்களைப் பற்றி பொதுமக்களிடம் இருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றிவிடும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் எப்படி கடமையுணர்வோடு நேர்மையாகப் பணியாற்றுகிறார்கள், அவர்களின் அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்பதை இந்த நூல்வழி அறிய முடிகிறது. ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுகிறவர்களுக்கு உந்து சக்தியாகவும், ஐ.ஏ.எஸ் பணியில் புதிதாக ஈடுபட்டிருப்போருக்கு வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்கும் என்பதில் வியப்பில்லை. மாபெரும் பதவிதனில் அமர்வது மக்களுக்காகவே என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
RS. 275 More...by எம்.எஸ்.விஸ்வநாதன்
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் வரிசையில் தனக்கெனத் தனியிடமும் தனித்திறனும் பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரையுலகை, தன் இனிமையான பாடல்களால் தாலாட்டியவர் எம்.எஸ்.வி. ஒருவரின் அனுபவம் பலருக்கும் சுவாரஸ்யமாகவும் பல புதிய வாழ்க்கைத் தத்துவங்களை உணர்த்துவதாகவும் அமையும். இசையையே தன் வாழ்வாகக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன், தன் இசை அனுபவ வாழ்க்கைப் பயணத்தை இசைக்கோட்டையாகக் கட்டியிருக்கிறார் இந்த நூலில். பள்ளி வயதிலேயே பாடத்தை விட இசை தன்னை ஈர்த்ததால் இசையோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவர் அவர். திரைப்படத் தயாரிப்பு அலுவலக உதவியாளராக, ஆர்கெஸ்ட்ரா உதவியாளராக.. இப்படி எந்தப் பணி செய்தபோதும் இசை மீதான தன் ஆர்வத்தை அடைகாத்து வந்ததால்தான் அவரால் இசையில் தனித்து நின்று சாதனை செய்ய முடிந்தது. தன் இளமைக் காலம் முதல், தான் இசைத் துறைக்கு வர எடுத்துக்கொண்ட முயற்சிகள், வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள், சினிமாவின் பெரும் ஆளுமைகளுடான தன் அனுபங்கள் பற்றியெல்லாம் `நான் ஒரு ரசிகன்' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில், 1993-94-ம் ஆண்டுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் எழுதிய தொடர் கட்டுரைகளே இப்போது நூலாகியிருக்கிறது. எம்.எஸ்.வி எனும் மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற சாமானியன், இசைத் துறையில் ஈடு இணையற்ற நிலைக்கு எப்படி உயர்ந்தார் என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. எம்.எஸ்.வியின் வாழ்க்கையை ரசிக்க வாருங்கள்...
RS. 120 More...