Cart is Empty
மனித வாழ்க்கை என்பது, உழைப்பது, பொருள் ஈட்டுவது, உண்டு உயிர் வாழ்வது என ஒரு இயந்திரம் போல இயங்கி முடிந்துவிடக்கூடியது அல்ல... பந்தம், பாசம், இன்பம், துன்பம் என்பது போன்று காதல், காமம் என்ற உணர்வுகளையும் உள்ளடக்கியது. அதனால்தான் அறத்துப்பால், பொருட்பால் என்ற அதிகாரங்களோடு வள்ளுவர் காமத்துப்பால் என்ற அதிகாரத்தையும் எழுதி வைத்தார். அந்தரங்கம் என்பது அந்தரங்கமாகவே இருந்த காலம் மாறி, இன்று ஆலோசனை பெறும் காலமாகிவிட்டது. பருவ வயதைத் தொட்டதுமே பாலுணர்வு பற்றிய பல சந்தேகங்கள், ஆண்&பெண் பேதமின்றி இருவருக்குமே எழுகின்றன. இந்தச் சந்தேகங்களின் ஆரம்பப் புள்ளி இளம் பருவம் என்றாலும், அது முதுமை வரை தொடரக் கூடியது. அப்படி, பல்வேறு பருவங்களில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் உண்மை சம்பவங்களை மேற்கோள் காட்டி இந்த நூலில் விளக்கம் சொல்லியிருக்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட், டாக்டர் டி.நாராயண ரெட்டி. ஆனந்த விகடன் இதழ்களில் ‘டூயட் கிளினிக்’ என்ற தலைப்பில், வாழ்வியல் கலையை போதிக்கும் அற்புதமான அந்தக் கட்டுரைகள் முதல் பாகமாக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இது ‘ட