Cart is Empty
by த. செந்தில் குமார்
நம் தமிழ் மரபின் தொன்மை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நாம் மறந்துவிட்டாலும் கீழடி போன்ற ஆய்வுகள் நம் தமிழ் இனத்தின் புகழை, பெருமையை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே எளிதில் கிடைத்துவிடுவதால், நம் தலைவர்களின் கடந்த காலப் போராட்டங்களை, நாட்டின் சரித்திரத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனினும் நம் பாரம்பர்யத்தை இளைஞர்கள் முற்றிலும் மறந்துவிடவில்லை என்பதை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டும் உள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகம் செய்த தியாகிகளை, தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தெடுத்த பழம்பெரும் இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தஞ்சைப் பெரிய கோயிலின் அறியப்படாத சரித்திரம், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம்... என இந்த நூலெங்கும் அரிய தகவல்களைத் தந்துள்ளார் நூலாசிரியர். உதாரணத்துக்கு, ‘தந்தை பெரியார் 1944-ல் புது இயக்கம் தொடங்கியபோது, என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது, சைவ சித்தாந்தக் கழகத்துக்கு அடிக்கடி பெரியார் சென்று வந்த தாக்கத்தால், அறிவார்ந்தவர்கள் கூடும் அவை என்று பொருள்படக்கூடிய ‘கழகம்' என்ற வார்த்தையை சைவ சித்தாந்தக் கழகத்திலிருந்து எடுத்து ‘திராவிடர் கழகம்' எனப் பெயர் சூட்டினார்' - போன்ற செய்திகளை இன்றைய தலைமுறைக்குத் தந்திருக்கிறார். அரிதினும் அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகம் இந்தப் புத்தகம்!
RS. 370 More...by ஆர்.பாலகிருஷ்ணன்
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போதும் இனிமையானவையே. தமிழில் படித்து தமிழைப் பிடித்து உயர்நிலைக்குச் சென்ற ஓர் உயர் அதிகாரி, இந்தத் தமிழ் நெடுஞ்சாலை முழுதும் தன் அனுபவங்களைப் பகிர்ந்தபடி பயணிக்கிறார். ஒவ்வோர் அத்தியாயமும் ஒவ்வொரு மைல் கல்லாக பல செய்திகளைத் தருகின்றன. தமிழ் வழியில் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி ஒடிசா மாநில அரசின் உயர் பொறுப்புகளிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் பொறுப்பிலும் இருந்து தம் கடமையைச் சரிவர செய்து பலரின் பாராட்டுப் பெற்றவரின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. ஆனந்த விகடனில் வெளிவந்த தமிழ் நெடுஞ்சாலைத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் வாக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, ‘கேரள மாநிலம் காக்கயம் அணைப்பகுதியில் ஒரே ஒருவரின் வாக்கைப் பதிவு செய்வதற்காக, அடர்ந்த காட்டுக்குள் ஆறு ஊழியர்கள் மின்னணு இயந்திரத்தைக் கொண்டு சென்று வாக்கைப் பதிவு செய்து வந்தனர்' என்ற செய்தி நமக்குக் காட்டுகிறது. இதுபோல பல சுவையான சம்பவங்களைத் தன் அனுபவங்களோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன். தகவல்கள் பல அறிய இனி தமிழ் நெடுஞ்சாலையில் பயணிப்போம் வாருங்கள்!
RS. 300 More...by பவா செல்லதுரை
மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் சக மனிதர்களின் சந்திப்புகளுமே அவனை வழிநடத்திச் செல்கின்றன. வாழ்வில் ஏதோ ஒரு சோதனையில், விரக்தியில் இருக்கும்போது அதிலிருந்து நம்மை நகர்த்திக்கொண்டு செல்வது எத்தனையோ நிகழ்வுகளும் சந்திக்கும் சக மனிதரின் சந்திப்பும்தான். ஆம், தனி மனிதனின் வாழ்வு சக மனிதர்கள் எனும் தொடர்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் பவா செல்லதுரை தான் சந்தித்த மனிதர்கள், எதிர்கொண்ட சூழ்நிலைகள், தன்னைச் சந்தித்தவர்கள் பகிர்ந்துகொண்ட செய்திகள், தன் நண்பர்களின் வாழ்க்கை ஆகியவற்றை சொல்வழிப் பயணமாக ஆனந்த விகடனில் எழுதினார். தனி மனிதர்களின் செய்திகள், நடந்த சம்பவங்கள் என்பதை மட்டும் சொல்லாமல், அந்த மனிதர்கள் வாழ்வு, நடந்த சம்பவங்கள் சமூகத்தோடு எப்படித் தொடர்புகொண்டுள்ளன, சமூகச் சீர்குலைவை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் பவா செல்லதுரை. பவா செல்லதுரையோடு சொல்வழிப் பயணத்தைத் தொடருங்கள்!
RS. 280 More...by வெ.நீலகண்டன்
பசிக்கு உணவு என்பது எப்படி அவசியமோ அப்படி நாவுக்கு ருசி அவசியமாகிறது. சுவையான உணவு வகைகள் எங்கு கிடைக்குமோ தேடிச்சென்று அங்கு ருசி பார்ப்பவர்கள் ஏராளம் உள்ளனர். சில உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு களின் மணமும் ருசியும் நம்மை அங்கேயே அழைத்துச் சென்றுவிடும். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு - இந்த ஆறு சுவைகளின் சங்கமம் நம் நாவுக்கு ருசியையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. மதுரை இட்லி, தஞ்சாவூர் சாம்பார், திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாட்டு மசாலா.. இப்படி தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், ஒவ்வொரு உணவு தயாரிப்புக்குப் பெயர்பெற்றவை. அப்படி தமிழ்நாடெங்கும் உள்ள பல உணவகங்களுக்கு நேரில் சென்று அங்கு தயாரிக்கப்படும் விதவிதமான உணவுகளைப் பற்றி ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. கூடவே உணவுப் பொருள்கள் பற்றிய சில சந்தேகங்களுக்கு உணவு நிபுணர்களின் விளக்கங்களும் இதில் உள்ளன. எந்த ஊரில் எந்த உணவு பிரசித்தம், அது எங்கு கிடைக்கும் என ஒவ்வொரு உணவகம் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளதால், வெளியூர்களுக்குச் செல்வதையே பணியாகக் கொண்டவர்களுக்கு இந்த நூல் பேருதவியாக இருக்கும். உணவுகளை ருசிக்க உள்ளே செல்லுங்கள்...
RS. 160 More...