Cart is Empty
by எம்.மரியபெல்சின்
இயற்கை இன்றி உயிர்கள் இல்லை... இயற்கையோடு ஒன்றி வாழும் சூழல்தான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும். உழைப்பில்லாமல் முன்னேறத் துடிக்கும் மனிதனின் பேராசையினால் விவசாய நிலம் சுருங்கி உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. காற்று மாசுபடுவது மட்டுமின்றி செயற்கை உரத்தால் நிலமும் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. இயற்கையைக் காப்பது குறித்த விழிப்புஉணர்வு பரவி வந்தாலும், இன்னும் ஒருசாரார் இயற்கை பேணல் குறித்து அறியாமலே இருக்கின்றனர். இயற்கை தந்த அனைத்து செடி-கொடிகளும் மனிதனுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன என்பதை இந்த நூலைப் படித்த பிறகு உணர்ந்துகொள்ளலாம். ‘நம்மைச் சுற்றி இருக்கும் சிறிய செடிகள் முதல் பெரிய மரங்கள் வரை அனைத்துமே நமக்கு வலி நீக்கும் நிவாரணியாகவும், பிணி போக்கும் மருந்தாகவும், சுவை தரும் உணவாகவும் இருக்கின்றன' எனும் ஆச்சரியமூட்டும் தகவல்களைக் கொடுக்கிறது இந்த நூல். கண் எரிச்சலை நீக்கும் பொன்னாங்கண்ணி, வயிற்று வலியை நீக்கும் புதினா, பல், எலும்புகளை உறுதியாக்கும் கறிவேப்பிலை, கரு உண்டாக உதவும் வில்வம், காமாலையை விரட்டும் மூக்கிரட்டை, தோல் நோய்களைப் போக்கும் பூவரசு, சளியை விரட்டும் தூதுவளை... இப்படி எந்தெந்த மூலிகைகளில் என்னென்ன நோய் குணமாகும் என்பதை எளிமையாக விளக்கும் நூல் இது. இயற்கையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைப் பேணிக் காத்தால், வளமாக நலமாக வாழலாம்.
RS. 125 More...by வெ.தமிழழகன்
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் செடிகள், மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவர் போன்றது. ஆனால், நாம் நம் பக்கத்திலேயே மருத்துவரை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, கிராமப்புறங்களில் அடிக்கடி தேள்கடிச் சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. தேள்கடி விஷத்துக்கு, துளசி இலையை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும், கடித்த இடத்தில் அழுத்தித் தேய்க்கவும் தேள்விஷம் உடனே முறிந்துவிடும் என்கிறது சித்த மருத்துவம். இப்படி இயற்கையிலேயே நம் அருகிலேயே மருத்துவ முறை இருப்பதை நாம் மறந்துவிட்டோம். இப்படிப்பட்ட நம் பாரம்பர்ய மருத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த நூல். நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கைத் தாவரங்கள், மரங்கள், காய், கனி, இஞ்சி, மிளகு போன்றவைகளில் என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்றும் மருந்து செய்முறைகளையும் கூறுகிறது இந்த நூல். உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க இந்த நூல் ஆகச்சிறந்த வழிகாட்டி!
RS. 150 More...by ரேகா சுதர்சன்
பெண்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், இன்பமான உணர்வையும் தரக்கூடியது தாய்மை அடையும் தருணம்தான். ஆனால், அந்தப் பெண்கள் கர்ப்ப காலம் முதல், பிரசவ காலம் வரை உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது! ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றாலும்கூட, கரு வளர்ச்சியின் போது ஏற்படக்கூடிய உடல் உபாதைகளுக்கு இன்றும் உதவக்கூடியது அந்தக்கால பாட்டி வைத்தியம்தான். அந்தவகையில், கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய பாரம்பரிய வழிமுறைகளோடு பல பயிற்சிகளையும் விளக்கி, இந்த நூலில் நம்பிக்கை தரும் விதத்தில் எழுதியிருக்கிறார் ரேகா சுதர்சன். மனநல ஆலோசகரும், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியருமான ரேகா சுதர்சன், அவள் விகடன் இதழ்களில் எழுதிய அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். கர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சிசேரியன் எப்போது அவசியம், சுகப்பிரசவம் எப்படி உடல் ரீதியாக சுகம் தரும் என்பது போன்ற தகவல்களும், பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. பிரசவ காலத்தைப் பற்றிய பயம் தேவையற்றது என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள ஒரே மருந்து மன வலிமைதான் என்பதையும், அந்த மன வலிமையை ஏற்படுத்திக் கொள்ள எளிய வழிமுறைகளையும் இந்த நூலின் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும். மொத்தத்தில் சுகப்பிரசவத்துக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக தயார்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் வழிகாட்டி இந்த நூல்.
RS. 63 More...by சி.அண்ணாமலை
‘வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி!’ என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாம் நாம் இயல்பாகச் செய்யக்கூடிய சாதாரண வேலைகள்தான். ஆனால் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வேலைகளை எல்லாம் இயந்திரத்திடம் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நடப்பது என்பதுகூட இன்று உடற்பயிற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் நடந்து செல்வதுகூட அவமானமாகப் பார்க்கப் படுகிறது. நடந்து செல்பவனின் பொருளாதாரத்தை அளவிடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள கடன் வாங்கியாவது வாகனத்தை வாங்கிவிடுகிறோம். இது வர்த்தக நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்ற போலி பிம்பம். அதை உண்மை என நம்பி நாமும் வீழ்ந்துவிடுகிறோம். இந்த இயந்திர வாழ்க்கை நமக்குப் பல்வேறு நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. நமது உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு எளிமையான வழி யோகாதான். உடற்பயிற்சி செய்வதால் உடல் நலம் மட்டும் பாதுகாக்கப்படும். ஆனால், முறையான யோகாவின் மூலம் உடல் நலத்தோடு மன நலமும் பேணப்படும். நம்முடைய உடல் நலக் கேட்டுக்கு மன நலம் மறைமுகமாக காரணியாக இருக்கிறது. யோகா என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்ட ஒரு, மன மற்றும் உடல் பயிற்சிக் கலை. இந்தக் கலைக்குள் நுழைவதற்கான ஒரு நுழைவு வாயில்தான் இந்த நூல். யோகாவின் முக்கியத்துவம், யோகாவை நாம் ஏன் செய்ய வேண்டும், யோகா செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், எந்தப் பயிற்சியை எப்படிச் செய்தால் என்ன மாதிரியான நன்மைகள் வரும் என்பது போன்ற பல தகவல்கள் அனுபவபூர்வமாக இதில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிப்பதன் மூலமாக யோகா குறித்த அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படைத் தகவல்கள் உங்களின் அடுத்தகட்ட தேடலுக்கான ஒரு வழிகாட்டியாக அமையும். இந்த நூலை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் அனைத்தும் தீர்ந்திருக்கும்!
RS. 60 More...by வெ.தமிழழகன்
கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகள் மற்றும் கிழங்குகளின் தன்மையும் இத்தகையதே. சில கீரைகள் உடலுக்கு குளிர்ச்சியையும், சில சூட்டையும் தரவல்லது. எது எப்படி இருந்தாலும் கீரைகளும், கிழங்குகளும் ஊட்டச் சத்துக்களை அள்ளித் தருபவை; வைட்டமின்களை அளித்து நோய்களைத் தீர்க்கும் வல்லமை படைத்தவை. உதாரணமாக, அகத்திக்கீரை வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்தது. இதைச் சாப்பிடுவதால் ஜலதோஷம், பித்தம் நீங்கும் என்கிறார் நூலாசிரியர் வெ.தமிழழகன். அடிக்கடி பேதியானால், சிறுநீரகக் கோளாறு இருந்தால், பித்தப் பையில் கல் உண்டானால், கருப்பையில் கட்டி இருந்தால் பொதுவாகக் கீரைகளைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரையை உண்ணக் கூடாது. வயிற்று வலி இருக்கும்போது புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்க்காமல் கீரைகளைச் சமைத்து உண்ண வேண்டும். இதய நோயாளிகள் கட்டாயம் முருங்கை கீரையைத் தவிர்க்கவும் போன்ற, நமக்குத் தெரிந்த கீரைகள் பற்றி தெரியாத தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அருகம்புல் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். அருகம்புல் கிழங்கைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அருகம்புல் கிழங்கு உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தரும் சக்தி கொண்டது என்பது புதிய விஷயம். பன்றி மொந்தன் கிழங்கு என்று ஒரு கிழங்கு இருக்கிறது. இதன் பயன் என்ன? இதைப் போன்று எத்தனையோ கிழங்குகளைப் பற்றியும், கீரைகளைப் பற்றியும் பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கின்றன. எந்தக் கீரையை எந்தப் பருவத்தில் சாப்பிடலாம், எந்தக் கீரையுடன் எதைச் சேர்த்தால் அதிகப் பயன் தரும் போன்றவற்றைப் பற்றி சுவைக்கச் சுவைக்க ‘டிப்ஸ்’ தருகிறார் நூலாசிரியர். உடல் மேல் அக்கறை கொண்டவர்கள் படித்துப் பயன் பெறக்கூடிய நூல் இது.
RS. 77 More...by அமுதவன்
இன்று வீட்டுக்கு ஒரு ‘சர்க்கரை நோயாளி’ இருப்பது சகஜமாகிவிட்டது. ‘டயாபடீஸ்’ என்ற வார்த்தையை அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இந்த நோய் வந்தால், பல தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும் என மக்கள் பதற்றத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு வேண்டும்; இனிப்பு கூடவே கூடாது; தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்... இப்படி சர்க்கரை நோய் பற்றி பரவலாக பல கருத்துகள் உலா வருகின்றன. சர்க்கரை நோய் என்பது என்ன? அது எதனால் வருகிறது? வந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? சர்க்கரை நோயை எந்தெந்த மருத்துவ முறைகளால் கட்டுப்படுத்தலாம்? என்ன மாதிரியான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளலாம்? போன்ற கேள்விகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் விடை சொல்லி வழிகாட்டுகிறார் நூலாசிரியர் அமுதவன். இந்த நூல், நோய் குறித்த பயத்தை விரட்டுகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளாலும், அக்குபஞ்சர், அக்குபிரஷர், ரெய்கி, பிராணிக்&ஹீலிங் போன்ற சிகிச்சைகள் மற்றும் யோகா, தியானம், நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, முத்திரைகள் போன்ற பயிற்சி முறைகளாலும், மாத்திரைகளை
RS. 67 More...by டாக்டர் எஸ்.சுஜாதா ஜோசப்
தற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை உணவும் மூலிகையுமே உதவுகின்றன. இந்த விந்தையை ஆற்றுகிறது இயற்கை. இந்த ரகசியத்தை சித்த மருத்துவம் நன்கு உணர்ந்திருக்கிறது. சித்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களையே உபயோகிக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களான எலுமிச்சம்பழம், அன்னாசிப் பழம் போன்ற எளிய உணவுப் பொருட்களே மருந்தாகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, படர் தாமரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு, அல்சர், மஞ்சள் காமாலை, ஆண்மைப் பிரச்னை, மூச்சுத் திணறல்... போன்ற அனேக வியாதிகளுக்கு எளிய சித்த மருத்துவ முறைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் சுஜாதா ஜோசப். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மூலிகைகளைத் தவிர மூலிகைகளைக் கொண்டு உடலில் பற்றுப் போடுதல், தோலின் மேலே களிம்புபோல வைத்துக் கட்டுதல் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். சுவையைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் எளிய உணவுப் பொருட்களிலிருந்து ஆரோக்கியத்தை எளிதாகவும் செலவில்லாமலும் பெறலாம். மேலும், சித்த மருந்துப் பொருட்களைச் சுவைத்தும் சாப்பிடலாம். டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
RS. 84 More...by வெ.தமிழழகன்
தூய்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது பால். தாய்ப்பாலைப் போன்று தூய்மையானது என்று பாலின் மகத்துவத்தை அறிந்திருக்கிறோம். உடல் வளர்ச்சிக்கும், உள்ளத்து எழுச்சிக்கும் பால் வகைகள் உதவிபுரிகின்றன. பால் என்றால் தாய்ப்பால், மாட்டுப்பால், ஆட்டுப்பால் மட்டுமா? கோதுமைப்பால், நிலக்கடலைப்பால், சூரியகாந்திப்பால், அபிஷேகப்பால், தேங்காய் பால், நவதானியப்பால்... என வகை வகையான பால் வகைகள் நமக்கு நன்மைபுரிகின்றன. மரங்களில் இருந்து வடியும் பால் வகைகளும் மனிதருக்கு நன்மை பயக்கின்றன. பால் தரும் மரங்களில் இருவகை உண்டு. பருகத்தக்க பால் தரும் மரம். பருகத் தகாத பால் தரும் மரம். தென் அமெரிக்காவில் ஒரு குன்றின் பாகத்தில் பால் மரம் என்ற பெயர்கொண்ட மரம் ஒன்று உள்ளதாம். இம்மரம் வளரும் இடத்தில் மழை வராது என்பர். வேர்கள் தடித்துப் பாறைகள் நடுவே நுழைந்திருக்கும். வானுயர ஓங்கி வளரும். இலைகள் வாடி வதங்கியே தோன்றும், இம்மரத்தின் அடிப்பாகத்தைக் கீறினால் நாவிற்கினிய பால் வடியும். சூரியோதயத்தில் அதிகமாகப் பால் கிடைக்கும். இதுபோன்ற பால் வகைகளின் பயன்கள் என்ன? எந்தப் பால் எந்த நோயைத் தீர்க்கும் என்பன போன்ற எண்ணற்ற தகவல்களை நூலாசிரியர் நமக்குத் தருகிறார். சுவைக்கு எடுத்துக்காட்டாகவும், சுறுசுறுப்புக்கு அடையாளமாகவும் திகழும் தேன் என்னும் அமுதத்தின் அற்புதங்களையும் இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். நூற்றுக்கணக்கான தேன் வகைகளையும், அவற்றைப் பயன்படுத்தும் விதத்தினையும், பயன்களையும் நமக்குத் தருகிறது இந்த நூல். ‘பால்வகை மருத்துவமும், தேன் வகை மகத்துவமும்’ என்ற இந்த நூல் உங்கள் கையில் இப்போது தவழ்கிறது. இனி நீங்கள் மருத்துவர் வீட்டுக்கதவைத் தட்டத் தேவையில்லை என்பதை உணரப்போகிறீர்கள்... பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 84 More...by மருத்துவர் கு.சிவராமன்
நாற்பது வயது என்பது மனித வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலே, சிலருக்கு இதுவரை வாழ்க்கைக்காகப் போராடிய சலிப்பும் ஒருவித ஆயாசமும் அவ்வப்போது தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்துக்காக ஓயாமல் ஓடிய களைப்பும் இந்த வயதில் எட்டிப்பார்க்கும். நமது சுற்றுப்புறச் சூழல் சிறுவர்கள் உள்பட அனைவரையும் நோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், நாற்பது வயது தொடங்கியவுடன் உடல் ஆரோக்கிய அக்கறைதான் எல்லோருக்கும் முதலில் தோன்றுகிறது. முழு உடல் பரிசோதனை, அதுவும் மாதத்துக்கொரு பரிசோதனை என்று நம்மை மருத்துவமனைகளையும் மருந்துகளையும் நாடவைக்கிறது நாற்பது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘இன்றைய மருத்துவ உலகம் வாழ்வியல் நோய்களுக்கான காரணிகளில், குறிப்பாய் நாற்பதுகளில் குடியேறும் ரத்த சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய், மாதவிடாய் முடிவில் ஏற்படும் நலமின்மை, மாரடைப்பு இவை அனைத்திற்கும் இந்தப் பரபரப்பான, சற்றுக் கோபம் தூக்கலான மனம் ஒரு மிக முக்கிய காரணம்’ எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் சித்த மருத்துவர் சிவராமன். எனவே, நமது சூழலை, சுற்றங்களை ரசனையோடும் அன்பாகவும் அணுகினால் வாழ்க்கையை இனிமையாக வாழலாம்!
RS. 200 More...by மருத்துவர் கு.சிவராமன்
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. ஆனால், இப்போது மாறியுள்ள உணவு முறை நாவின் சுவைக்காக மட்டுமே ஒழிய, அதில் எந்த மருத்துவ குணமும் இல்லை. காய்கறிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்கிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன். சமையலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களும், குளிர்சாதன பெட்டிகளும் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவை என எச்சரிக்கிறார் நூலாசிரியர். ஆனால், அவசர உலகில் வாழ்பவர்களுக்கு மாற்றுஉணவு என்ன இருக்கிறது?. ‘கைப் பையில் கொஞ்சம் சிவப்-பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்புத் தயார். கால் மணி நேரம் ஊற-வைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்... உடனடியாகச் செரிக்கக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம்’ என இப்படியாக மனித இனம் நோயில்லாமல் வாழ நூறு யோசனைகளை இந்த நூலில் விவரிக்கிறார். இதுதவிர எந்தக் காய்கறிகளை எப்படிப் பயன்படுத்தினால் சக்தி கிடைக்கும்? குதிரைவாலி, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்களால் ஏற்படும் பயன்கள் என்ன? அவை மனிதனுக்கு தரும் சத்து எத்தகையது..? அத்தனை அம்சங்களையும் தருகிறார். ஆனந்த விகடனில் வந்த தொடர் இப்போது நூல் வடிவில். ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் மனிதனை காக்க வந்த ஒரு ஆயுதம். வெளிச்சம் இல்லாத வீட்டில் வைத்தியன் நுழைவான் என்பது முதுமொழி. ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் இல்லாத வீட்டிலும் மருத்துவன் நுழைவான் என்பது புதுமொழி எனக் கொள்ளும் அளவுக்கு இதில் ஆரோக்கியத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. படித்துப் பாருங்கள்... ஆறாம் திணை மனித சமுதாயத்துக்கு நல்ல துணை என்பது புரியும்.
RS. 119 More...