Cart is Empty
by சி.கலா சின்னத்துரை
“அரசுப் பணியையே வாழ்க்கை இலக்காகக் கொண்ட இளைய தலைமுறையினர், மிகுந்த தேடுதலோடும் விடாமுயற்சியோடும் படிக்க வேண்டும். தேர்வு ஆணையத் தேர்வுகள் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி மிகுந்த கவனத்தோடு நடத்தப்படுவதால், உரிய முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அரசுப் பணி நிச்சயம் உங்கள் கைவசமாகும்!” & தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் வார்த்திருக்கும் நம்பிக்கை இது. பல்லாயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகள் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. அரசுப் பணியை லட்சியக் கனவாகக் கொண்ட இளைய தலைமுறையினர் போட்டித் தேர்வுகளில் வெல்வதற்காக பலவிதங்களிலும் போராடுகிறார்கள். விதவிதமான பயிற்சிப் புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கிறார்கள். ஆனாலும், ‘‘நாங்கள் படித்த புத்தகங்களில் இருந்து சில கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன... அதனால், தேர்வை சரியாக எழுத முடியவில்லை!” என ஏமாற்றத்தோடு பலரும் வேதனைப்படுகிறார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக சரியான திட்டமிடலே முக்கியம். எல்லாவற்றையும் கற்றறிவது நல்லதுதான். ஆனாலும், போட்டித் தேர்வுகளில் எத்தகைய கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள் எவை, கேட்பதற்கான சாத்தியம் மிகுந்த கேள்விகள் எவை, தேர்வுக் குழுவால் கவனிக்கப்படும் விஷயங்கள் எவை, எத்தகைய பாடங்களில் இருந்து தேர்வுக் குழு அதிகக் கேள்விகளைத் தேர்ந்தெடுக்கிறது என்ற விவரங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, அதன்படியான தேடுதலோடு படிப்பதே போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள சரியான அணுகுமுறையாக இருக்கும். சமீபத்திய போட்டித் தேர்வுகள் பலவற்றையும் கூர்ந்து பார்க்கையில் அரசுப் பாடத் திட்டங்களில் இருந்தே அதிகக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறிப்பாக 6&ம் வகுப்பில் இருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அடுத்தடுத்து வரும் தேர்வுகளிலும் பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அரசுத் தேர்வு ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தின் அத்தனை விதமான கேள்வி வாய்ப்புகளையும் கண்டறிந்து அதன் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. அறிவியல் பிரிவில் பாடவாரியாகக் கேள்விகளை மிக எளிதாகப் பிரித்துக் கொடுத்து, அதற்கான பதில்களையும் தொகுத்திருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. ஒரே விஷயத்தை எப்படி எல்லாம் விதவிதமாக மாற்றி கேள்வியாக்குவார்கள் என்பதையும் உதாரண வடிவில் இந்த நூல் விளக்குகிறது. தேர்வு நுட்பம் அறிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினா & விடைகளும், பயிற்சித்தாள்களும் கொண்ட இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO உள்ளிட்ட எல்லாவிதமான போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்!
RS. 133 More...by விகடன் பிரசுரம்
‘விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டு அறிவுலகத்தின் திறவுகோலாக விகடன் இயர்புக் வெளியிடப்பட்டிருக்கிறது. தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கீழடி அகழாய்வு, தமிழ் எழுத்துரு பற்றிய ஆய்வுக் கட்டுரை கல் முதல் கணினி வரை, எம்.ஜி.ஆர். என்சைக்ளோபீடியா, இந்திரா இதிகாசம், ஜெயா கிராஃபி, மத்திய - மாநில அரசுகளின் புதிய திட்டங்கள், கொள்கைகள், முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள் என அனைத்தும் கொண்ட தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது. இவற்றோடு, ஐ.ஏ.எஸ். தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘தப்பான கற்பிதங்களில் இருந்து தப்பிப்போம்’ என்ற கட்டுரை, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பொது ஆங்கிலம், சர்வதேச அளவிலான விருதுகள், இந்திய, தமிழக விருது விவரங்கள், 2016 நோபல் பரிசுகள், ஐந்து நூல்கள் பற்றிய அலசல், 2016-ல் வெளியான புதிய புத்தகங்கள், இந்திய வரலாறு - தகவல் தொகுப்பு, உடற்செயலியல் தகவல் தொகுப்பு, தொல்காப்பியத் துளிகள், மின் ஆளுகை, அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகள் பங்கு... என இதில் இல்லாதது எதுவுமில்லை என வியக்கும் வகையில் அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது இந்த இயர்புக்! மேலும், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் விகடன் வழிகாட்டல் நிகழ்ச்சியின் விவரங்களும், வெற்றியாளர்கள் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வு வினா விடை களஞ்சியமும் இலவச இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கான ஆகச்சிறந்த வழிகாட்டிதான் விகடன் இயர்புக்!
RS. 126 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்தத் தேர்வை ஒரு காலத்தில் அதிக அளவில் எழுதுவார்கள். ஆனால் இப்போது பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இந்த தேர்வுக்கான வினாத்தாள்களின் தரமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வுப் பாடத்திட்டப்படி படித்தாலும், பொது அறிவு பாடங்களை மிகவும் நுணுக்கமாக, ஆழமாகப் படிக்க வேண்டி இருக்கிறது. தேர்வுப் பாடத்தை நூறு சதவிகிதம் படித்திருந்தாலும் தேர்வு எழுதும்போது ஒருவித பதற்றம் ஏற்பட்டு வெற்றியை கோட்டை விட்டவர்கள் ஏராளம். படித்த பாடத்தை கேள்விக்கு தகுந்தாற்போல் ஞாபகப்படுத்தி பார்ப்பது, மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது பயத்தைப் போக்கி வெற்றியை எளிதாக்கும். அதிலும் முந்தைய டி.என்.பி.எஸ்.சி வினாக்களுக்கு திரும்பத் திரும்ப விடை எழுதிப் பார்க்கும்போது, வினாக்களின் அமைப்பு, அதன் போக்குகளை நன்கு புரிந்துகொண்டு குழப்பம் இல்லாமல் விடையளிக்க பயிற்சி கிடைக்கும். அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சொல்லும் முக்கிய ரகசியம் ‘மாதிரித் தேர்வுகளை எழுதிப் பாருங்கள்’ என்பதுதான். அதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் தந்திருக்கிறோம். அதற்கான விடைகளையும் தேவையான இடங்களில் விளக்கங்களையும் கொடுத்துள்ளோம். இந்த வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி எடுக்கும்போது, தேர்வு எழுதும் நேர நிர்வாகத்தை கணித்து தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதுபோல உங்களின் தேர்வு திறத்தை நீங்களே சோதித்து, வெற்றிபெற இந்த டி.என்.பி.எஸ்.சி. ஒரிஜினல் வினாத்தாள் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பட்டப்படிப்புத் தரத்தில் பல்வேறு துறைகளில் 2014, 2015, 2016 (ஜனவரி வரை) ஆண்டுகளில் கேட்கப்பட்ட 2,350 வினாக்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன. பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!
RS. 263 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.நடராஜ சுப்பிரமணியன்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகளோடு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.
RS. 245 More...by டாக்டர் சங்கர சரவணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் நான்காவதாக வெளிவரும் நூல் இது. வி.ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ். வரையிலான தேர்வுகளில் பொருளாதாரப் பாடத்தில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் கேள்விகள் கேட்கப்படும். பொருளாதாரப் பாடத்தை எடுத்துப் படித்தவர்கள் எளிதில் விடையளித்து விடுவார்கள். ஆனால், மற்ற பாடங்களை எடுத்துப் படித்தவர்களுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், சரியான புரிதல் இல்லாததே. அதைப்போக்கும் விதமாக நாணயம் விகடனில் தொடராக வந்தவைதான் இந்தக் கட்டுரைகள். ரூபாய் 1,2,3 என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து எளிமையாகக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். பொருளாதாரப் பாடத்தலைப்புகளில் இருந்து போட்டித் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளோடு விளக்கங்களையும் தந்துள்ளது சிறப்பம்சம். பொருளாதாரப் பாடத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை ‘ஒரு வரிக்குறிப்புகள்’ என்ற தலைப்பில் நூலின் இறுதியில் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த நூலைப் படித்து முடித்தவுடன், பொருளாதாரப் பாடத்தில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்பது நிச்சயம்.
RS. 84 More...by எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார்
1800-களில் நடந்த தொழிற்புரட்சிக்குப் பிறகு, இங்கிலாந்து பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாற்றியது. ஆம், ஆங்கிலம் உலக மொழியானது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் இல்லாத இடமே இல்லை. தொடர்புமொழியில் ஆங்கிலமே முதலிடம் வகிக்கிறது. ஆக, ஆங்கிலம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதொன்று என்ற நிலையில் அதை எளிமையாக கற்க இந்த நூலில் வழிகாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார். முக்கிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணத்தோடு ஆங்கிலம் பேசும் முறை என ஆங்கிலப்பயிற்சி முறைகள் அற்புதமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப்படிக்கும் வாசகர் நிச்சயம் ஆங்கில மேதாவியாக தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உறுதி. தமிழ் மூலம் ஆங்கிலத்தைக் கற்று, தகவல் தொடர்பில் அசத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
RS. 322 More...by டாக்டர் க.விஜயகார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.
சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும்? உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம்! இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி? ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும்? எளிதாக எப்படி விடையளிக்கலாம்?’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.
RS. 63 More...by டாக்டர் சங்கர சரவணன்
மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் அறிந்த எளிமையான பாடங்கள்தான் என்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்விலும், TNPSC தேர்விலும் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அதிக நுட்பமும் நுணுக்கமும் வாய்ந்தவை. UPSC மற்றும் TNPSC பாடத்திட்ட அடிப்படையில் பள்ளிப் பாட நூல் முதல் பல்கலைக்கழகப் பாட நூல்கள் வரை பல நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வு அகில இந்திய அளவிலும் TNPSC தேர்வு மாநில அளவிலும் நடைபெறுவதால் அவற்றில் கேட்கப்படும் கேள்விகளின் தன்மையும் தரமும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்றபோதிலும் நூல் ஆசிரியர் இரண்டு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் அனுபவத்தால் இரண்டையும் இணைக்க முயன்றுள்ளார். UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி&பதில்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தந்து விளக்கங்களைத் தமிழ் மொழியில் தந்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். நமது நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு போட்டித் தேர்வுக்கும் உபயோகமான இந்த நூல் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!
RS. 137 More...by ஸ்ரீநிவாஸ் பிரபு
“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் கல்வி நிலை. சுழன்றுகொண்டு இருக்கும் உலகில், நாமும் தினம் தினம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஓடுபவர்களின் வெற்றி இலக்கு என்ன, நல்லதொரு பணி; அதுவும் அரசுப் பணி. இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற நெக்குருகிப் படித்தாலும், ‘முடிவில் பாஸா... ஃபெயிலா? அதைச் சொல்லு’ என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் அதிவிரைவான எதிர்பார்ப்பு. இதை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தேர்வு என்றால் என்ன, எந்தெந்தத் துறை எப்படியெல்லாம் போட்டித் தேர்வை நடத்துகின்றது, தேர்வை சந்திக்கும் முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை, எந்தெந்தப் பாடப் பிரிவின் கீழ் இந்தப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்கிற விவரங்களின் தொகுப்புதான் இந்த நூல். மேலும், பல்வேறு தேர்வுக் குறிப்புகளுடன், போட்டித் தேர்வை GENERAL INTELLIGENCE, GENERAL LANGUAGE, NUMERICAL ABILITY, GENERAL KNOWLEDGE என, நான்கு பிரிவுகளாகப் பிரித்து அது அதற்கான விடைகளையும் கொடுத்து, உங்களைப் பயிற்சிக் களத்திலும் இறக்கியுள்ளார் நூலாசிரியர். அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு பாடத் திட்டம் தொடர்பான நுணுக்கமான சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டாலே வெற்றி நம்மை தொற்றிக்கொள்ளும். முடிந்தவரை முயற்சிப்பதைவிட, முடிக்கும்வரை முயற்சிப்பதே சிறப்பு!
RS. 88 More...