Cart is Empty
இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக இருப்பதற்கும் இன்னல்கள் நிறைந்தவையாக அமைவதற்கும் இந்தப் பருவத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள்தான் காரணம். டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது சில சந்தேகங்கள் சங்கடங்கள் எழும். அந்த நேரத்தில் என்ன செய்வது யாரிடம் ஆலோசனை கேட்பது என்று யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படிக் கேட்பதனால் தரம் தாழ்ந்துவிடுவோமோ, நம்மைத் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற ஒரு எண்ணமும் கூடவே எழுவது சகஜம்தான். இப்படி சங்கோஜப்படும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஆனந்த விகடன் இதழ்களில் ‘டீன் கொஸ்டீன்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி_பதில் பகுதி. இந்த நூலில், இளைஞர்களின் மனதில் எழும் கல்வி, உளவியல், உடற்கூறு, சட்டம் ஒழுங்கு என பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களே வழங்கிய ஆலோசனைகள், இளம் பருவத்தினருக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெற