Cart is Empty
by சி.கலா சின்னத்துரை
இன்றைய இளைஞர்கள் சவாலான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பு என்பது இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கனவாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஊதியத்தை எந்த அளவுக்குக் கொட்டிக் கொடுத்தாலும் அரசுப் பணி மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கில் இருக்கும் அரசுப் பணிகளுக்காக லட்சக்கணக்கிலான இளைஞர்கள் போட்டி போட்டு தேர்வு எழுதுகிறார்கள். மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்து மிகச் சிலரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நம் அரசு, அதற்கேற்றபடி கேள்விகளைக் கேட்கும் விதத்திலும், தேர்ந்தெடுக்கும் பக்குவத்திலும் மிகுந்த கவனம் காட்டுகிறது. வெறுமனே மனப்பாடம் செய்துகொண்டு தேர்வுக்குப் போய் மதிப்பெண் பெறுவது இனி சாத்தியம் இல்லாதது. தேர்வுத்துறை சமீபகாலமாகத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளில் பாடத்திட்டத்தின் பங்களிப்பு மிகுதியாக இருக்கிறது. 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருந்தே நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனை நுட்பமாக உணர்ந்து மிகச் சரியான முறையில் பொதுத் தமிழ்க் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமாக இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. எல்லாத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை இப்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்காக நாம் படிப்பதற்கும் போட்டித் தேர்வுகளுக்கு நாம் படிப்பதற்கும் வித்தியாசம் அதிகம். அந்த நுட்பத்தை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்தும். பாடத்திட்டங்களில் இருந்து எப்படி கேள்விகள் எடுக்கப்படுகின்றன? ஒரே கேள்வியை எப்படி மாற்றிக் கேட்பார்கள்? மிக முக்கிய வினாக்கள் எவை? நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய விவரங்கள் எவை என்கிற அத்தனை விதமான கேள்விகளுக்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது. தமிழக அரசுத் துறை சார்ந்த எந்தத் தேர்வாக இருந்தாலும் அதில் மிக முக்கியமான பகுதியாக பொதுத் தமிழ் இடம்பெறும். பொதுத் தமிழில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்களில் பாதி தமிழுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பொதுத் தமிழில் கவனம் செலுத்தினால் சுலபமாக அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பொதுத் தமிழுக்கான இலக்கணம், செய்யுள், உரைநடைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்கள், பயிற்சிக்கான கேள்விகள் என அற்புதமான தொகுப்பாக மிளிர்கிறது இந்த நூல். உங்களின் வெற்றிக்கு விகடன் பிரசுரத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!
RS. 130 More...by டாக்டர் க.விஜயகார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.
போட்டித் தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நூல் அரிய ஆலோசனைகளைத் தருகிறது. தனியாக படிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது, வீட்டில் படிப்பது, கோச்சிங் சென்டரில் படிப்பது, வேலை பார்த்துக்கொண்டே படிப்பது, வேலையில் விடுமுறை எடுத்து படிப்பது என்று நம் மனநிலைக்கும் நமது சூழலுக்கும் ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், படிப்பது முக்கியம் என்கிற மந்திரத்தை வலியுறுத்துகிறார் ஆசிரியர் டாக்டர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். பல லட்சம் பேர் எழுதும் தேர்வுகள் என்பதால், போட்டி கடினமாகத்தான் இருக்கும். எனவே மாணவர்கள், இந்தச் சூழல் கண்டு அஞ்சாமல் ஒவ்வொரு மாணவரும் தாம் அமைத்துக்கொண்ட பாதையில் இலக்கை நோக்கி விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். வெற்றி தோல்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நேர்மையான, உற்சாகமான மனநிலையோடு நம்பிக்கை நடை போட்டால் தான் இந்தப் பாதையில் சாதனையாளராக முடியும். இந்த முழு ஈடுபாட்டோடு, முழு அர்ப்பணிப்போடு தேர்வு எழுத காத்திருக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் ‘ஜெயிப்பது எப்படி?’ என்ற இந்த நூல் ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். தொடர்ந்து படியுங்கள் வெற்றியடைய வாழ்த்துகள்!
RS. 109 More...by சி.கலா சின்னத்துரை
அரசுப்பணி என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகளின் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. வரும் காலங்களில் அரசு நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், முறையாகப் படித்து அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் அரசுப் பணி நிச்சயம் சாத்தியம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, விழுந்து விழுந்து படித்தால் மட்டும் போதாது. தேர்வு நுட்பம் அறிந்து, எத்தகைய கேள்விகளுக்கு ஒவ்வொரு தேர்வுகளின் போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சமீப காலங்களில் நடந்தப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பாடத் திட்டங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆறாம் வகுப்பிலிருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதன்படி கணிதப் பாடத்தின் அனைத்துவிதமான கேள்வி பதில்களும் இந்த நூலில் சீராகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கிறது. அதிகமாகக் கேட்க வாய்ப்பிருக்கும் கேள்விகளைச் சரியாக அனுமானித்து, அவற்றைச் சரியாக வரிசைப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர். கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்கும் நூதனம் அறிந்து, அதன் அடிப்படையிலான கேள்வி & பதில்களையும் தொகுத்திருப்பது தனிச்சிறப்பு. பாடத் திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் இளைய தலைமுறையினரின் கணித அறிவைத் திறம்பட மேம்படுத்தி, போட்டித் தேர்வுகளுக்கு ஆகச்சிறந்த உறுதுணையாக விளங்கும். மாதிரித் தேர்வுக்காகப் பயிற்சி வினாக்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC - CSE, TET,VAO உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்!
RS. 88 More...by டாக்டர் சங்கர சரவணன்
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வினாத்தாள்கள் தயாரித்து வருகின்றன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளைக்கூட தமிழில் எழுதலாம் என்பது நடைமுறையில் இருக்கிறது. TNPSC - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக ஏற்கெனவே ‘பொது அறிவுக் களஞ்சியம்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். போட்டித்தேர்வு எழுதுவோரிடம் இருந்தும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது, TNPSC - குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்காக, பொதுத் தமிழ்ப் பாடத்தை மட்டுமே மையமாக வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் இந்தப் ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’. தமிழ்ப் பாடங்களை எவ்வளவுதான் கரைத்துக் குடித்திருந்தாலும், ‘தேர்வு’ என்றவுடன் லேசான பயம் பற்றுவது இயல்பு. ஆனால், இந்த நூலைப் படித்தவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வுக் களத்தில் குதிக்கலாம். பத்தாம் வகுப்புத் தரத்திலிருந்து பட்டப்படிப்புத் தரம் வரை அமைந்த போட்டித் தேர்வு பொக்கிஷமான இந்த நூலில், பொதுத் தமிழ்ப் பாடத் திட்டம் பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டு, விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாதிரி வினா&விடை அளித்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழ்ப் பாடம் குறித்த அடிப்படை தொடங்கி, இலக்கணம் தொடர்பான ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய விளக்கங்களோடு, இதுவரை வெளிவராத நுணுக்கமான தகவல்களையும், அழகிய தமிழில் பழகிய வார்த்தைகளைக் கொண்டு தொகுத்து எழுதியிருக்கிறார் டாக்டர் சங்கர சரவணன். ஆன்றோர்களும் சான்றோர்களும் பாராட்டும்படியாக அமைந்திருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் அத்தியாயம், தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வமாக உள்ள அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமன்றி, தமிழின் சுவைக்காகவும், தகவல்கள் அறியும் ஆர்வத்துக்காகவும் இந்த நூலைப் படிக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறலாம். மொத்தத்தில் ஆசிரியர்கள், பள்ளி&கல்லூரி மாணவர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பயனுள்ள ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’ இது!
RS. 315 More...by டாக்டர் சங்கர சரவணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை மேற்கோள் காட்டுவதும் உண்டு. ஏனென்றால் புத்தக ‘ஸ்கோப்’பைத் தாண்டிய ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும். மேற்கொண்டு இருக்கும் விஷயங்களைப் பாடுபட்டுச் சேகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் அனைத்தையும் மொத்தமாகத் தருகிறது. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரதம், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவ்வப்போது எடுத்துப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிக்கவும் தேவையான ஒரு நூல்!
RS. 126 More...by பேராசிரியர் பா.சந்திரமோகன்
படிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெறுகிற ஒரு மாணவன் கல்லூரியில் சராசரி மதிப்பெண் வாங்கக்கூட தடுமாறும் நிலை. காரணம், தனக்குத் தகுந்த படிப்பு எது என்பதை அந்த மாணவன் அறியாததுதான். எதில் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள் உணரத் தவறுவதும், பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை மாணவர்களின் மீது திணிப்பதுமே இத்தகைய திண்டாட்டத்துக்கு வழிவகுக்கின்றன. இன்றைய நவீன உலகில் மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், புள்ளியியல், விண்வெளியியல், பொருளாதாரம், சட்டம், விவசாயம், அழகியல்... என எத்தனையோ விதமான படிப்புகள் உள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப, நம் கனவுக்குத் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு - நேற்றைய தலைமுறைக்கு வாய்க்காத வரம் இன்றைய மாணவர்களின் மடியில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கிறது. +2 முடித்த பிறகு நமக்கான சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கத் தேவையானது நிதானமான யோசனை. நமக்கான கோர்ஸ் எது, அதனை சிறப்பாக வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எவை என்பதை எல்லாம் ஆராய்ந்து மேற்படிப்பைத் தொடர்வதே சிறந்தது. அதற்காகவே பிரத்யேக முயற்சியுடன் பா.சந்திரமோகன் எழுதி இருக்கும் ஆக்கபூர்வ வழிகாட்டி இந்த நூல். பொறியியல், மருத்துவம் தொடங்கி சகலவிதமான படிப்புகள் குறித்தும், அதற்கேற்ற கல்லூரிகள் குறித்தும் நூலாசிரியர் விரிவாக எழுதி இருப்பது ஒவ்வொரு மாணவனையும் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் சேவைக்கு நிகரானது. மாணவர்கள் மட்டும் அல்லாது பெற்றோர்களும் படித்து, தக்க துணையாகக் கைகொள்ள வேண்டிய புத்தகம் இது. கிராமப்புற மாணவர்களை மனதில்கொண்டு, அவர்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம், எத்தகையப் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டு என்பதையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அனைவரும் படிக்கவேண்டிய பயனுள்ள துணைவன் இந்தப் புத்தகம்!
RS. 50 More...by ஸ்ரீநிவாஸ் பிரபு
“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் கல்வி நிலை. சுழன்றுகொண்டு இருக்கும் உலகில், நாமும் தினம் தினம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஓடுபவர்களின் வெற்றி இலக்கு என்ன, நல்லதொரு பணி; அதுவும் அரசுப் பணி. இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற நெக்குருகிப் படித்தாலும், ‘முடிவில் பாஸா... ஃபெயிலா? அதைச் சொல்லு’ என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் அதிவிரைவான எதிர்பார்ப்பு. இதை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தேர்வு என்றால் என்ன, எந்தெந்தத் துறை எப்படியெல்லாம் போட்டித் தேர்வை நடத்துகின்றது, தேர்வை சந்திக்கும் முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை, எந்தெந்தப் பாடப் பிரிவின் கீழ் இந்தப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்கிற விவரங்களின் தொகுப்புதான் இந்த நூல். மேலும், பல்வேறு தேர்வுக் குறிப்புகளுடன், போட்டித் தேர்வை GENERAL INTELLIGENCE, GENERAL LANGUAGE, NUMERICAL ABILITY, GENERAL KNOWLEDGE என, நான்கு பிரிவுகளாகப் பிரித்து அது அதற்கான விடைகளையும் கொடுத்து, உங்களைப் பயிற்சிக் களத்திலும் இறக்கியுள்ளார் நூலாசிரியர். அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு பாடத் திட்டம் தொடர்பான நுணுக்கமான சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டாலே வெற்றி நம்மை தொற்றிக்கொள்ளும். முடிந்தவரை முயற்சிப்பதைவிட, முடிக்கும்வரை முயற்சிப்பதே சிறப்பு!
RS. 88 More...by டாக்டர் சங்கர சரவணன்
மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் அறிந்த எளிமையான பாடங்கள்தான் என்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்விலும், TNPSC தேர்விலும் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அதிக நுட்பமும் நுணுக்கமும் வாய்ந்தவை. UPSC மற்றும் TNPSC பாடத்திட்ட அடிப்படையில் பள்ளிப் பாட நூல் முதல் பல்கலைக்கழகப் பாட நூல்கள் வரை பல நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வு அகில இந்திய அளவிலும் TNPSC தேர்வு மாநில அளவிலும் நடைபெறுவதால் அவற்றில் கேட்கப்படும் கேள்விகளின் தன்மையும் தரமும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்றபோதிலும் நூல் ஆசிரியர் இரண்டு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் அனுபவத்தால் இரண்டையும் இணைக்க முயன்றுள்ளார். UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி&பதில்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தந்து விளக்கங்களைத் தமிழ் மொழியில் தந்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். நமது நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு போட்டித் தேர்வுக்கும் உபயோகமான இந்த நூல் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!
RS. 137 More...by டாக்டர் க.விஜயகார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.
சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும்? உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம்! இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி? ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும்? எளிதாக எப்படி விடையளிக்கலாம்?’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.
RS. 63 More...by எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார்
1800-களில் நடந்த தொழிற்புரட்சிக்குப் பிறகு, இங்கிலாந்து பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாற்றியது. ஆம், ஆங்கிலம் உலக மொழியானது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் இல்லாத இடமே இல்லை. தொடர்புமொழியில் ஆங்கிலமே முதலிடம் வகிக்கிறது. ஆக, ஆங்கிலம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதொன்று என்ற நிலையில் அதை எளிமையாக கற்க இந்த நூலில் வழிகாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார். முக்கிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணத்தோடு ஆங்கிலம் பேசும் முறை என ஆங்கிலப்பயிற்சி முறைகள் அற்புதமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப்படிக்கும் வாசகர் நிச்சயம் ஆங்கில மேதாவியாக தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உறுதி. தமிழ் மூலம் ஆங்கிலத்தைக் கற்று, தகவல் தொடர்பில் அசத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
RS. 322 More...