Cart is Empty
by மருத்துவர் கல்பனாதேவி
மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்!
RS. 140 More...by விகடன் பிரசுரம்
எப்போதுமே ஜோக் புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியும். புன்னகைத்துக் கொண்டே ஜாலியாக பக்கங்களைப் புரட்ட முடியும். அதுமட்டுமல்ல, மன அழுத்தம் ஏற்பட்டு சோர்ந்து உட்கார்ந்திருக்கும் வேளையில் ஜோக் புக் ஆறுதலான ஒரு மருந்து. ஆரம்பகாலம் முதல் ஆனந்த விகடனில் வெளியாகிவரும் ஜோக்குகளை விரும்பிப் படிக்கும் வாசகர் வட்டம் மிகப் பெரியது. இன்று வரையில் அது தொடர்ந்து வருகிறது. விகடனில் வெளியான ஜோக்குகளைத் தொகுத்து அவ்வப்போது கையடக்க நூல்களாக வெளியிட்டு வருகிறது விகடன் பிரசுரம். அந்த வகையில், 2009_ம் ஆண்டில் விகடனில் வெளியான ஜோக்குகளில் 300_ஐ இந்த நூலில் தொகுத்திருக்கிறோம். இதில் உள்ள ஜோக்குகளை படிப்பதோடு உங்கள் சுற்றத்தாரிடமும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவும், பரிசு அளித்து மகிழவும் இந்த நூல் உங்களுக்கு உதவும்!
RS. 60 More...by மதன்
‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் நான் உடனே புரட்டிப் பார்ப்பது இந்த நூல்களைத்தான்... ஐந்தாவது பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...’ _ வாசகர் ஒருவர் எங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதி இது. பொதுவாக பொது அறிவு புத்தகங்களில் சுவாரஸ்யங்கள் இருக்காது; வெறும் தகவல்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். அது விரைவில் நம்மை சோர்வடையச் செய்துவிடும். இந்த மனோபாவம் தெரிந்துதான், ‘என் கேள்விக்கு என்ன பதில்?’ என்று வாசகர்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஏனோதானோவென்று இல்லாமல் நிஜமான ஈடுபாட்டுடன், அங்கங்கே நகைச்சுவை கலந்து மதன் பதிலளித்து வருகிறார். தவிர, யாருமே தொடுவதற்குத் தயங்கும் ஏரியாக்களில்கூட இவர் புகுந்து புறப்படுவதால் ‘எதைப் பற்றியும் இவரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம்’ என்ற நம்பிக்கை பெரும்பாலான வாசகர்களிடம் இருந்துவருகிறது. விகடனில் வெளியான கேள்வி_பதில்களைத் தொகுத்து, வெளியான நான்கு பாகங்களும் வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவருகின்
RS. 60 More...by வேங்கடம்
ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் குறித்த பதிவுகள் அதிகம். ஹிட்லர் விட்டுச்சென்ற வரலாற்று எச்சங்களைக் கண்டவராக, நூல் ஆசிரியர் வேங்கடம் புதுமுகப் பார்வையோடு ஹிட்லரை இங்கே பதிவு செய்கிறார். உணவுக்கே பிறரை எதிர்பார்த்திருந்த ஒருவன், நாட்டையே தனக்குக் கீழ் கொண்டுவந்த அதிரடியை பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக அற்புதமான எழுத்து நடையில் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர் வேங்கடம். ஹிட்லர் யார், அவருடைய பிறப்பின் பின்னணி, வியன்னாவில் பிறந்து ஜெர்மனிக்கு வந்த கதை, ஜெர்மானிய ராணுவப் படையில் ஆரம்ப காலப் பங்கு, அந்த ராணுவப் படையையே தன் விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்டிவைத்த ரகசியம், உலகத் தலைவர்களின் பார்வையில் ஹிட்லரின் நிலை, யூத பாரம்பரியத்தில் வந்த ஹிட்லருக்கு யூத இனத்தின் மீது தீராப் பகை உண்டானதற்கான நிகழ்வுகள், ஆட்சியின் உச்சத்தில் இருந்து அநாதையான மர்மம், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டதற்கான தடங்கள் என ஹிட்லரின் வாழ்வில் நடந்த ஒவ்வோர் அசைவுகளையும் இந்த நூல் சுவைபட விவரிக்கிறது. மேலும், ஹிட்லரின் மதம், அகிம்சை எழுத்துகளால் ஹிட்லருக்கு அறிவுரை கூறிய காந்தியின் கடிதங்கள், சர்ச்சில், முசோலினி, ஸ்டாலின் போன்ற உலகத் தலைவர்களுடனான தொடர்பு, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் பங்கு, மேற்கு ஜெர்மனிக்கும் கிழக்கு ஜெர்மனிக்கும் இடையே எழுந்த சுவரின் சுவாரஸ்யம், ஹிட்லரின் அந்தரங்க வாழ்க்கையில் பதிந்திருந்த பல்வேறு ரகசியங்கள், ஹிட்லரின் ரத்த வெறி செய்கைகளுக்கு மனோதத்துவ நிபுணர்களின் பதில்கள் என அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. வரலாற்றையும், அதன் பின்னணிகளையும் அறியத் துடிக்கும் வரலாற்றுப் பிரியர்களுக்கு, இந்த நூல் ஓர் அறுசுவைப் படையல்!
RS. 74 More...by விகடன் பிரசுரம்
வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ!’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்
RS. 50 More...by டாக்டர் வி.எஸ்.நடராசன்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள் அளித்தும் தான் பெற்ற அனுபங்களை வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் டாக்டர் வி.எஸ்.நடராசன். முதியவர்களுக்கு வரும் நோய்கள், அவற்றுக்குச் செய்ய வேண்டிய தற்காப்பு முறைகள், பரிசோதனைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் என்று முதியோர் மருத்துவம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழிவகை சொல்கிறது இந்த நூல். முதுமை எப்போது ஆரம்பிக்கிறது தொடங்கி இறப்பு வரை முதியவர்களுக்கு வரும் நோய்களான மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்க வாதம், மறதி நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, மலச்சிக்கல், தோல் நோய்கள், கண் நோய்கள், காது&மூக்கு&தொண்டை நோய்கள் என்று பல்வேறு நோய்களுக்கும், முதுமையில் நலமாக வாழ உதவும் பரிசோதனைகள், உணவுகள், உடற்பயிற்சிகள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை குறித்தும், முதுமையை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் சந்தோஷமாக வாழலாம் - முதுமையும் ஒரு சுகமே என்பதையும், மிகவும் இயல்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி எழுதியுள்ளார் டாக்டர். வி.எஸ்.நடராசன. முதியவர்களில் பலரும் தங்களின் சிறு சிறு சந்தேகங்களுக்கு டாக்டர்களிடம் ஆலோசனை பெறத் தயங்குகிறார்கள். அப்படி கேட்டாலும் அவர்களுக்கு தெளிவாக, சுருக்கமாக சொல்லத் தெரிவதில்லை. டாக்டர்களுக்கும் மிகவும் பொறுமையாக அவர்களுக்கு எடுத்துக் கூற நேரம் கிடையாது என்பதைப் புரிந்துகொண்ட டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியவர்களிடம் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளித்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர் மருத்துவர் என்றால், நோய் வராமல் இருக்க தகுந்த உணவு, உடற்பயிற்சி, பாதுகாப்பு போன்ற நோய்த் தடுப்பு முறையால் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துபவர் சிறந்த மருத்துவர். டாக்டர் வி.எஸ்.நடராசன் சிறந்த மருத்துவர் என்பதை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. நூறு மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை. அரிய பயனை அள்ளித் தரும் இந்த நூல், உங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டியதும் நலமே!
RS. 105 More...by மதன்
நான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் படத்துடன் நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக் கூடியது கார்ட்டூன். அதுமட்டுமல்ல... நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் அரசியல் மற்றும் சமூக கார்ட்டூன்கள், சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்! சில சமயங்களில், சம்பந்தப்பட்டவர்களை முகம் சிவக்கவும் செய்துவிடும். ஆரம்பக் காலத்திலிருந்தே கார்ட்டூன்களில் தனி முத்திரை பதித்து வந்திருக்கிறது ஆனந்த விகடன். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆரம்பித்து இன்று வரையில் விகடன் கார்ட்டூன்களுக்கு தனி மவுசு உண்டு. முக்கியமாக, தேர்தல் காலங்களில் விகடனில் வெளியாகும் கார்ட்டூன்கள், வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்திக்க வைத்ததும் உண்டு! 1969_ல் விகடனுடன் இணைந்தவர் மதன். தொடக்கத்தில் கேரிகேச்சர்கள் வரைந்து, படிப்படியாக முன்னேறி, கார்ட்டூன்கள் வரைவதில் தனக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக் கொண்டவர். கார்ட்டூன்களில் மெலிதாக, சிக்கனமாக கோடுகளைப் (Strokes) பயன்படுத்துவது அவருடைய ஸ்டைல். பின்னாட்களில் ஓர் எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இன்றுவரையில
RS. 133 More...by செ.கார்த்திகேயன்
இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும். இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.
RS. 105 More...by மதன்
ஆனந்த விகடனில் 1995ல் ஹாய் மதன் என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் மதன். ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக இது ஹிட் ஆனது! இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே! ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மலை போல் குவிய, அதிலிருந்து பொறுமையாகக் கேள்விகளைத் தேர்வு செய்து ஆதாரபூர்வமாக அவற்றுக்குப் பதில் எழுதி வருகிறார். புராணம், வரலாறு, விஞ்ஞானம்... என்று எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் பதில் கிடைக்கும் மதனிடம். அதேபோல், விலங்குகள், பறவைகள், புதிய கண்டுபிடிப்புகள்... என்று வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். காதல் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனோதத்துவம் பற்றி... என்று வித்தியாசமான சப்ஜெக்ட்களையும் இந்தப் பகுதியில் லாகவமாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் அந்தத் துறை சார்ந்த நூல்களைப் படித்து, அலசி ஆராய்ந்து, ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பதில்கள் எல்லாமே ஒரு முறை படித்துவிட்டு மறந்து விடக் கூடியதில்லை. கைவசம் அவை இருந்தால் எந்தச் சமயத்திலு
RS. 70 More...by எம்.சசிகுமார்
புரட்டினால் புழுதி வாசம்! ‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்திய சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்தப் படத்தை இந்தியில் செய்யும் பாக்கியம் எனக்கு வாய்த்தால் பெருமையாக இருக்கும்!’’இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை ஹிμகிஷீபோது,சற்று தயங்கினார்.‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்?’என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்!ஓர் இயக்குநராக,ஒரு நடிகராக,ஒரு தயாரிப்பாளராக முதல் முயற்சியிலேயே காலத்துக்கும் பெயர் சொல்லக்கூடிய உலகளாவிய பதிவை நிகழ்த்தி இருக்கிறார் சசிகுமார். 1980களின் காலகட்டத்தில் மதுரையின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக சசிகுமார் பதிவு செய்திருக்கும் விதம், சினிமாவை வாழ்வியல் வடிவமாக எடுக்கத் துடிக்கும் அத்தனை பேருக்குமான பயிற்சி.‘80களின் கதை என்றபோது எல்லோரும் சிரித்தார்கள்’எனத் தனக்கான முதல் அடி விழுந்த நிகழ்வு தொடங்கி படத்தை வெற்றிகரமாக முடித்தது வரை சகத்தோழனாக சசிகுமார் சொல்லச்சொல்ல அத்தனை பிரமிப்பு. இயக்குநர் பாலாவின் அணிந்துரை புத்தகத்தின் மயிலிறகு பக்கம்.இயக்குநர் அமீரின் ‘சுப்ரமணியபுரம்’ படம் குறித்த பார்வையும், சசிகுமார் மீதான அளவீடும் வழக்கம்போல் புயல்.திரைக்கதையாக மட்டுமே அல்லாது படம் குறித்த விரிவான பார்வையைப் பதிவு செய்ய ‘சசிகுமார்,மிஷ்கின்,கதிர் சந்திப்பு’இந்தப் புத்தகத்தின் ரத்தினப் பக்கங்களாகப் பதிவாகி இருக்கின்றன.‘சுப்ரமணியபுரம்’ எப்போது புரட்டினாலும் புழுதி வாசம் வீசும் காலக்கல்வெட்டு!
RS. 105 More...