Cart is Empty
by மதன்
கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்! கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு! விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன்! இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான ப
RS. 67 More...by டி.கே.இரவீந்திரன்
இருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சுற்றிலும் சூழ்ச்சிச் சுற்றங்கள். அவர்களுக்கு அடிபணியும் அலுவலர்கள். தன் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யப் போதுமான அறிவைத் தேடிக்கொண்டு, சூழ்ச்சிகளைச் செவ்வனே முறியடித்தார். வேட்டையாடுவதிலும் வீர விளையாட்டிலும் மட்டுமே விருப்பமுடையவர் போல வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும் திறமையாக நாட்டை ஆண்டார். அக்பர். சிறந்த ஓவியர், எழுத்தாளர், போர்வீரர், இசைப் பிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைப் பெற்றிருந்தவர். ஆட்சி அதிகாரம் தன் கைக்கு வந்ததும் தலைகால் தெரியாமல் ஆடவில்லை. மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவது எப்படி என்ற சிந்தையில்தான் அவர் கவனம் இருந்தது. அடக்குமுறையாலும் அக்கிரமத்தாலும் இதுவரை மூதாதையர் வளைத்துப்போட்ட இந்தப் பேரரசில் மக்களின் ஆதரவைப் பெறுவது ஒன்றே தலையாய செயல் என்று புரிந்துகொண்டார். இஸ்லாமியர் அல்லாதாரைப் புரிந்துகொள்ளவும் சமயச் சச்சரவு இன்றி தன் பேரரசை நடத்திச் செல்லவும் முற்பட்டார். அவரவர் மதத்தின் நற் கருத்துகளை எல்லோரும் பரிமாறிக்கொள்வதையே விரும்பினார். அக்பரைத் தங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியும் சிலருக்கு இருந்தது. ஆனால், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் ஆகிய அனைத்து மத அர்த்தங்களையும் உணர்ந்தவர் அக்பர். தானாகவே தீன் இலாகி என்ற ஒரு மதத்தையும் தோற்றுவித்தார். அவர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் அக்பரைக் குறைகூறியும் இருக்கிறார்கள். அக்பர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட வாரிசு நெருக்கடிகள், வளர்ப்புத் தாயால் விளைந்த கொடூரங்கள் ஆகிய நெருப்பாற்றில் அவர் வெற்றிகரமாக நீந்திக் கரையேறி ஆட்சி செய்தது, பதேப்பூர் சிக்ரி என்ற தலைநகரை உருவாக்கியது ஆகியவற்றை நூல் ஆசிரியர் விறுவிறுப்புடன் விளக்குகிறார். மாமன்னரின் அக்பரின் வியக்க வைக்கும், சுவாரசியமான வரலாற்றைப் படியுங்கள்!
RS. 67 More...by மதன்
ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ஹாய் மதன்’ பகுதிக்கு கேள்விகளை பவுன்சர்களாக வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க, அவற்றை சவாலாக ஏற்று, சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசிக் கொண்டிருக்கிறார் மதன்! (T20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்த சமயத்தில் எழுதப்பட்டது!) பொது நூலகங்களிலும் சரி, வீடுகளில் புத்தக அலமாரிகளிலும் சரி, கண்டிப்பாக இருக்க வேண்டிய நூல்கள் வரிசையில் ‘ஹாய் மதன்’ தொகுப்புகள் முக்கிய இடம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். தேவைப்படும் நேரங்களில், தேவைப்படும் பொது அறிவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஒரு கையேடாக இவை பயன்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் முதல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இதுவரை வெளியான ஐந்து பாகங்களையும் பாதுகாத்து வரும் தகவலை எங்களுக்கு வரும் கடிதங்கள் மூலமாக அறியமுடிகிறது. மதன் பதில்களை சமூகத்தில் பெருமைக்குரிய இடத்தில் இருப்பவர்களும் உன்னிப்பாகப் படித்து வருகிறார்கள். உதாரணமாக, இந்த நூலில், ‘கவிஞர் வைரமுத்துவின் நோபல் பரிசு நம்பிக்கை வீண்போகாமல் இருக்குமா?’ என்ற ஒரு கேள்விக்கு, மதன் அளித்த பதிலுக்கு, வைரமுத்து எழுதிய
RS. 70 More...by மதன்
ஆனந்த விகடனில் 1995ல் ஹாய் மதன் என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் மதன். ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக இது ஹிட் ஆனது! இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே! ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மலை போல் குவிய, அதிலிருந்து பொறுமையாகக் கேள்விகளைத் தேர்வு செய்து ஆதாரபூர்வமாக அவற்றுக்குப் பதில் எழுதி வருகிறார். புராணம், வரலாறு, விஞ்ஞானம்... என்று எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் பதில் கிடைக்கும் மதனிடம். அதேபோல், விலங்குகள், பறவைகள், புதிய கண்டுபிடிப்புகள்... என்று வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். காதல் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனோதத்துவம் பற்றி... என்று வித்தியாசமான சப்ஜெக்ட்களையும் இந்தப் பகுதியில் லாகவமாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் அந்தத் துறை சார்ந்த நூல்களைப் படித்து, அலசி ஆராய்ந்து, ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பதில்கள் எல்லாமே ஒரு முறை படித்துவிட்டு மறந்து விடக் கூடியதில்லை. கைவசம் அவை இருந்தால் எந்தச் சமயத்திலு
RS. 70 More...by விகடன் பிரசுரம்
பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக Ôமரம்Õ என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம்! Ôவாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்Õ என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே..? Ôஅப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..?Õ என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் & ‘மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்!’ தற்போது, விவசாயிகளிடையே ‘மரப்பயிர் வளர்ப்பு’ என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன. இது ஒரு பணப்பயிர் என்பதாகவே தற்போது பார்க்கப்படுகிறது. மரங்கள் நம் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம், நாட்டில் மரங்கள் வளர வளர, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தம் தேவைகளைப் பூர்த்திசெய்தோடு, சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் மரப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு, அசகாய சாதனைகளைப் படைத்துவரும் விவசாயிகள், Ôபசுமை விகடன்Õ இதழில் வரிசையாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, உங்களுக்காக இந்த நூலில் பதியம் போடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.
RS. 70 More...by வேங்கடம்
ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் குறித்த பதிவுகள் அதிகம். ஹிட்லர் விட்டுச்சென்ற வரலாற்று எச்சங்களைக் கண்டவராக, நூல் ஆசிரியர் வேங்கடம் புதுமுகப் பார்வையோடு ஹிட்லரை இங்கே பதிவு செய்கிறார். உணவுக்கே பிறரை எதிர்பார்த்திருந்த ஒருவன், நாட்டையே தனக்குக் கீழ் கொண்டுவந்த அதிரடியை பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக அற்புதமான எழுத்து நடையில் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர் வேங்கடம். ஹிட்லர் யார், அவருடைய பிறப்பின் பின்னணி, வியன்னாவில் பிறந்து ஜெர்மனிக்கு வந்த கதை, ஜெர்மானிய ராணுவப் படையில் ஆரம்ப காலப் பங்கு, அந்த ராணுவப் படையையே தன் விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்டிவைத்த ரகசியம், உலகத் தலைவர்களின் பார்வையில் ஹிட்லரின் நிலை, யூத பாரம்பரியத்தில் வந்த ஹிட்லருக்கு யூத இனத்தின் மீது தீராப் பகை உண்டானதற்கான நிகழ்வுகள், ஆட்சியின் உச்சத்தில் இருந்து அநாதையான மர்மம், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டதற்கான தடங்கள் என ஹிட்லரின் வாழ்வில் நடந்த ஒவ்வோர் அசைவுகளையும் இந்த நூல் சுவைபட விவரிக்கிறது. மேலும், ஹிட்லரின் மதம், அகிம்சை எழுத்துகளால் ஹிட்லருக்கு அறிவுரை கூறிய காந்தியின் கடிதங்கள், சர்ச்சில், முசோலினி, ஸ்டாலின் போன்ற உலகத் தலைவர்களுடனான தொடர்பு, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் பங்கு, மேற்கு ஜெர்மனிக்கும் கிழக்கு ஜெர்மனிக்கும் இடையே எழுந்த சுவரின் சுவாரஸ்யம், ஹிட்லரின் அந்தரங்க வாழ்க்கையில் பதிந்திருந்த பல்வேறு ரகசியங்கள், ஹிட்லரின் ரத்த வெறி செய்கைகளுக்கு மனோதத்துவ நிபுணர்களின் பதில்கள் என அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. வரலாற்றையும், அதன் பின்னணிகளையும் அறியத் துடிக்கும் வரலாற்றுப் பிரியர்களுக்கு, இந்த நூல் ஓர் அறுசுவைப் படையல்!
RS. 74 More...by வைகோ
‘அனைவரும் நம்மைக் கொண்டாட வேண்டும்’ என்ற எண்ணம் உடையவர்கள் பல நேரங்களில் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும். ஏனெனில் கடவுளில்கூட எல்லோருக்கும் பிடித்த ஒரு கடவுள் என ஒருவரும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சியினரும் மறைமுகமாகக் கொண்டாடும் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்றால் அது அண்ணாதான். பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்துவந்து புதியதோர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கியபோது பெரியாருக்கு அண்ணாமீது வருத்தங்கள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் பெரியாரும் பிற்காலத்தில் அண்ணாவைப் புரிந்துகொண்டார். பெரியார் வகுத்துக்கொடுத்த பாதையில் இந்தச் சமூகத்தை ஒரு சில படிகளேனும் அண்ணா உயர்த்த நினைத்தார். அதற்கு அரசதிகாரம் தேவை என்பதை உணர்ந்து தி.மு.க&வை ஆரம்பித்தார். சில வருடங்களில் ஆட்சியையும் பிடித்தார். ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என அண்ணா முதல்வராக இருந்த குறுகிய காலத்தில் மகத்தான சில சாதனைகளைச் செய்துகாட்டினார். புற்றுநோய்க்கு அவரது உடலைத் தின்னக் கொடுக்காமல் இருந்திருந்தால் தம்முடைய வாழ்நாளில் அவர் பல சாதனைகளைச் செய்திருப்பார். அண்ணா குறித்த அற்புதமான தகவல்களை எல்லாம் அதன் உண்மைத் தன்மை மாறாமல் வைகோ இந்த நூல் வழியாகத் திரட்டிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவின் அரசியல் நாகரிகம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறது; எதிர்க்கட்சியைக்கூட எவ்வளவு மரியாதையோடு நடத்தியிருக்கிறார் என்பதுபோன்ற பல தகவல்கள் இந்த நூல் வழியாக அறியக் கிடைக்கின்றன. அண்ணாவை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பணியைத்தான் வைகோ இந்த நூல் வழி செய்திருக்கிறார். இளைய தலைமுறையினர் நிச்சயமாக அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.
RS. 74 More...by நீரை. மகேந்திரன்
வாடகை வீட்டில் இருப்பதில் பல அசௌகரியங்கள் உண்டு. எப்போது வீட்டுக்காரர் காலி செய்யச் சொல்லுவாரோ என்ற பயம் அடி மனதில் எப்போதும் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் காலி செய்யலாம் என்பதால் நம் இஷ்டத்துக்குச் சில பொருட்களைக்கூட வாங்க முடியது. ஆகவே, கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டுமானால் சொந்த வீடுதான் கட்ட வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். சொந்த வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதில் பல சிரமங்கள் இருப்பதால் அது கனவாகவே இருக்கும். அந்தக் கனவை நனவாக்கும் விதமாக இந்த நூலை எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் நீரை. மகேந்திரன். வீட்டு மனையை எப்படி வாங்க வேண்டும், மனையின் நாற்புற அளவுகளும் வெவ்வேறு அளவில் இருந்தால் எதனால் அதை வாங்கக் கூடாது, மனையை வாங்குவதற்கு முன் எப்படித் தேர்ந்து எடுப்பது, எப்படிப் பார்வையிடுவது, எந்தக் காலத்தில் போய்ப் பார்த்தால் பிற்காலத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம், மனையை வாங்குவதற்கு முன் எப்படி ஏமாறாமல் இருக்கலாம், எந்தெந்தப் பத்திரத்தைப் பார்வையிட வேண்டும் போன்ற சகல விஷயங்களையும் எழுதியிருக்கிறார். வீட்டு மனையை வாங்குவதில் தொடங்கி வீடு கட்டிக் குடியேறுவது வரை அத்தனை விஷயங்களையும் விளக்கி எழுதியிருக்கிறார். வீட்டைக் கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வரைபடம் தயாரித்தல், அதில் சிக்கல் இல்லாமல் முடிப்பது, கட்ட ஆரம்பிப்பதற்கு முன் பெற வேண்டிய மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கட்டும்போது கமர்ஷியல் அடிப்படை மின் இணைப்பு, கட்டி முடித்தவுடன் அதை வீட்டு உபயோகத்துக்கு மாற்றிக்கொள்வது, கட்டும்போது எந்தெந்தக் கட்டுமானத்துக்கு செங்கலோ, சிமென்டோ எப்படிப் பயன்படுத்துவது போன்ற நுணுக்கமான விஷயங்களை எழுதியிருக்கிறார். நாணயம் விகடனில் தொடராக வந்து பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் உங்கள் கைகளில் நூலாக இப்போது தவழ்கிறது. இந்த நூல் உங்கள் நிழலில் உங்களை வாழ வைக்கப்போவது உறுதி!
RS. 74 More...by செ.திவான்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.
RS. 77 More...by பெரு.முருகன்
திரையரங்குகளை நோக்கிவரும் ரசிகப் பெருமக்கள் திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் அல்லது வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டும் அல்லது திரைப்படத்தைப் பார்த்து ஒருவன் திருந்த வேண்டும்... இப்படித்தான் திரைப்பட இயக்குநர்கள் தாங்கள் இயக்கும் திரைப்படங்கள் குறித்துச் சொல்கிறார்கள்... சொல்வார்கள்! ஆனால், தன்னுடைய திரைப்படத்தைப் பார்த்துப் பார்வையாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட வேண்டும் என்று ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் கூறினார்! “திரைப்படம் என்ன சொல்லவருகிறது என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. பார்வையாளர்களை அலறவைக்கும் யுக்தியைப் பற்றித்தான் எனக்கு அக்கறை. ஒரு படம் நேர்த்தியாக அளிக்கப்படுவதன் மூலம் பார்வையாளர்கள் ஜப்பானில் இருந்தாலும் சரி, இந்தியாவில் இருந்தாலும் சரி அவர்கள் ஒரே விதமாக திகிலுற வேண்டும்” என்றார் அந்த திகில் மன்னன். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் கதைகள் அனைத்தும் ஒரு கொலையையோ அல்லது திகில் சம்பவத்தையோ மையப்படுத்தி இருக்கும். சின்னஞ்சிறிய கதையை மர்ம சினிமாவாக எடுத்து ரசிகர்களை மிரட்டியவர் அவர். தமிழ்ப் படங்களில் கதாநாயகனை போலீஸ் அல்லது வில்லன் துரத்தும் போது வழியில் ஆட்டு மந்தையோ, மாட்டு மந்தையோ வாத்துக் கூட்டமோ வழிமறிக்கும். இந்தக் காட்சியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஹிட்ச்காக்தான். தொடக்கக் காலத்தில் மௌனப் படங்களுக்கு டைட்டில் கார்டுகள் எழுதிவந்த சிறந்த ஓவியர் ஹிட்ச்காக். இங்கிலாந்தில் பிறந்த அவர், உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க மர்மக் கதைக் களம் பேருதவி புரிந்தது. சினிமாவில் புதுமைகளைப் புகுத்திய திகில் மன்னன் ஹிட்ச்காக்கிடம் “சிறந்த திரைப்படம் எடுக்க என்ன செய்யவேண்டும்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஹிட்ச்காக் சொன்னது மூன்று அம்சங்கள். ஒன்று திரைக்கதை, இரண்டு திரைக்கதை, மூன்று திரைக்கதை. ஆம்! கதையை மட்டுமே நம்பி ஹிட்ச்காக் சினிமா எடுத்தார். அவருடைய ஒவ்வொரு மர்மக் கதையும் நிச்சயம் திகிலை ஏற்படுத்தும்; வாசிப்பதற்கு சுவாரசியம் நிறைந்தது. வாசகர்களின் குதூகலத்துக்காக ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகளில் சிறப்புடைய சிலவற்றை இந்த நூலில் தொகுத்துத் தந்துள்ளோம். இனி, திகிலோடு உறவாடுங்கள்!
RS. 77 More...