Cart is Empty
by செ.திவான்
தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன. தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லி வரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்...’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார்? சமணர்கள் கழுவேற்றப்பட்டது எப்படி? பாண்டிய மாமன்னர் இலங்கைத்தீவை பிடித்தது எப்படி-? என பல்வேறு வரலாற்று சம்பவங்களின் சுவையான பின்னணிகளை எடுத்துக்கூறுகிறார் செ.திவான். ஆக, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்... தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக வரலாறு. படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள்!
RS. 112 More...by ரேவதி
ஃபாஸ்ட் புட் யுகத்திலிருந்து கொஞ்சம் விலகி வருவோமா? மாத்திரை மருத்துக்குக் கட்டுப்படாத நோயெல்லாம் மூலிகைக்குதான் கட்டுப்படுகிறது! கை வைத்தியம் எப்படி நம் உடலைப் பாதுகாக்கிறது என்பதைப் பற்றி இந்த நூலில் நூல் ஆசிரியர் ரேவதி விளக்கி எழுதியிருக்கிறார். பிரண்டைத் துவையலை சாப்பிட இன்றைய தலைமுறை விரும்புவதில்லை. ஆனால், அதில்தான் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது. பிரண்டையை நுனியாகப் பறிக்காமல் அடித் தண்டையும் சேர்த்துப் பறித்துச் சமைத்தால் அரிப்பும் எரிச்சலுமாக இருக்கும். வைத்தியம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. சுவையாகச் சமைக்கவும் தெரிய வேண்டும். பிரண்டை நீர் சுண்டினால் உப்புபோல படியும். குழந்தைகளுக்கு வாந்தி பேதி வந்தால் இந்த உப்பு மருந்தாகப் பயன்படும். இடியையே தாங்குகிற சக்தி வரகில் இருப்பதால்தான் அதைக் கோயில் கும்பத்தில் வைத்துப் பத்திரப் படுத்துகிறார்கள். தூதுயிலைப் பொடி பல்லை வெள்ளை வெளேர் என்று ஆக்கும். இவை போன்ற நுணுக்கமான ஏராளமான வித்தைகளை இதில் அள்ளித் தெளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். டிவி ரசித்துக்கொண்டே சிப்ஸைக் கொரிப்பதில்லையா அதுபோல வெறும் கைவைத்தியத்தை மட்டும் எழுதாமல் ஆங்காங்கே சொலவடைகளைச் சேர்த்து சுவை கூட்டி எழுதியிருப்பது புதுமை! டாக்டர் விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
RS. 63 More...by மயன்
கோயில்கள் நம் நம்பிக்கைக்கான வாயில்கள். வாழ்வின் சுழலில் துன்பங்கள் துரத்தும்போது ‘என்ன செய்தால் இவை அகலும்’ எனத் தெரியாமல் அல்லாடுகிறோம் நாம். பரிகாரத் தலங்களை நோக்கி ஓடுகிறோம். அப்படிப்பட்ட பரிகாரக் கோயில்களின் சிறப்பு குறித்தும், மகிமை குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். படிக்கப் படிக்க அந்தக் கோயில் தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த உணர்வும், அந்தக் கோயில்களுக்கு நாமும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுகிறது. பக்திக்கும், பழைமை பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் கோயில்கள், வரலாறு, வாழ்க்கைமுறை, கலை, இலக்கியம், இதிகாசம், காப்பியம், மருத்துவம், ஜோதிடம், நிர்வாகம், நீதிமுறை, ஆகமம் போன்ற வாழ்வியலை நமக்கு வெளிப் படுத்தும் அரிய கருவூலங்களாகவும் வாழ்வை வளமாக்கும் தலங்களாகவும் திகழ்கின்றன. திருமணத்தடை நீங்கிடவும், பிரிந்த கணவன்&மனைவி சேர்ந்து வாழவும், குழந்தை இல்லாத குறையைப் போக்கிடவும் சர்ப்ப தோஷம் போக்கவும் பல்வேறு பரிகாரக் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று பயன்பெறுவதை அறியலாம். அதேபோல் கண்ணொளி பெற்றிடவும், ஊனம் நீங்கிடவும், வயிற்றுவலி, வலிப்பு நோய் நீங்கிடவும், சனி பகவான், குரு பகவான் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் காணலாம். அவ்வாறான பல கோயில்களுக்கு நேரில் சென்று தரிசித்த நெகிழ்வோடு எழுதி இருக்கிறார் நூலாசிரியர் மயன். வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் படித்துவிட்டு போகிற புத்தகமல்ல இது. வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நற்காரியங்களுக்குப் பயன்படும் இந்தப் புத்தகம், உள்ளத்துக்கு ஒளிகொடுக்கும் காகித விளக்கு!
RS. 81 More...by பூ.கொ.சரவணன்
எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்று பிரமிக்க வைத்தவர்கள் உருவானது எப்படி? வெற்றி சும்மா இருந்தால் வருமா? வெற்றியாளர்களின் மறுபக்கம் என்ன? வரலாற்றில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய சுவாரசியங்கள் நிறைந்த தகவல்களைத் தருகிறது இந்த நூல். வெற்றி பெறத்துடிக்கும் உங்களுக்குத்தான் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் போற்றப்படும் ஒருவர் பெர்னாட்ஷா. அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்குத் தகவல் சொன்னார்கள், “உங்களுக்கு நோபல் பரிசு ஷா” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்குக் கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை; “அது போன வருடம் எழுதியது, உயிருக்குத் தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்குக் கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ளப் போகவே இல்லை. இதுபோன்ற வரலாற்று மேதைகளின் மகத்துவம் நிறைந்த வாழ்வியலைப் பற்றி நிறைய தகவல்களை அள்ளித் தந்துள்ளார் நூலாசிரியர். பெர்னாட்ஷா சொன்னது போல.. வாழ்க்கை உங்களைக் கண்டடைவது இல்லை; உங்களைப் படைத்துக்கொள்வது என்பதற்கேற்ப உங்களை நீங்கள் படைத்துக் கொள்ள நீங்கள் படிக்க வேண்டியது இந்த வரலாற்று நாயகர்களை பற்றித்தான் என்பது இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்து கொள்வீர்கள். வாசியுங்கள்.. உங்களுக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்திருக்கின்றன.
RS. 172 More...by வி.ராம்ஜி
கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா? எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருப்பட்டூர் வந்து இறைவனைத் தரிசித்து எல்லா வளமும் பெறலாம். இங்கு அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர் ஆலயங்கள் குறித்தும், திருப்பட்டூர் அற்புதங்கள் குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் சக்தி விகடனில் தொடராக வந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். படிக்கப் படிக்க மெய்சிலிர்க்கும் அற்புதங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. வியாக்ரபாதர் பூஜித்த காசி விஸ்வநாதர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், புலிக்காலால் அவர் உண்டாக்கிய தீர்த்தக்குளம், விதி கூட்டி அருளிய பிரம்மா, சுந்தரர், மாசாத்தனார் என எல்லோரையும் படிக்கப் படிக்க, நாமும் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. திருப்பட்டூர் என்று சொல்லப்படும் திருப்பிடவூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தலபுராண தெய்வீகத் தகவல்களை அற்புதமாகத் தொகுத்து, ஆன்மிக அன்பர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வி.ராம்ஜி. இங்கு வந்து தரிசித்ததால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு நலம் பல பெற்ற பலரின் அனுபவங்களை நெகிழ்வோடு விவரித்துள்ளார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சரண் புகுந்தோரின் வாழ்வில், எல்லா வளங்களும் அருளி ஆட்கொள்ளும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்க இந்த நூல் உங்களையும் அழைத்துச் செல்லும்!
RS. 88 More...by பாரதி தம்பி
தண்ணீருக்காக அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலும் தகராறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாடுகளுக்கிடையே தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிறார்கள். குளங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்தாகிவிட்டது; அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. மழை நீரைத் தேக்கி வைக்க வழி செய்யப்படாததால் அது வீணாகக் கடலில்தான் கலக்கிறது. அரசாங்கம் தீட்டும் திட்டங்களை மட்டும் எதிர்பார்க்காமல், ஒவ்வொருவரும் மழை நீரைச் சேகரிக்கவும் அது வீணாவதைத் தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும் அந்தத் தண்ணீர் சுத்தமானதா என்றால்... அது கேள்விக்குறிதான். ஜூனியர் விகடனில் வெளிவந்தபோதே வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ‘தவிக்குதே... தவிக்குதே...’ தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்... ‘மகாராஷ்டிரா மாநில ஜல்னா மாவட்டத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் தண்ணீர் டேங்கர் லாரிகள் தயாரிக்கப்படுகின்றன’ என்னும் தகவல் நமக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. ‘ஒவ்வொரு முறை அரசு வளர்ச்சித் திட்டத்தை அறிவிக்கும்போதும் தமிழ்நாட்டில் ஓர் ஏரி பலிகொடுக்கத் தயார் செய்யப்படுகிறது என்பதே பொருள்’ என்று கூறுவதிலிருந்தே, நாளை நடக்கப் போகும் அபாயத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் நூல் ஆசிரியர் பாரதி தம்பி. தண்ணீர் மாசுபடுவதைப்பற்றி கவலைப்படும் நூல் ஆசிரியர் அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு வேலைகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு. தண்ணீரை சேமிப்போம்! பூமியைப் பாதுகாப்போம்!
RS. 77 More...by விகடன் பிரசுரம்
பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ_வாக பணியாற்றும் தமிழர்களின் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் எடுத்துக்கூறும் நூல் இது. ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நேர்காணல்கள், இப்போது நூல் வடிவம் பெறுகிறது. சி.இ.ஓ., என்றால் அசகாய சூரர்கள், அவர்களுக்கெல்லாம் ஏதோ திறமை இருக்கிறது, நமக்கெல்லாம் அது எங்கே இருக்கிறது என்பதே பரவலான எண்ணம். திறமை எல்லோருக்கும் இருக்கிறது, ஆனால் அவர்கள் எப்படி அந்தத் திறமையைக் கூர்தீட்டி வளர்த்துக்கொண்டார்கள் என்பதை, சாதனை படைத்த 23 சி.இ.ஓ._க்களின் அனுபவங்கள் விளக்குகிறது. கிட்டத்தட்ட அத்தனை பேரும், தங்கள் பெற்றோர்கள் சிறுவயதில் தங்களுக்குப் போதித்த அறிவுரைகளையே தலைமைப் பீடத்தில் பிரயோகித்திருக்கிறார்கள் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். ஏதோ ஒரு கணக்கை வைத்துக்கொண்டு தலைமை இடத்தில் இருந்து செயல்பட்டால் வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்கள் விவேகத்தையும் சாதுர்யத்தையும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தியே அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது நிச்சயம். அதேநேரத்தில் கொஞ்சம் தைரியமாக ‘ரிஸ்க்’கும் எடுத்திர
RS. 56 More...by ப.திருமாவேலன்
இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இன்றல்ல நேற்றல்ல... மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும் இந்தியாவை யார், எவ்வளவு சுரண்டுவது என்ற கொள்ளையடிக்கும் போட்டி 17&ம் நூற்றாண்டில் இருந்தே நடந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல் நடந்தது. இதுபோன்ற சுரண்டல்களைத் தடுக்க, இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947&ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனிய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் முழங்கினர். ஆனால், நடந்தது என்ன? இன்னமும் நாட்டின் பெரும் பிரச்னையாக ஊழல் உள்ளது. அது இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறது. தேசத்தந்தை மகாத்மாவின் பெயரால் ஊழல் ஓங்கி ஒலித்தது. ஆம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் ஆகியவை ஊழலுக்குத் துணை போயின. மக்களுக்கான திட்டங்களில் சுரண்டல்கள் தொடங்கின. விடுதலை அடைந்தது முதல் மன்மோகன்சிங் காலம் வரை இந்தியாவில் ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போய் இருக்கிறது என்பதை துல்லியமாக அலசி துவைத்தெடுக்கிறது இந்த நூல். இந்திய துணைக்கண்டத்தில் சுரண்டல் எதுவரை பாய்ந்திருக்கிறது? அதன் வீச்சு தேசத்தை எங்கே அழைத்துச் செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக, எடுத்துக்காட்டுக்களுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். நம் தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன? ஊழலின் ஊற்றுக்கண் யார்? சுரண்டல்காரர்கள் நம் தேசத்தை சுரண்டியது எப்படி? எளிமையான நடையில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர். சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாற்றைப் படியுங்கள். தேசம் களவு போவதை கண்டுபிடித்துக் கொள்வீர்கள்.
RS. 98 More...by எம்.சசிகுமார்
புரட்டினால் புழுதி வாசம்! ‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்திய சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்தப் படத்தை இந்தியில் செய்யும் பாக்கியம் எனக்கு வாய்த்தால் பெருமையாக இருக்கும்!’’இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை ஹிμகிஷீபோது,சற்று தயங்கினார்.‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்?’என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்!ஓர் இயக்குநராக,ஒரு நடிகராக,ஒரு தயாரிப்பாளராக முதல் முயற்சியிலேயே காலத்துக்கும் பெயர் சொல்லக்கூடிய உலகளாவிய பதிவை நிகழ்த்தி இருக்கிறார் சசிகுமார். 1980களின் காலகட்டத்தில் மதுரையின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக சசிகுமார் பதிவு செய்திருக்கும் விதம், சினிமாவை வாழ்வியல் வடிவமாக எடுக்கத் துடிக்கும் அத்தனை பேருக்குமான பயிற்சி.‘80களின் கதை என்றபோது எல்லோரும் சிரித்தார்கள்’எனத் தனக்கான முதல் அடி விழுந்த நிகழ்வு தொடங்கி படத்தை வெற்றிகரமாக முடித்தது வரை சகத்தோழனாக சசிகுமார் சொல்லச்சொல்ல அத்தனை பிரமிப்பு. இயக்குநர் பாலாவின் அணிந்துரை புத்தகத்தின் மயிலிறகு பக்கம்.இயக்குநர் அமீரின் ‘சுப்ரமணியபுரம்’ படம் குறித்த பார்வையும், சசிகுமார் மீதான அளவீடும் வழக்கம்போல் புயல்.திரைக்கதையாக மட்டுமே அல்லாது படம் குறித்த விரிவான பார்வையைப் பதிவு செய்ய ‘சசிகுமார்,மிஷ்கின்,கதிர் சந்திப்பு’இந்தப் புத்தகத்தின் ரத்தினப் பக்கங்களாகப் பதிவாகி இருக்கின்றன.‘சுப்ரமணியபுரம்’ எப்போது புரட்டினாலும் புழுதி வாசம் வீசும் காலக்கல்வெட்டு!
RS. 105 More...by நீரை. மகேந்திரன்
வாடகை வீட்டில் இருப்பதில் பல அசௌகரியங்கள் உண்டு. எப்போது வீட்டுக்காரர் காலி செய்யச் சொல்லுவாரோ என்ற பயம் அடி மனதில் எப்போதும் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் காலி செய்யலாம் என்பதால் நம் இஷ்டத்துக்குச் சில பொருட்களைக்கூட வாங்க முடியது. ஆகவே, கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டுமானால் சொந்த வீடுதான் கட்ட வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். சொந்த வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதில் பல சிரமங்கள் இருப்பதால் அது கனவாகவே இருக்கும். அந்தக் கனவை நனவாக்கும் விதமாக இந்த நூலை எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் நீரை. மகேந்திரன். வீட்டு மனையை எப்படி வாங்க வேண்டும், மனையின் நாற்புற அளவுகளும் வெவ்வேறு அளவில் இருந்தால் எதனால் அதை வாங்கக் கூடாது, மனையை வாங்குவதற்கு முன் எப்படித் தேர்ந்து எடுப்பது, எப்படிப் பார்வையிடுவது, எந்தக் காலத்தில் போய்ப் பார்த்தால் பிற்காலத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம், மனையை வாங்குவதற்கு முன் எப்படி ஏமாறாமல் இருக்கலாம், எந்தெந்தப் பத்திரத்தைப் பார்வையிட வேண்டும் போன்ற சகல விஷயங்களையும் எழுதியிருக்கிறார். வீட்டு மனையை வாங்குவதில் தொடங்கி வீடு கட்டிக் குடியேறுவது வரை அத்தனை விஷயங்களையும் விளக்கி எழுதியிருக்கிறார். வீட்டைக் கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வரைபடம் தயாரித்தல், அதில் சிக்கல் இல்லாமல் முடிப்பது, கட்ட ஆரம்பிப்பதற்கு முன் பெற வேண்டிய மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கட்டும்போது கமர்ஷியல் அடிப்படை மின் இணைப்பு, கட்டி முடித்தவுடன் அதை வீட்டு உபயோகத்துக்கு மாற்றிக்கொள்வது, கட்டும்போது எந்தெந்தக் கட்டுமானத்துக்கு செங்கலோ, சிமென்டோ எப்படிப் பயன்படுத்துவது போன்ற நுணுக்கமான விஷயங்களை எழுதியிருக்கிறார். நாணயம் விகடனில் தொடராக வந்து பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் உங்கள் கைகளில் நூலாக இப்போது தவழ்கிறது. இந்த நூல் உங்கள் நிழலில் உங்களை வாழ வைக்கப்போவது உறுதி!
RS. 74 More...