Cart is Empty
by முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். _ ‘நோய் இன்னதென்று அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியைக் கண்டுபிடித்து, உரிய மருத்துவ உதவியைப் பிழையில்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நோய் அடியோடு ஒழிந்து விடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. முதுமையில், உடல் தளர்ச்சியினாலும், சத்தில்லாத உணவினாலும் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுத்து உடல்நலத்தைப் பாதுகாக்க, உணவு முறையையும், உடற்பயிற்சியையும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். நோயின் அறிகுறி தெரிந்தால் அதை அடியோடு ஒழிக்க முயற்சி செய்யவேண்டும். முதுமையில் வரும் நோய்கள் என்னென்ன... அந்த நோய்கள் வருவதற்கான காரணங்கள் என்னென்ன... நோய் வந்துவிட்டால் அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது... நோய்க்குரிய சிகிச்சை முறைகள் என்ன... மருந்துகளை உட்கொள்ளும் முறைகள் என்ன..? _ இப்படி பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் சொல்கிறார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன். இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் ‘கேள்வி_பதில்’ பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் இந்த நூலைப் படித்துத் தெரிந்துகொண்டால், தங்கள் தாத்தா, பாட்டி, தாய், தந்தை ஆகியோரின் நிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டவும் இந்த பதில்கள் உதவும்!
RS. 88 More...by கு.ராமகிருஷ்ணன்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலிடம் வெளிநாட்டவர் ஒருவர், ‘What is your culture?’ என்று கேட்டபோது, ‘Our Culture is Agricultue’ என்று படேல் பதில் சொன்னார். அப்படிப்பட்ட விவசாயத்தால் செழித்து, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும், தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் விளைநிலங்கள் இன்று வேகவேகமாக இறுகி, கருகிக்கொண்டு வருகின்றன. மீத்தேன் எடுக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு, ராட்சத எந்திரங்களாலும், பிரம்மாண்ட பெட்ரோல் கிணறுகளாலும் பயிர் குலுங்கும் விளைநிலங்கள் பாழ்பட்டுப் போவதைக் கண்டு கதிகலங்கி நிற்கின்றனர், டெல்டா பகுதி விவசாயிகள். மீத்தேனை எடுக்க உறிஞ்சப்படும் நீரின் அளவு, அதனால் சூறையாடப்படும் ஆறுகளின் கதி என்னவாகும் என்ற புள்ளிவிவரமே எதிர்காலம் என்னவாகுமோ என்ற அதிர்ச்சியைக் கொடுக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பெரிய பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல், கேஸ் கிணறுகளால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களும் விவசாயிகளும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பேராபத்தைகளையும் விரிவாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர் கு.ராமகிருஷ்ணன். பசுமை விகடனில் தொடராக வெளிவந்தபோது பலரையும் மீத்தேனுக்கு எதிராகக் குரல்கொடுக்க வைத்தது. யானை கட்டி போரடித்த மண், இன்று மீத்தேன் அசுரனால், எப்படியெல்லாம் இயற்கை வளம் குறைந்து அழிந்து வருகிறது என்பதை ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகிறது இந்த நூல்.
RS. 60 More...by செ.திவான்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.
RS. 77 More...by செ.திவான்
காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஓர் அடிமை அரசன்தான் மாலிக்காபூர். சமூகக் குற்றவாளியாக, கொடூரனாக, மத நல்லிணக்கத்தை மிதித்தவனாக மாலிக்காபூரை பலரும் சொல்வது உண்டு. தென்னகப் படையெடுப்பு நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் சிலர், அவரைக் கொள்ளைக்காரனைப்போல் சித்திரித்தும், தென்னாட்டையே துவம்சம் செய்துவிட்டதுபோலவும் சொல்கிறார்கள். 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்த மாலிக்காபூரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவந்த நிகழ்வுகளையும் இந்த நூலில் ஆணித்தரமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். மேலும், சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளையும் விமர்சித்து வெளியான பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். வரலாற்று நிஜங்களை முற்றிலுமாக படித்து உணர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அழகாகக் கூறும் அற்புத நூல்களில் இதுவும் ஒன்று.
RS. 56 More...by மதன்
ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று பிரத்தியேகமாக காரெக்டர்களை உருவாக்கி, விகடன் நடுப்பக்கங்களில் அவர்களை மதன் உலா வரச்செய்த போது விலா நோகச் சிரித்து மகிழ்ந்தார்கள் வாசகர்கள். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா... இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மதன் ஜோக்குகளில் வாசகங்களை மட்டும் படித்துவிட்டுப் பக்கங்களைப் புரட்டிவிட முடியாது. அதற்கான படங்களையும் உற்றுக் கவனிக்க வைத்தவர் அவர். நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்கூட மதனின் கை வண்ணத்தில் வித்தியாசமாகத் தெரிவார்கள். அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரும், தொந்தியும் தொப்பையுமாக உருவத்தை வைத்துக் கொண்டு வேறு சிலருமாக... குறும்பு கொப்புளிக்கும் படங்கள் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட சமயத்தில் மதன் வரைந்த ஜோக்குகளும், கார்ட்டூன்களும் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த ஜோக்குகளின் தொகுப்புதான் இது.
RS. 56 More...by மதன்
நான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் படத்துடன் நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக் கூடியது கார்ட்டூன். அதுமட்டுமல்ல... நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் அரசியல் மற்றும் சமூக கார்ட்டூன்கள், சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்! சில சமயங்களில், சம்பந்தப்பட்டவர்களை முகம் சிவக்கவும் செய்துவிடும். ஆரம்பக் காலத்திலிருந்தே கார்ட்டூன்களில் தனி முத்திரை பதித்து வந்திருக்கிறது ஆனந்த விகடன். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆரம்பித்து இன்று வரையில் விகடன் கார்ட்டூன்களுக்கு தனி மவுசு உண்டு. முக்கியமாக, தேர்தல் காலங்களில் விகடனில் வெளியாகும் கார்ட்டூன்கள், வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்திக்க வைத்ததும் உண்டு! 1969_ல் விகடனுடன் இணைந்தவர் மதன். தொடக்கத்தில் கேரிகேச்சர்கள் வரைந்து, படிப்படியாக முன்னேறி, கார்ட்டூன்கள் வரைவதில் தனக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக் கொண்டவர். கார்ட்டூன்களில் மெலிதாக, சிக்கனமாக கோடுகளைப் (Strokes) பயன்படுத்துவது அவருடைய ஸ்டைல். பின்னாட்களில் ஓர் எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இன்றுவரையில
RS. 133 More...by டி.கே.இரவீந்திரன்
இருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சுற்றிலும் சூழ்ச்சிச் சுற்றங்கள். அவர்களுக்கு அடிபணியும் அலுவலர்கள். தன் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யப் போதுமான அறிவைத் தேடிக்கொண்டு, சூழ்ச்சிகளைச் செவ்வனே முறியடித்தார். வேட்டையாடுவதிலும் வீர விளையாட்டிலும் மட்டுமே விருப்பமுடையவர் போல வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும் திறமையாக நாட்டை ஆண்டார். அக்பர். சிறந்த ஓவியர், எழுத்தாளர், போர்வீரர், இசைப் பிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைப் பெற்றிருந்தவர். ஆட்சி அதிகாரம் தன் கைக்கு வந்ததும் தலைகால் தெரியாமல் ஆடவில்லை. மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவது எப்படி என்ற சிந்தையில்தான் அவர் கவனம் இருந்தது. அடக்குமுறையாலும் அக்கிரமத்தாலும் இதுவரை மூதாதையர் வளைத்துப்போட்ட இந்தப் பேரரசில் மக்களின் ஆதரவைப் பெறுவது ஒன்றே தலையாய செயல் என்று புரிந்துகொண்டார். இஸ்லாமியர் அல்லாதாரைப் புரிந்துகொள்ளவும் சமயச் சச்சரவு இன்றி தன் பேரரசை நடத்திச் செல்லவும் முற்பட்டார். அவரவர் மதத்தின் நற் கருத்துகளை எல்லோரும் பரிமாறிக்கொள்வதையே விரும்பினார். அக்பரைத் தங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியும் சிலருக்கு இருந்தது. ஆனால், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் ஆகிய அனைத்து மத அர்த்தங்களையும் உணர்ந்தவர் அக்பர். தானாகவே தீன் இலாகி என்ற ஒரு மதத்தையும் தோற்றுவித்தார். அவர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் அக்பரைக் குறைகூறியும் இருக்கிறார்கள். அக்பர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட வாரிசு நெருக்கடிகள், வளர்ப்புத் தாயால் விளைந்த கொடூரங்கள் ஆகிய நெருப்பாற்றில் அவர் வெற்றிகரமாக நீந்திக் கரையேறி ஆட்சி செய்தது, பதேப்பூர் சிக்ரி என்ற தலைநகரை உருவாக்கியது ஆகியவற்றை நூல் ஆசிரியர் விறுவிறுப்புடன் விளக்குகிறார். மாமன்னரின் அக்பரின் வியக்க வைக்கும், சுவாரசியமான வரலாற்றைப் படியுங்கள்!
RS. 67 More...by விகடன் பிரசுரம்
‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல’ - ஜூனியர் விகடன் இதழ் செயல்பட்டு வருவதை அதன் லட்சக்கணக்கான வாசகர்கள் அறிவார்கள். ‘தமிழ் மக்களின் நாடித் துடிப்பு’ என்று அதன் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், வாசகர்களால் வழங்கப்பட்ட முத்திரை வரிகள்தானே! ஜூ.வி. இதழ்களில் வெளியாகும் ‘மிஸ்டர் கழுகு’ ஒரு மகுடம் என்றால், அதில் வைரமாக ஜொலிப்பது ‘கழுகார் பதில்கள்’! ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவரின் 2000 ஆண்டு இலக்கணத்துக்கு உதாரணமாக, நடுநிலை தவறாமல், வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு பார்க்காமல் துணிச்சலுடன் ‘கழுகார்’ சொல்லிவரும் பதில்கள், தமிழக அரசியல் வாசகர்களின் அறிவுச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளன. 2011 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ‘கழுகார் பதில்கள்’ பகுதி மட்டும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அந்தந்த வாரத்து நாட்டு நடப்புகளுக்கான விமர்சனங்களாக இல்லாமல், எதிர்காலத்தையும் வழிநடத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. கடந்த காலச் சீர்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக வரலாற்றுப் புத்தகத்தின் தன்மையையும், நிகழ்காலத்தை விமர்சிப்பதால் செய்திப் புத்தகமாகவும், அரசியல், சமூக, பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதால் நல்லதோர் அரசியல் வரலாற்று ஆசிரியனாகவும் அமைந்துவிட்டது. இப்படி ஒரு முப்பரிமாணத்தை எட்டி உள்ள புத்தகம் இது! அணிந்துரை எழுதியுள்ள திரு. தமிழருவி மணியன் அவர்கள் ‘இந்தப் புத்தகம் வெளிவருவதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு’ என்று எழுதி உள்ளார். அந்த மகிழ்ச்சியை அனத்து வாசகர்களும் கட்டாயம் அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.
RS. 63 More...by பாரதி தம்பி
நினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே! அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. மறுபக்கமோ அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்படுகின்றன. ‘நல்ல பள்ளிக்கூடம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே, பெற்றோரின் மனதில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் சித்திரம்தான் வந்துபோகிறது. ஏன் இந்த நிலை? அரசை விட தனியார் பிரமாண்டமானதா? தனியார் பள்ளிகளின் அதிவேக வளர்ச்சியும், அரசுப் பள்ளிகளின் அதலபாதாள வீழ்ச்சியும் தனித்தனியானதா? அரசுப் பள்ளிகளை மீட்கவே முடியாதா? ‘முடியும்’ எனில், அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு நடைமுறையில் இருந்து விடை அளிக்கிறார் பாரதி தம்பி. நமது கல்விச்சூழல் குறித்த அவ நம்பிக்கைகளை மட்டுமே விட்டுச் செல்லாமல், நம்பிக்கை தரும் அம்சங்களையும் தொட்டுச் செல்வதுதான் இந்த நூலின் சிறப்பு. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது ஏராளமான வாசகர்களின், ஆசிரியர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், தமிழகக் கல்விச்சூழலில் மிகப் பெரும் விவாதங்களையும் தூண்டியுள்ளன. கள ஆய்வு, புள்ளிவிவரங்கள், நிபுணர்களின் கருத்துகள் என கல்வி சார்ந்த அனைத்து அம்சங்களையும் தாங்கி வெளியாகும் இந்த நூல், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
RS. 88 More...by விகடன் பிரசுரம்
சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்புறக் காட்டியிருக்கிறார் என்பதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு சொற்பொழிவாளர்கள் நயத்துடன் முன்வைத்தனர். காலத்தைக் கடந்து வந்த கம்பனின் கருத்துமணிகள், காற்றோடு வெறுமே கரைந்து போய்விடக்கூடாது; எழுத்தில் வடித்தால் அந்த எண்ணத் துளிகள் எண்ணற்ற வாசகர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் விகடன் பிரசுரம் இதைத் தொகுத்து நூலாக்க முனைந்தது. இந்நிகழ்வின் பொறுப்பாளர்களான சென்னை கம்பன் கழகம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் ஆகியோர் மகிழ்வுடன் அனுமதியளித்தனர். தங்கள் சொற்பொழிவுகளைத் தொகுக்க மனமுவந்து அனுமதியளித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்று தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த உதவினார். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கனிவு கொடுக்கும்
RS. 50 More...