Cart is Empty
by சி.சரவணன்
இன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத் தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன? அவற்றைப் பெறுவது எப்படி? கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன? எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கும் தகுதி என்ன? எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன். இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!
RS. 50 More...by மயன்
கோயில்கள் நம் நம்பிக்கைக்கான வாயில்கள். வாழ்வின் சுழலில் துன்பங்கள் துரத்தும்போது ‘என்ன செய்தால் இவை அகலும்’ எனத் தெரியாமல் அல்லாடுகிறோம் நாம். பரிகாரத் தலங்களை நோக்கி ஓடுகிறோம். அப்படிப்பட்ட பரிகாரக் கோயில்களின் சிறப்பு குறித்தும், மகிமை குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். படிக்கப் படிக்க அந்தக் கோயில் தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த உணர்வும், அந்தக் கோயில்களுக்கு நாமும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுகிறது. பக்திக்கும், பழைமை பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் கோயில்கள், வரலாறு, வாழ்க்கைமுறை, கலை, இலக்கியம், இதிகாசம், காப்பியம், மருத்துவம், ஜோதிடம், நிர்வாகம், நீதிமுறை, ஆகமம் போன்ற வாழ்வியலை நமக்கு வெளிப் படுத்தும் அரிய கருவூலங்களாகவும் வாழ்வை வளமாக்கும் தலங்களாகவும் திகழ்கின்றன. திருமணத்தடை நீங்கிடவும், பிரிந்த கணவன்&மனைவி சேர்ந்து வாழவும், குழந்தை இல்லாத குறையைப் போக்கிடவும் சர்ப்ப தோஷம் போக்கவும் பல்வேறு பரிகாரக் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று பயன்பெறுவதை அறியலாம். அதேபோல் கண்ணொளி பெற்றிடவும், ஊனம் நீங்கிடவும், வயிற்றுவலி, வலிப்பு நோய் நீங்கிடவும், சனி பகவான், குரு பகவான் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் காணலாம். அவ்வாறான பல கோயில்களுக்கு நேரில் சென்று தரிசித்த நெகிழ்வோடு எழுதி இருக்கிறார் நூலாசிரியர் மயன். வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் படித்துவிட்டு போகிற புத்தகமல்ல இது. வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நற்காரியங்களுக்குப் பயன்படும் இந்தப் புத்தகம், உள்ளத்துக்கு ஒளிகொடுக்கும் காகித விளக்கு!
RS. 81 More...by வி.ராம்ஜி
கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா? எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருப்பட்டூர் வந்து இறைவனைத் தரிசித்து எல்லா வளமும் பெறலாம். இங்கு அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர் ஆலயங்கள் குறித்தும், திருப்பட்டூர் அற்புதங்கள் குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் சக்தி விகடனில் தொடராக வந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். படிக்கப் படிக்க மெய்சிலிர்க்கும் அற்புதங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. வியாக்ரபாதர் பூஜித்த காசி விஸ்வநாதர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், புலிக்காலால் அவர் உண்டாக்கிய தீர்த்தக்குளம், விதி கூட்டி அருளிய பிரம்மா, சுந்தரர், மாசாத்தனார் என எல்லோரையும் படிக்கப் படிக்க, நாமும் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. திருப்பட்டூர் என்று சொல்லப்படும் திருப்பிடவூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தலபுராண தெய்வீகத் தகவல்களை அற்புதமாகத் தொகுத்து, ஆன்மிக அன்பர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வி.ராம்ஜி. இங்கு வந்து தரிசித்ததால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு நலம் பல பெற்ற பலரின் அனுபவங்களை நெகிழ்வோடு விவரித்துள்ளார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சரண் புகுந்தோரின் வாழ்வில், எல்லா வளங்களும் அருளி ஆட்கொள்ளும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்க இந்த நூல் உங்களையும் அழைத்துச் செல்லும்!
RS. 88 More...by உ.வே.சாமிநாத ஐயர்
‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா. காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையின் பார்வைக்கு எடுத்து வந்தவர் நம் தமிழ்த் தாத்தா அவர்களே! கல்தோன்றும் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் மொழி, இன்றைக்கும் இளமை குன்றாமல் இருப்பதற்கு தமிழ் அறிஞர்களின் தமிழ் மொழி மீதான அர்ப்பணிப்புதான் முக்கியக் காரணம். தமிழுக்காகவே தன்னை வார்த்துக் கொண்ட அறிஞர் பெருமக்களில் தனித்து நிற்பவர் உ.வே.சா. தமிழின் தொன்மைக்கும் உண்மைக்கும் உ.வே.சா. அவர்களின் தீவிரமான தேடுதலில் விளைந்த படைப்புகளே ஆதாரங்கள். இன்றைய தமிழ்த் தலைமுறைப் பிள்ளைகளுக்கான பெரும் சொத்துக்களைத் தேடித்தந்த உ.வே.சா. அவர்கள், தமிழின் அரும்பெரும் நூல்கள் எப்படி எல்லாம் மீட்கப்பட்டன என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இந்த நூலில் விளக்கி இருக்கிறார். பதிப்பிக்கப்பட்ட பேரறிவுப் புத்தகங்களை வாசிக்கும் நாம், அவை எப்படி எல்லாம் தமிழ்த் தாத்தாவால் மறு சீரமைக்கப்பட்டன என்பதை அறிய வேண்டியது வரலாற்றுக் கடமை. இதனை அணிந்துரை வடிவில் செவ்வனே வலியுறுத்தி இருக்கிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. ‘கொள்ளக் குறையாத சரித்திரமாக’ இதனைச் சுட்டிக்காட்டிச் சிலிர்க்கிறார் ஒளவை நடராசன். ஓலைச்சுவடி வடிவில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களை அச்சு வடிவில் மீட்டுக் கொடுத்த தமிழ்த் தாத்தாவின் சுய சரித்திரம் இது. தமிழ்த் தலைமுறையினர் தங்களின் பெருமைமிகு அடையாளமாக - பேரறிவுப் புதையலாக - தூய பரிசாக - தொன்மைச் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டிய இந்த அரிய நூலை, தொன்மை குன்றாத சிறப்போடு வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது.
RS. 263 More...by செ.திவான்
காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஓர் அடிமை அரசன்தான் மாலிக்காபூர். சமூகக் குற்றவாளியாக, கொடூரனாக, மத நல்லிணக்கத்தை மிதித்தவனாக மாலிக்காபூரை பலரும் சொல்வது உண்டு. தென்னகப் படையெடுப்பு நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் சிலர், அவரைக் கொள்ளைக்காரனைப்போல் சித்திரித்தும், தென்னாட்டையே துவம்சம் செய்துவிட்டதுபோலவும் சொல்கிறார்கள். 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்த மாலிக்காபூரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவந்த நிகழ்வுகளையும் இந்த நூலில் ஆணித்தரமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். மேலும், சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளையும் விமர்சித்து வெளியான பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். வரலாற்று நிஜங்களை முற்றிலுமாக படித்து உணர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அழகாகக் கூறும் அற்புத நூல்களில் இதுவும் ஒன்று.
RS. 56 More...by செ.திவான்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.
RS. 77 More...by எம்.சசிகுமார்
புரட்டினால் புழுதி வாசம்! ‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்திய சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்தப் படத்தை இந்தியில் செய்யும் பாக்கியம் எனக்கு வாய்த்தால் பெருமையாக இருக்கும்!’’இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை ஹிμகிஷீபோது,சற்று தயங்கினார்.‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்?’என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்!ஓர் இயக்குநராக,ஒரு நடிகராக,ஒரு தயாரிப்பாளராக முதல் முயற்சியிலேயே காலத்துக்கும் பெயர் சொல்லக்கூடிய உலகளாவிய பதிவை நிகழ்த்தி இருக்கிறார் சசிகுமார். 1980களின் காலகட்டத்தில் மதுரையின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக சசிகுமார் பதிவு செய்திருக்கும் விதம், சினிமாவை வாழ்வியல் வடிவமாக எடுக்கத் துடிக்கும் அத்தனை பேருக்குமான பயிற்சி.‘80களின் கதை என்றபோது எல்லோரும் சிரித்தார்கள்’எனத் தனக்கான முதல் அடி விழுந்த நிகழ்வு தொடங்கி படத்தை வெற்றிகரமாக முடித்தது வரை சகத்தோழனாக சசிகுமார் சொல்லச்சொல்ல அத்தனை பிரமிப்பு. இயக்குநர் பாலாவின் அணிந்துரை புத்தகத்தின் மயிலிறகு பக்கம்.இயக்குநர் அமீரின் ‘சுப்ரமணியபுரம்’ படம் குறித்த பார்வையும், சசிகுமார் மீதான அளவீடும் வழக்கம்போல் புயல்.திரைக்கதையாக மட்டுமே அல்லாது படம் குறித்த விரிவான பார்வையைப் பதிவு செய்ய ‘சசிகுமார்,மிஷ்கின்,கதிர் சந்திப்பு’இந்தப் புத்தகத்தின் ரத்தினப் பக்கங்களாகப் பதிவாகி இருக்கின்றன.‘சுப்ரமணியபுரம்’ எப்போது புரட்டினாலும் புழுதி வாசம் வீசும் காலக்கல்வெட்டு!
RS. 105 More...by காசி.வேம்பையன்
மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர் விளைச்சல்’ என்ற ஆசையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று,செயற்கை இடுபொருட்களின் மூலமும், இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மண்ணின் உயிர்ச்சத்துகள் உறியப்படுவது தொடர்கதையாகிவிட்டது.வெத்து மண்ணாக இருந்த மொத்த மண்ணும்,சத்துமிக்க மண்ணாக மாறும் காலம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. ஆம்! பசுஞ்சாணம்,வைக்கோல், கால்நடைகளின் கழிவு என, விளைநிலத்தில் இயற்கை வழி இடுபொருட்களையே உரங்களாக மாற்றி,நாட்டு ரக விதைகளை நட்டு, சமவெளித் தொடங்கி மலைப் பிரதேசங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ளாமை செய்வதற்கான எளிய முறைகளை, இந்த நூல் நமக்குக் கற்றுத் தருகிறது.மேலும், இயற்கை விவசாயத்தில் குழியடிச்சான், மாப்பிள்ளைச் சம்பா, கூம்பாலை, சூரக்குறுவை, கருங்குறுவை, சீரகச்சம்பா என்று பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு விளைச்சல் செய்துவரும் விவசாயப் பெருமக்களின் உழவு அனுபவங்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன.கடந்த பல மாதங்களாக ‘பசுமைவிகடனி’ல் ‘மகசூல்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் காசி.வேம்பையன் எழுதி வெளிவந்த, இயற்கைவழி விவசாய அனுபவங்களில் தேர்ந்தெடுத்த தொகுப்பின் மொத்த பதிப்பு இது.இயற்கையோடு இயற்கையாக இணைந்து செயல்பட்டு,வளத்தின் அடிப்படையில் வருமானத்தைப் பெருக்க விரும்பும் விவசாயப் பெருமக்களுக்கான விவசாய வழிகாட்டி,இந்த நூல்.
RS. 63 More...by ஜல்லிப்பட்டி பழனிச்சாமி
இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுதல் தொடங்கி விமானத்தில் பணிபுரிவது வரை பல்வேறு பணிகளில் பெண்கள் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டு, வெற்றிபெற்ற பெண்களின் அனுபவங்களை அழகாகச் சொல்கிறது இந்த நூல். மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து, தேசிய அளவில் சிறந்த பெண்மணிக்கான பட்டத்தைப் பெற்றுள்ள, முதுகலைஜீ பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வி, பளபளக்கும் பட்டுக்கூடு வளர்ப்பில் விருதுபெற்ற பாப்பாத்தி, மார்கழி மற்றும் தையில் பெய்யும் பனியின் ஈரத்தைக்கொண்டே பனிக்கடலை பயிர் செய்யும் சாரதாமணி, பட்டை அவரையில் எட்டு டன் எடுக்கும் கவிதா, குறும்புடலையில் கொடிகட்டிப் பறக்கும் கௌசல்யா, கோழிக் கொண்டை பூ பூரிப்பில் தமிழரசி, எலுமிச்சையில் வெற்றிக்கனி பறிக்கும் ஜெயபாரதி, சின்ன வெங்காயம் சாகுபடியில் வஞ்சிக் கொடி, கனகாம்பரம் பூ விற்பனையில் பூங்கோதை என்று விவசாயத்தில் வெற்றிக்கொடி கட்டிய பெண்களின் பட்டியல் நீள்கிறது. மேலும், விவசாயம் சார்ந்த பண்ணைக் கோழி வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு பற்றியும் இங்கே சொல்லப்பட்டு இருக்கிறது. விவசாயத்தில் முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில், அத்தனை பேரின் விளைச்சல் நிலங்களுக்கே சென்று, அவர்களின் அனுபவங்களை ஆதாரங் களோடு தகவல்களைத் திரட்டி இந்த நூலில் கொடுத்துள்ளார் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி. இந்தக் கட்டுரைகள் பசுமை விகடனில் வெளி வந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உழைப்பால் உயர்வு பெற விரும்புபவர்களுக்கும், சாதிக்க நினைக்கும் விவசாயப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்தரும், இந்தப் புத்தகம்!
RS. 63 More...by வேங்கடம்
ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் குறித்த பதிவுகள் அதிகம். ஹிட்லர் விட்டுச்சென்ற வரலாற்று எச்சங்களைக் கண்டவராக, நூல் ஆசிரியர் வேங்கடம் புதுமுகப் பார்வையோடு ஹிட்லரை இங்கே பதிவு செய்கிறார். உணவுக்கே பிறரை எதிர்பார்த்திருந்த ஒருவன், நாட்டையே தனக்குக் கீழ் கொண்டுவந்த அதிரடியை பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக அற்புதமான எழுத்து நடையில் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர் வேங்கடம். ஹிட்லர் யார், அவருடைய பிறப்பின் பின்னணி, வியன்னாவில் பிறந்து ஜெர்மனிக்கு வந்த கதை, ஜெர்மானிய ராணுவப் படையில் ஆரம்ப காலப் பங்கு, அந்த ராணுவப் படையையே தன் விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்டிவைத்த ரகசியம், உலகத் தலைவர்களின் பார்வையில் ஹிட்லரின் நிலை, யூத பாரம்பரியத்தில் வந்த ஹிட்லருக்கு யூத இனத்தின் மீது தீராப் பகை உண்டானதற்கான நிகழ்வுகள், ஆட்சியின் உச்சத்தில் இருந்து அநாதையான மர்மம், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டதற்கான தடங்கள் என ஹிட்லரின் வாழ்வில் நடந்த ஒவ்வோர் அசைவுகளையும் இந்த நூல் சுவைபட விவரிக்கிறது. மேலும், ஹிட்லரின் மதம், அகிம்சை எழுத்துகளால் ஹிட்லருக்கு அறிவுரை கூறிய காந்தியின் கடிதங்கள், சர்ச்சில், முசோலினி, ஸ்டாலின் போன்ற உலகத் தலைவர்களுடனான தொடர்பு, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் பங்கு, மேற்கு ஜெர்மனிக்கும் கிழக்கு ஜெர்மனிக்கும் இடையே எழுந்த சுவரின் சுவாரஸ்யம், ஹிட்லரின் அந்தரங்க வாழ்க்கையில் பதிந்திருந்த பல்வேறு ரகசியங்கள், ஹிட்லரின் ரத்த வெறி செய்கைகளுக்கு மனோதத்துவ நிபுணர்களின் பதில்கள் என அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. வரலாற்றையும், அதன் பின்னணிகளையும் அறியத் துடிக்கும் வரலாற்றுப் பிரியர்களுக்கு, இந்த நூல் ஓர் அறுசுவைப் படையல்!
RS. 74 More...