Cart is Empty
by மதன்
ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ஹாய் மதன்’ பகுதிக்கு கேள்விகளை பவுன்சர்களாக வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க, அவற்றை சவாலாக ஏற்று, சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசிக் கொண்டிருக்கிறார் மதன்! (T20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்த சமயத்தில் எழுதப்பட்டது!) பொது நூலகங்களிலும் சரி, வீடுகளில் புத்தக அலமாரிகளிலும் சரி, கண்டிப்பாக இருக்க வேண்டிய நூல்கள் வரிசையில் ‘ஹாய் மதன்’ தொகுப்புகள் முக்கிய இடம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். தேவைப்படும் நேரங்களில், தேவைப்படும் பொது அறிவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஒரு கையேடாக இவை பயன்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் முதல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இதுவரை வெளியான ஐந்து பாகங்களையும் பாதுகாத்து வரும் தகவலை எங்களுக்கு வரும் கடிதங்கள் மூலமாக அறியமுடிகிறது. மதன் பதில்களை சமூகத்தில் பெருமைக்குரிய இடத்தில் இருப்பவர்களும் உன்னிப்பாகப் படித்து வருகிறார்கள். உதாரணமாக, இந்த நூலில், ‘கவிஞர் வைரமுத்துவின் நோபல் பரிசு நம்பிக்கை வீண்போகாமல் இருக்குமா?’ என்ற ஒரு கேள்விக்கு, மதன் அளித்த பதிலுக்கு, வைரமுத்து எழுதிய
RS. 70 More...by விகடன் பிரசுரம்
வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ!’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்
RS. 50 More...by விகடன் பிரசுரம்
பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ_வாக பணியாற்றும் தமிழர்களின் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் எடுத்துக்கூறும் நூல் இது. ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நேர்காணல்கள், இப்போது நூல் வடிவம் பெறுகிறது. சி.இ.ஓ., என்றால் அசகாய சூரர்கள், அவர்களுக்கெல்லாம் ஏதோ திறமை இருக்கிறது, நமக்கெல்லாம் அது எங்கே இருக்கிறது என்பதே பரவலான எண்ணம். திறமை எல்லோருக்கும் இருக்கிறது, ஆனால் அவர்கள் எப்படி அந்தத் திறமையைக் கூர்தீட்டி வளர்த்துக்கொண்டார்கள் என்பதை, சாதனை படைத்த 23 சி.இ.ஓ._க்களின் அனுபவங்கள் விளக்குகிறது. கிட்டத்தட்ட அத்தனை பேரும், தங்கள் பெற்றோர்கள் சிறுவயதில் தங்களுக்குப் போதித்த அறிவுரைகளையே தலைமைப் பீடத்தில் பிரயோகித்திருக்கிறார்கள் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். ஏதோ ஒரு கணக்கை வைத்துக்கொண்டு தலைமை இடத்தில் இருந்து செயல்பட்டால் வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்கள் விவேகத்தையும் சாதுர்யத்தையும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தியே அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது நிச்சயம். அதேநேரத்தில் கொஞ்சம் தைரியமாக ‘ரிஸ்க்’கும் எடுத்திர
RS. 56 More...by விகடன் பிரசுரம்
எப்போதுமே ஜோக் புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியும். புன்னகைத்துக் கொண்டே ஜாலியாக பக்கங்களைப் புரட்ட முடியும். அதுமட்டுமல்ல, மன அழுத்தம் ஏற்பட்டு சோர்ந்து உட்கார்ந்திருக்கும் வேளையில் ஜோக் புக் ஆறுதலான ஒரு மருந்து. ஆரம்பகாலம் முதல் ஆனந்த விகடனில் வெளியாகிவரும் ஜோக்குகளை விரும்பிப் படிக்கும் வாசகர் வட்டம் மிகப் பெரியது. இன்று வரையில் அது தொடர்ந்து வருகிறது. விகடனில் வெளியான ஜோக்குகளைத் தொகுத்து அவ்வப்போது கையடக்க நூல்களாக வெளியிட்டு வருகிறது விகடன் பிரசுரம். அந்த வகையில், 2009_ம் ஆண்டில் விகடனில் வெளியான ஜோக்குகளில் 300_ஐ இந்த நூலில் தொகுத்திருக்கிறோம். இதில் உள்ள ஜோக்குகளை படிப்பதோடு உங்கள் சுற்றத்தாரிடமும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவும், பரிசு அளித்து மகிழவும் இந்த நூல் உங்களுக்கு உதவும்!
RS. 60 More...by மதன்
நான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் படத்துடன் நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக் கூடியது கார்ட்டூன். அதுமட்டுமல்ல... நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் அரசியல் மற்றும் சமூக கார்ட்டூன்கள், சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்! சில சமயங்களில், சம்பந்தப்பட்டவர்களை முகம் சிவக்கவும் செய்துவிடும். ஆரம்பக் காலத்திலிருந்தே கார்ட்டூன்களில் தனி முத்திரை பதித்து வந்திருக்கிறது ஆனந்த விகடன். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆரம்பித்து இன்று வரையில் விகடன் கார்ட்டூன்களுக்கு தனி மவுசு உண்டு. முக்கியமாக, தேர்தல் காலங்களில் விகடனில் வெளியாகும் கார்ட்டூன்கள், வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்திக்க வைத்ததும் உண்டு! 1969_ல் விகடனுடன் இணைந்தவர் மதன். தொடக்கத்தில் கேரிகேச்சர்கள் வரைந்து, படிப்படியாக முன்னேறி, கார்ட்டூன்கள் வரைவதில் தனக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக் கொண்டவர். கார்ட்டூன்களில் மெலிதாக, சிக்கனமாக கோடுகளைப் (Strokes) பயன்படுத்துவது அவருடைய ஸ்டைல். பின்னாட்களில் ஓர் எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், இன்றுவரையில
RS. 133 More...by மதன்
ஆனந்த விகடனில் 1995ல் ஹாய் மதன் என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் மதன். ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக இது ஹிட் ஆனது! இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே! ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மலை போல் குவிய, அதிலிருந்து பொறுமையாகக் கேள்விகளைத் தேர்வு செய்து ஆதாரபூர்வமாக அவற்றுக்குப் பதில் எழுதி வருகிறார். புராணம், வரலாறு, விஞ்ஞானம்... என்று எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் பதில் கிடைக்கும் மதனிடம். அதேபோல், விலங்குகள், பறவைகள், புதிய கண்டுபிடிப்புகள்... என்று வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். காதல் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனோதத்துவம் பற்றி... என்று வித்தியாசமான சப்ஜெக்ட்களையும் இந்தப் பகுதியில் லாகவமாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் அந்தத் துறை சார்ந்த நூல்களைப் படித்து, அலசி ஆராய்ந்து, ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பதில்கள் எல்லாமே ஒரு முறை படித்துவிட்டு மறந்து விடக் கூடியதில்லை. கைவசம் அவை இருந்தால் எந்தச் சமயத்திலு
RS. 70 More...by விகடன் பிரசுரம்
கோடையில் குளிர்ந்த நீரோடையையும், மழை வருமுன் வீசும் குளிர்ந்த காற்றையும் உணரும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நம்மில் ஊடுருவி இருப்பது நகைச்சுவை உணர்வு. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சோர்வையும் நீக்கி நம் மனதைச் சமப்படுத்துவதில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செயலையும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் செய்யும்போது அதன் வலி தெரியாமல் புத்துணர்வை அளிக்கும். இப்படி, சீரியஸான கருத்தையும் சின்ன ஜோக்குகளாக எழுதி அனைவரின் மனதிலும் எளிதில் பதிய வைத்திருக்கிறார்கள் விகடனின் ஜோக் எழுத்தாளர்கள். 2007_ம் வருடம், ஆனந்த விகடனில் வெளிவந்த ஜோக்குகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கையடக்க நூலாக வெளியிட்டிருக்கிறோம். சுவைத்து, சிரித்து மகிழுங்கள்!
RS. 50 More...by முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். _ ‘நோய் இன்னதென்று அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியைக் கண்டுபிடித்து, உரிய மருத்துவ உதவியைப் பிழையில்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நோய் அடியோடு ஒழிந்து விடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. முதுமையில், உடல் தளர்ச்சியினாலும், சத்தில்லாத உணவினாலும் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுத்து உடல்நலத்தைப் பாதுகாக்க, உணவு முறையையும், உடற்பயிற்சியையும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். நோயின் அறிகுறி தெரிந்தால் அதை அடியோடு ஒழிக்க முயற்சி செய்யவேண்டும். முதுமையில் வரும் நோய்கள் என்னென்ன... அந்த நோய்கள் வருவதற்கான காரணங்கள் என்னென்ன... நோய் வந்துவிட்டால் அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது... நோய்க்குரிய சிகிச்சை முறைகள் என்ன... மருந்துகளை உட்கொள்ளும் முறைகள் என்ன..? _ இப்படி பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் சொல்கிறார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன். இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் ‘கேள்வி_பதில்’ பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் இந்த நூலைப் படித்துத் தெரிந்துகொண்டால், தங்கள் தாத்தா, பாட்டி, தாய், தந்தை ஆகியோரின் நிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டவும் இந்த பதில்கள் உதவும்!
RS. 88 More...by விகடன் பிரசுரம்
‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல’ - ஜூனியர் விகடன் இதழ் செயல்பட்டு வருவதை அதன் லட்சக்கணக்கான வாசகர்கள் அறிவார்கள். ‘தமிழ் மக்களின் நாடித் துடிப்பு’ என்று அதன் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், வாசகர்களால் வழங்கப்பட்ட முத்திரை வரிகள்தானே! ஜூ.வி. இதழ்களில் வெளியாகும் ‘மிஸ்டர் கழுகு’ ஒரு மகுடம் என்றால், அதில் வைரமாக ஜொலிப்பது ‘கழுகார் பதில்கள்’! ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவரின் 2000 ஆண்டு இலக்கணத்துக்கு உதாரணமாக, நடுநிலை தவறாமல், வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு பார்க்காமல் துணிச்சலுடன் ‘கழுகார்’ சொல்லிவரும் பதில்கள், தமிழக அரசியல் வாசகர்களின் அறிவுச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளன. 2011 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ‘கழுகார் பதில்கள்’ பகுதி மட்டும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அந்தந்த வாரத்து நாட்டு நடப்புகளுக்கான விமர்சனங்களாக இல்லாமல், எதிர்காலத்தையும் வழிநடத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. கடந்த காலச் சீர்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக வரலாற்றுப் புத்தகத்தின் தன்மையையும், நிகழ்காலத்தை விமர்சிப்பதால் செய்திப் புத்தகமாகவும், அரசியல், சமூக, பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதால் நல்லதோர் அரசியல் வரலாற்று ஆசிரியனாகவும் அமைந்துவிட்டது. இப்படி ஒரு முப்பரிமாணத்தை எட்டி உள்ள புத்தகம் இது! அணிந்துரை எழுதியுள்ள திரு. தமிழருவி மணியன் அவர்கள் ‘இந்தப் புத்தகம் வெளிவருவதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு’ என்று எழுதி உள்ளார். அந்த மகிழ்ச்சியை அனத்து வாசகர்களும் கட்டாயம் அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.
RS. 63 More...by விகடன் பிரசுரம்
ஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுதான் அடியெடுத்து வைத்தவர்கள். இப்போது அவர்களில் பலரும் பிரபலமாக வலம் வருகிறார்கள். வாழ்வியல், சூழல், முரண்பாடு, ஆவேசம் என தங்கள் வாழ்வின் அத்தனைவிதமான கூறுகளையும் சில வரிகளிலேயே இங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யதார்த்தவாதிகள். சில கவிதைகளைக் கடக்கையில் நெஞ்சு முழுக்க நிசப்தம் பரவுகிறது. அடுத்த கவிதையைப் படிக்கும் மனமின்றி முதல் கவிதையின் லயிப்பிலேயே சுருண்டு கிடக்கத் தோன்றுகிறது. தாயின் குடங்கைக்குள் ஒடுங்கிக்கொள்ளும் சிசுவைப்போல் இந்தப் புத்தகத்துக்குள் புதைந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஒன்றையன்று விஞ்சும் விதமாக இறைந்துகிடக்கும் கவிதைகள், ஒவ்வொரு பக்கத்தையும் மயிலிறகுப் பக்கமாக மலர்த்தி இருக்கின்றன. வாழ்ந்து கெட்டவனின் வீடு தொடங்கி இ-மெயிலில் வரும் இறப்புச் செய்தி வரை இந்தக் கவிதைகள் பந்திவைக்கும் விஷயங்கள் வன்மையானவை. ஒரே நேரத்தில் செவலையெனும் சித்தப்பாவுக்காக அழவைக்கவும், ‘ஏ... கோழையே...’ எனத் தீவிரவாதத்துக்கு எதிராக எழவைக்கவும் இந்தக் கவிதைகளால் முடிகிறது. நிறைய கவிதைகள், நம் நெஞ்சத்து நியாயத்தராசை வேகமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் சூத்திரங்களே இந்தக் கவிதைகள். 75 கவிதைகளையும் வாசித்து முடிக்கையில் வாழ்வின் கடைசிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிய உணர்வோடு நீங்கள் வெளிவருவீர்கள் - புது மனிதர்களாக!
RS. 50 More...