Cart is Empty
by விகடன் பிரசுரம்
பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக Ôமரம்Õ என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை காட்டுத்தனமாக வெட்டி வீழ்த்துவது சோகமான நிஜம்! Ôவாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கு மரங்கள் அவசியப்படும்போது வெட்டித்தானே ஆகவேண்டும்Õ என்பதில் சந்தேகமில்லை... ஆனால், அதுவே கண்மூடித்தனமாக நடத்தப்படும்போது அதன் பாதிப்பை மனித சமூகம் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியிருக்குமே..? Ôஅப்படியென்றால் நமக்குத் தேவையான மரங்களுக்கு எங்கே போவது..?Õ என்றொரு கேள்வி எழும். அதற்கான பதில் & ‘மரங்களை விவசாய பயிர்களாக வளர்த்தெடுப்பதுதான்!’ தற்போது, விவசாயிகளிடையே ‘மரப்பயிர் வளர்ப்பு’ என்பது பரவலாகி வருகிறது. காகிதத் தயாரிப்பில் ஆரம்பித்து கப்பல் கட்டுவது வரை, பல்வேறு தேவைகளுக்கும் மரங்கள் இன்றியமையாதவைகளாக இருக்கின்றன. இதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மரம் வளர்ப்பை பல்வேறு நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றன. இது ஒரு பணப்பயிர் என்பதாகவே தற்போது பார்க்கப்படுகிறது. மரங்கள் நம் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம், நாட்டில் மரங்கள் வளர வளர, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தம் தேவைகளைப் பூர்த்திசெய்தோடு, சூழலுக்கும் நன்மை செய்யும் வகையில் மரப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு, அசகாய சாதனைகளைப் படைத்துவரும் விவசாயிகள், Ôபசுமை விகடன்Õ இதழில் வரிசையாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, உங்களுக்காக இந்த நூலில் பதியம் போடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.
RS. 70 More...by ப.திருமாவேலன்
இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இன்றல்ல நேற்றல்ல... மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும் இந்தியாவை யார், எவ்வளவு சுரண்டுவது என்ற கொள்ளையடிக்கும் போட்டி 17&ம் நூற்றாண்டில் இருந்தே நடந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல் நடந்தது. இதுபோன்ற சுரண்டல்களைத் தடுக்க, இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947&ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனிய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் முழங்கினர். ஆனால், நடந்தது என்ன? இன்னமும் நாட்டின் பெரும் பிரச்னையாக ஊழல் உள்ளது. அது இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறது. தேசத்தந்தை மகாத்மாவின் பெயரால் ஊழல் ஓங்கி ஒலித்தது. ஆம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் ஆகியவை ஊழலுக்குத் துணை போயின. மக்களுக்கான திட்டங்களில் சுரண்டல்கள் தொடங்கின. விடுதலை அடைந்தது முதல் மன்மோகன்சிங் காலம் வரை இந்தியாவில் ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போய் இருக்கிறது என்பதை துல்லியமாக அலசி துவைத்தெடுக்கிறது இந்த நூல். இந்திய துணைக்கண்டத்தில் சுரண்டல் எதுவரை பாய்ந்திருக்கிறது? அதன் வீச்சு தேசத்தை எங்கே அழைத்துச் செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக, எடுத்துக்காட்டுக்களுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். நம் தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன? ஊழலின் ஊற்றுக்கண் யார்? சுரண்டல்காரர்கள் நம் தேசத்தை சுரண்டியது எப்படி? எளிமையான நடையில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர். சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாற்றைப் படியுங்கள். தேசம் களவு போவதை கண்டுபிடித்துக் கொள்வீர்கள்.
RS. 98 More...by பாரதி தம்பி
நினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே! அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. மறுபக்கமோ அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்படுகின்றன. ‘நல்ல பள்ளிக்கூடம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே, பெற்றோரின் மனதில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் சித்திரம்தான் வந்துபோகிறது. ஏன் இந்த நிலை? அரசை விட தனியார் பிரமாண்டமானதா? தனியார் பள்ளிகளின் அதிவேக வளர்ச்சியும், அரசுப் பள்ளிகளின் அதலபாதாள வீழ்ச்சியும் தனித்தனியானதா? அரசுப் பள்ளிகளை மீட்கவே முடியாதா? ‘முடியும்’ எனில், அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு நடைமுறையில் இருந்து விடை அளிக்கிறார் பாரதி தம்பி. நமது கல்விச்சூழல் குறித்த அவ நம்பிக்கைகளை மட்டுமே விட்டுச் செல்லாமல், நம்பிக்கை தரும் அம்சங்களையும் தொட்டுச் செல்வதுதான் இந்த நூலின் சிறப்பு. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது ஏராளமான வாசகர்களின், ஆசிரியர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், தமிழகக் கல்விச்சூழலில் மிகப் பெரும் விவாதங்களையும் தூண்டியுள்ளன. கள ஆய்வு, புள்ளிவிவரங்கள், நிபுணர்களின் கருத்துகள் என கல்வி சார்ந்த அனைத்து அம்சங்களையும் தாங்கி வெளியாகும் இந்த நூல், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
RS. 88 More...by பூ.கொ.சரவணன்
எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்று பிரமிக்க வைத்தவர்கள் உருவானது எப்படி? வெற்றி சும்மா இருந்தால் வருமா? வெற்றியாளர்களின் மறுபக்கம் என்ன? வரலாற்றில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய சுவாரசியங்கள் நிறைந்த தகவல்களைத் தருகிறது இந்த நூல். வெற்றி பெறத்துடிக்கும் உங்களுக்குத்தான் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் போற்றப்படும் ஒருவர் பெர்னாட்ஷா. அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்குத் தகவல் சொன்னார்கள், “உங்களுக்கு நோபல் பரிசு ஷா” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்குக் கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை; “அது போன வருடம் எழுதியது, உயிருக்குத் தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்குக் கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ளப் போகவே இல்லை. இதுபோன்ற வரலாற்று மேதைகளின் மகத்துவம் நிறைந்த வாழ்வியலைப் பற்றி நிறைய தகவல்களை அள்ளித் தந்துள்ளார் நூலாசிரியர். பெர்னாட்ஷா சொன்னது போல.. வாழ்க்கை உங்களைக் கண்டடைவது இல்லை; உங்களைப் படைத்துக்கொள்வது என்பதற்கேற்ப உங்களை நீங்கள் படைத்துக் கொள்ள நீங்கள் படிக்க வேண்டியது இந்த வரலாற்று நாயகர்களை பற்றித்தான் என்பது இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்து கொள்வீர்கள். வாசியுங்கள்.. உங்களுக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்திருக்கின்றன.
RS. 172 More...by கு.ராமகிருஷ்ணன்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலிடம் வெளிநாட்டவர் ஒருவர், ‘What is your culture?’ என்று கேட்டபோது, ‘Our Culture is Agricultue’ என்று படேல் பதில் சொன்னார். அப்படிப்பட்ட விவசாயத்தால் செழித்து, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும், தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் விளைநிலங்கள் இன்று வேகவேகமாக இறுகி, கருகிக்கொண்டு வருகின்றன. மீத்தேன் எடுக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு, ராட்சத எந்திரங்களாலும், பிரம்மாண்ட பெட்ரோல் கிணறுகளாலும் பயிர் குலுங்கும் விளைநிலங்கள் பாழ்பட்டுப் போவதைக் கண்டு கதிகலங்கி நிற்கின்றனர், டெல்டா பகுதி விவசாயிகள். மீத்தேனை எடுக்க உறிஞ்சப்படும் நீரின் அளவு, அதனால் சூறையாடப்படும் ஆறுகளின் கதி என்னவாகும் என்ற புள்ளிவிவரமே எதிர்காலம் என்னவாகுமோ என்ற அதிர்ச்சியைக் கொடுக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பெரிய பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல், கேஸ் கிணறுகளால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களும் விவசாயிகளும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பேராபத்தைகளையும் விரிவாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர் கு.ராமகிருஷ்ணன். பசுமை விகடனில் தொடராக வெளிவந்தபோது பலரையும் மீத்தேனுக்கு எதிராகக் குரல்கொடுக்க வைத்தது. யானை கட்டி போரடித்த மண், இன்று மீத்தேன் அசுரனால், எப்படியெல்லாம் இயற்கை வளம் குறைந்து அழிந்து வருகிறது என்பதை ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகிறது இந்த நூல்.
RS. 60 More...by ஆர்.குமரேசன்
‘வருமானத்தில் பாதி மருத்துவத்துக்கே செலவாகிறது’ என்ற புலம்பல் எல்லாப் பக்கமும் கேட்கிறது. இயற்கையைப் புறக்கணித்ததன் விளைவை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பாரம்பரிய உணவு குறித்தும் பாரம்பரிய மருத்துவம் குறித்தும் மக்கள் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். எந்தவித பின்விளைவுகளும் இல்லாத சித்த மருத்துவத்தை மக்கள் நாடத் தொடங்கியுள்ளனர். மருத்துவரிடம் செல்லாமல் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு நம்முடைய நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நாமும் மருத்துவர்தானே! நாம் புறக்கணித்த சித்த மருத்துவம் ஒரு செடியைப் போல மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ‘மூலிகை வனம்’ நம்முடைய அடிப்படை நோய்களைத் தீர்க்கக்கூடிய மருத்துவ நூல். பசுமை விகடனில் வெளிவந்த தொடர் இப்போது உங்கள் கைகளில் புத்தகமாக! ஒவ்வொரு மூலிகையிலும் உள்ள மருத்துவக் குணங்களை விளக்குவதோடு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகளையும் ஆங்காங்கே கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் ஆர்.குமரேசன். இந்த நூலில் உள்ள எல்லா மூலிகைகளும் ஏதோ ஒருவகையில் உங்களோடு தொடர்புடையதுதான்; பல இடங்களில் நீங்கள் பார்த்ததுதான்; உங்களால் வெட்டி வீழ்த்தப்பட்டதுதான்; வேறோடு பிடுங்கி எறியப்பட்டதுதான். பரவாயில்லை, நாம் மீண்டும் அந்த வேர்களோடும் இலைகளோடும் பயணிப்போம். நோய்களை வரும்முன்னே விரட்டுவோம்!
RS. 77 More...by செ.கார்த்திகேயன்
இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும். இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.
RS. 105 More...by ப.திருமாவேலன்
தமிழகத்தின் அரசியல் வரலாறு, தமிழக வரலாற்றைப்போல் நெடியது. ஆனால், இங்கு அது ஏனோ அரைகுறையாகவே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் சென்னையில் வலுவாகக் காலூன்றிய பிறகு, தமிழக அரசியல் வரலாறு, ஆவணங்களுக்குள் வந்தன. ஆனால், அவை ஆங்கிலேயர்களின் நியாயங்கள் - இந்தியர்களின் சட்ட விரோதங்கள் என்ற துரோகப் பார்வையில் பதிவு செய்யப்பட்டவை. ஆங்கிலேயர்கள் விரட்டப்பட்ட பிறகு எழுதப்பட்ட தமிழக அரசியல் வரலாறு, இயக்கங்கள், கட்சிகளின் கொள்கைகள், அங்கு அதிகாரத்துக்கு வந்தவர்கள், அவர்களை முழுமையாக எதிர்த்தவர்கள் பார்வையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பதியப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் தேசியவாதம், கம்யூனிஸ்டுகளின் வர்க்கப் பார்வை, நீதிக்கட்சியின் சமூக நீதி, திராவிட இயக்கங்களின் சமூகச் சீர்திருத்தம், தமிழ் தேசியவாதிகளின் மொழி உணர்வு, தலித் இயக்கங்களின் ஒடுக்கப்பட்டோர் குரல்... என்று நெடிய பாதையில் பயணப்பட்டுள்ள தமிழக அரசியல் வரலாற்றில் விடுபட்டுப்போன பக்கங்கள் ஏராளம். எழுதுபவர்களின் சார்பு, விருப்பம், தேவை, நோக்கங்களுக்கு ஏற்ப, அது வளைத்து நெளிக்கப்பட்டது. அதில், சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து சனாதன தர்மங்களுக்கு எதிராகக் குரலெழுப்பியவர்களின் குரல் ஒலிக்கவில்லை. கோடீஸ்வரர்களாகவும் ஜமீன்தார்களாகவும் இருந்த, நீதிக்கட்சியின் தலைவர்கள் எளிய மக்களுக்கு ஆற்றிய பணிகள் பதிவு செய்யப்படவில்லை. ரஷ்யப் புரட்சிக்கு முன்பே தமிழகத்தில் கம்யூனிஸம் கால் ஊன்றிவிட்ட வர்க்க வரலாறும், திராவிடச் சிந்தனைகளுக்கான விதையை நட்டது அயோத்திதாசப் பண்டிதர் என்பதும் எழுதப்படவும் இல்லை... தெளிவாக விளக்கப்படவும் இல்லை. அப்படி விட்டுப்போனவற்றை, வேண்டுமென்றே விடப்பட்டவற்றை, தேடி எழுதி பதிவு செய்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் அறுந்துபோன கண்ணிகளை இந்த நூலில் கோர்த்துள்ளார் நூலாசிரியர் ப.திருமாவேலன். தொலைபேசியே அரிதிலும் அரிதான காலத்தில், உலகம் முழுக்க தனக்கான நெட்வொர்கை வைத்திருந்த சிங்காரவேலர் என்று தொடங்கி, திரு.வி.க., வ.உ.சி., ரெட்டைமலை சீனிவாசன், சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா, ஓமந்தூரார், பக்தவத்சலம், குமாரசாமி ராஜா, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று இந்த நூல் பரந்து விரிகிறது. வெறுமனே வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் குறிப்பாகவும், அரசியல் இயக்கங்களின் கொள்கை முழக்கங்களாகவும் மட்டுமே இல்லாமல், தனி மனிதர்கள் வரலாற்று நாயகர்களானது எப்படி? அதற்கான பின்னணி என்ன? அவர்களின் தியாகம் எத்தனை உன்னதமானது என்பதை எடுத்து விளக்கியதோடு, இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் அரசியல் ஏன் அவசியம் என்பதையும் பொட்டில் அடித்ததுபோல் உரைக்க வைக்கிறது. நூலை வாசிக்கும்போது, மற்ற வரலாற்று நூல்களைப் போல், புள்ளி விவரங்கள், காலக்கோட்டை அடுக்கி வாசகர்களை மலைக்க வைக்காமல், எளிய மனிதர்கள், மாணவர்கள் புரிந்துகொள்ளும் வாசிப்பை இந்த நூல் சாத்தியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பெரியோர்களே... தாய்மார்களே’ மூலம், தமிழக அரசியல் வரலாறை வாசிக்க அனைவரும் வாருங்கள்.
RS. 392 More...by ப.திருமாவேலன்
அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்திருக்கிறது, எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதற்காக உழைத்த(!)வர்களையும் பார்த்திருக்கிறது. ஊழல் தேசியமயமாகிவிட்டது என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிச் சொல்லிடலாம். அதிகாரத்துக்கு வருவதே ஊழல் பணத்தை அள்ளிக்கட்டத்தான் பேரவல நிலையில்தான் இன்றைய அரசியல் சூழல் உள்ளது. ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று பாரதிதாசன் புகழ்ந்த பெரியார் அரசியல்வாதி அல்ல. அந்தப் பெரியாரின் அடித்தளத்தைக் கொண்டு தோன்றிய கட்சிகளைச் சேர்ந்தோர் சிலர், மக்கள் பணியை மறந்து, சொத்து சேர்ப்பதற்கு முதலில் வழியமைத்துக்கொடுத்தது யார் என்று தங்களுக்குள் தர்க்கம் செய்கின்றனர். தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்களையும் பற்றிச் சாட்டை சொடுக்கும் கட்டுரைகள் இவை. சமரசம் இல்லாமல் உள்ள நிலையை உள்ளபடி, அந்தந்த நேரத்து அரசியல் நிகழ்வுகள் பற்றி, ஆனந்த விகடனில், ப.திருமாவேலன் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஊழல்வாதிகளையும் சுயநல அரசியல் வியாபாரிகளையும், அவர்கள் மீது விமர்சன வெளிச்சம் பாய்ச்சி உலகுக்குக் காட்டிடும் இந்த நூல், அரசியல் களத்தைத் தூய்மையாக்கிடத் தூண்டுகோலாக இருக்கும்!
RS. 150 More...by மருத்துவர் கல்பனாதேவி
மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்!
RS. 140 More...