Cart is Empty
by டாக்டர் வி.எஸ்.நடராசன்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள் அளித்தும் தான் பெற்ற அனுபங்களை வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் டாக்டர் வி.எஸ்.நடராசன். முதியவர்களுக்கு வரும் நோய்கள், அவற்றுக்குச் செய்ய வேண்டிய தற்காப்பு முறைகள், பரிசோதனைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் என்று முதியோர் மருத்துவம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழிவகை சொல்கிறது இந்த நூல். முதுமை எப்போது ஆரம்பிக்கிறது தொடங்கி இறப்பு வரை முதியவர்களுக்கு வரும் நோய்களான மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்க வாதம், மறதி நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, மலச்சிக்கல், தோல் நோய்கள், கண் நோய்கள், காது&மூக்கு&தொண்டை நோய்கள் என்று பல்வேறு நோய்களுக்கும், முதுமையில் நலமாக வாழ உதவும் பரிசோதனைகள், உணவுகள், உடற்பயிற்சிகள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை குறித்தும், முதுமையை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் சந்தோஷமாக வாழலாம் - முதுமையும் ஒரு சுகமே என்பதையும், மிகவும் இயல்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி எழுதியுள்ளார் டாக்டர். வி.எஸ்.நடராசன. முதியவர்களில் பலரும் தங்களின் சிறு சிறு சந்தேகங்களுக்கு டாக்டர்களிடம் ஆலோசனை பெறத் தயங்குகிறார்கள். அப்படி கேட்டாலும் அவர்களுக்கு தெளிவாக, சுருக்கமாக சொல்லத் தெரிவதில்லை. டாக்டர்களுக்கும் மிகவும் பொறுமையாக அவர்களுக்கு எடுத்துக் கூற நேரம் கிடையாது என்பதைப் புரிந்துகொண்ட டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியவர்களிடம் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளித்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர் மருத்துவர் என்றால், நோய் வராமல் இருக்க தகுந்த உணவு, உடற்பயிற்சி, பாதுகாப்பு போன்ற நோய்த் தடுப்பு முறையால் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துபவர் சிறந்த மருத்துவர். டாக்டர் வி.எஸ்.நடராசன் சிறந்த மருத்துவர் என்பதை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. நூறு மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை. அரிய பயனை அள்ளித் தரும் இந்த நூல், உங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டியதும் நலமே!
RS. 105 More...by செ.திவான்
தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன. தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லி வரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்...’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார்? சமணர்கள் கழுவேற்றப்பட்டது எப்படி? பாண்டிய மாமன்னர் இலங்கைத்தீவை பிடித்தது எப்படி-? என பல்வேறு வரலாற்று சம்பவங்களின் சுவையான பின்னணிகளை எடுத்துக்கூறுகிறார் செ.திவான். ஆக, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்... தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக வரலாறு. படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள்!
RS. 112 More...by பெரு.முருகன்
திரையரங்குகளை நோக்கிவரும் ரசிகப் பெருமக்கள் திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் அல்லது வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டும் அல்லது திரைப்படத்தைப் பார்த்து ஒருவன் திருந்த வேண்டும்... இப்படித்தான் திரைப்பட இயக்குநர்கள் தாங்கள் இயக்கும் திரைப்படங்கள் குறித்துச் சொல்கிறார்கள்... சொல்வார்கள்! ஆனால், தன்னுடைய திரைப்படத்தைப் பார்த்துப் பார்வையாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட வேண்டும் என்று ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் கூறினார்! “திரைப்படம் என்ன சொல்லவருகிறது என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. பார்வையாளர்களை அலறவைக்கும் யுக்தியைப் பற்றித்தான் எனக்கு அக்கறை. ஒரு படம் நேர்த்தியாக அளிக்கப்படுவதன் மூலம் பார்வையாளர்கள் ஜப்பானில் இருந்தாலும் சரி, இந்தியாவில் இருந்தாலும் சரி அவர்கள் ஒரே விதமாக திகிலுற வேண்டும்” என்றார் அந்த திகில் மன்னன். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் கதைகள் அனைத்தும் ஒரு கொலையையோ அல்லது திகில் சம்பவத்தையோ மையப்படுத்தி இருக்கும். சின்னஞ்சிறிய கதையை மர்ம சினிமாவாக எடுத்து ரசிகர்களை மிரட்டியவர் அவர். தமிழ்ப் படங்களில் கதாநாயகனை போலீஸ் அல்லது வில்லன் துரத்தும் போது வழியில் ஆட்டு மந்தையோ, மாட்டு மந்தையோ வாத்துக் கூட்டமோ வழிமறிக்கும். இந்தக் காட்சியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஹிட்ச்காக்தான். தொடக்கக் காலத்தில் மௌனப் படங்களுக்கு டைட்டில் கார்டுகள் எழுதிவந்த சிறந்த ஓவியர் ஹிட்ச்காக். இங்கிலாந்தில் பிறந்த அவர், உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க மர்மக் கதைக் களம் பேருதவி புரிந்தது. சினிமாவில் புதுமைகளைப் புகுத்திய திகில் மன்னன் ஹிட்ச்காக்கிடம் “சிறந்த திரைப்படம் எடுக்க என்ன செய்யவேண்டும்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஹிட்ச்காக் சொன்னது மூன்று அம்சங்கள். ஒன்று திரைக்கதை, இரண்டு திரைக்கதை, மூன்று திரைக்கதை. ஆம்! கதையை மட்டுமே நம்பி ஹிட்ச்காக் சினிமா எடுத்தார். அவருடைய ஒவ்வொரு மர்மக் கதையும் நிச்சயம் திகிலை ஏற்படுத்தும்; வாசிப்பதற்கு சுவாரசியம் நிறைந்தது. வாசகர்களின் குதூகலத்துக்காக ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகளில் சிறப்புடைய சிலவற்றை இந்த நூலில் தொகுத்துத் தந்துள்ளோம். இனி, திகிலோடு உறவாடுங்கள்!
RS. 77 More...by வைகோ
‘அனைவரும் நம்மைக் கொண்டாட வேண்டும்’ என்ற எண்ணம் உடையவர்கள் பல நேரங்களில் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும். ஏனெனில் கடவுளில்கூட எல்லோருக்கும் பிடித்த ஒரு கடவுள் என ஒருவரும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சியினரும் மறைமுகமாகக் கொண்டாடும் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்றால் அது அண்ணாதான். பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்துவந்து புதியதோர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கியபோது பெரியாருக்கு அண்ணாமீது வருத்தங்கள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் பெரியாரும் பிற்காலத்தில் அண்ணாவைப் புரிந்துகொண்டார். பெரியார் வகுத்துக்கொடுத்த பாதையில் இந்தச் சமூகத்தை ஒரு சில படிகளேனும் அண்ணா உயர்த்த நினைத்தார். அதற்கு அரசதிகாரம் தேவை என்பதை உணர்ந்து தி.மு.க&வை ஆரம்பித்தார். சில வருடங்களில் ஆட்சியையும் பிடித்தார். ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என அண்ணா முதல்வராக இருந்த குறுகிய காலத்தில் மகத்தான சில சாதனைகளைச் செய்துகாட்டினார். புற்றுநோய்க்கு அவரது உடலைத் தின்னக் கொடுக்காமல் இருந்திருந்தால் தம்முடைய வாழ்நாளில் அவர் பல சாதனைகளைச் செய்திருப்பார். அண்ணா குறித்த அற்புதமான தகவல்களை எல்லாம் அதன் உண்மைத் தன்மை மாறாமல் வைகோ இந்த நூல் வழியாகத் திரட்டிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவின் அரசியல் நாகரிகம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறது; எதிர்க்கட்சியைக்கூட எவ்வளவு மரியாதையோடு நடத்தியிருக்கிறார் என்பதுபோன்ற பல தகவல்கள் இந்த நூல் வழியாக அறியக் கிடைக்கின்றன. அண்ணாவை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பணியைத்தான் வைகோ இந்த நூல் வழி செய்திருக்கிறார். இளைய தலைமுறையினர் நிச்சயமாக அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.
RS. 74 More...by பாரதி தம்பி
தண்ணீருக்காக அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலும் தகராறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாடுகளுக்கிடையே தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிறார்கள். குளங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்தாகிவிட்டது; அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. மழை நீரைத் தேக்கி வைக்க வழி செய்யப்படாததால் அது வீணாகக் கடலில்தான் கலக்கிறது. அரசாங்கம் தீட்டும் திட்டங்களை மட்டும் எதிர்பார்க்காமல், ஒவ்வொருவரும் மழை நீரைச் சேகரிக்கவும் அது வீணாவதைத் தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும் அந்தத் தண்ணீர் சுத்தமானதா என்றால்... அது கேள்விக்குறிதான். ஜூனியர் விகடனில் வெளிவந்தபோதே வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ‘தவிக்குதே... தவிக்குதே...’ தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்... ‘மகாராஷ்டிரா மாநில ஜல்னா மாவட்டத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் தண்ணீர் டேங்கர் லாரிகள் தயாரிக்கப்படுகின்றன’ என்னும் தகவல் நமக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. ‘ஒவ்வொரு முறை அரசு வளர்ச்சித் திட்டத்தை அறிவிக்கும்போதும் தமிழ்நாட்டில் ஓர் ஏரி பலிகொடுக்கத் தயார் செய்யப்படுகிறது என்பதே பொருள்’ என்று கூறுவதிலிருந்தே, நாளை நடக்கப் போகும் அபாயத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் நூல் ஆசிரியர் பாரதி தம்பி. தண்ணீர் மாசுபடுவதைப்பற்றி கவலைப்படும் நூல் ஆசிரியர் அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு வேலைகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு. தண்ணீரை சேமிப்போம்! பூமியைப் பாதுகாப்போம்!
RS. 77 More...by டி.கே.இரவீந்திரன்
இருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சுற்றிலும் சூழ்ச்சிச் சுற்றங்கள். அவர்களுக்கு அடிபணியும் அலுவலர்கள். தன் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யப் போதுமான அறிவைத் தேடிக்கொண்டு, சூழ்ச்சிகளைச் செவ்வனே முறியடித்தார். வேட்டையாடுவதிலும் வீர விளையாட்டிலும் மட்டுமே விருப்பமுடையவர் போல வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும் திறமையாக நாட்டை ஆண்டார். அக்பர். சிறந்த ஓவியர், எழுத்தாளர், போர்வீரர், இசைப் பிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைப் பெற்றிருந்தவர். ஆட்சி அதிகாரம் தன் கைக்கு வந்ததும் தலைகால் தெரியாமல் ஆடவில்லை. மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவது எப்படி என்ற சிந்தையில்தான் அவர் கவனம் இருந்தது. அடக்குமுறையாலும் அக்கிரமத்தாலும் இதுவரை மூதாதையர் வளைத்துப்போட்ட இந்தப் பேரரசில் மக்களின் ஆதரவைப் பெறுவது ஒன்றே தலையாய செயல் என்று புரிந்துகொண்டார். இஸ்லாமியர் அல்லாதாரைப் புரிந்துகொள்ளவும் சமயச் சச்சரவு இன்றி தன் பேரரசை நடத்திச் செல்லவும் முற்பட்டார். அவரவர் மதத்தின் நற் கருத்துகளை எல்லோரும் பரிமாறிக்கொள்வதையே விரும்பினார். அக்பரைத் தங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியும் சிலருக்கு இருந்தது. ஆனால், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் ஆகிய அனைத்து மத அர்த்தங்களையும் உணர்ந்தவர் அக்பர். தானாகவே தீன் இலாகி என்ற ஒரு மதத்தையும் தோற்றுவித்தார். அவர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் அக்பரைக் குறைகூறியும் இருக்கிறார்கள். அக்பர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட வாரிசு நெருக்கடிகள், வளர்ப்புத் தாயால் விளைந்த கொடூரங்கள் ஆகிய நெருப்பாற்றில் அவர் வெற்றிகரமாக நீந்திக் கரையேறி ஆட்சி செய்தது, பதேப்பூர் சிக்ரி என்ற தலைநகரை உருவாக்கியது ஆகியவற்றை நூல் ஆசிரியர் விறுவிறுப்புடன் விளக்குகிறார். மாமன்னரின் அக்பரின் வியக்க வைக்கும், சுவாரசியமான வரலாற்றைப் படியுங்கள்!
RS. 67 More...by செ.துரைசாமி
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள்தான், வழக்கு விசாரணையை விமர்சனம் செய்வார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை செய்த அதிகாரிகளே... விசாரணையின் போக்கை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ராஜீவ், சர்வதேச சதியின் காரணமாக கொலை செய்யப்பட்டார் என்பது உண்மை. அதைவிட உண்மை, அந்தச் சதியை நடத்தியவர்கள் இன்னும் சிக்காமல் இருக்கிறார்கள் & என்பதே வழக்கறிஞர் துரைசாமியின் வாதம். ராஜீவ் கொலைக்கு முன்பும், பின்பும், விசாரணையின் போதும் எழுந்த நூற்றுக்கணக்கான கேள்விகளை துரைசாமி இந்தப் புத்தகத்தில் எழுப்புகிறார். ராஜீவ் வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த போதும், அந்த விசாரணையின் போதும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் இக்கேள்விகளை கடந்த 22 ஆண்டுகளாக எழுப்பி வருபவர் வழக்கறிஞர் துரைசாமி. சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இவர், தன்னுடைய பல்வேறு சட்ட அனுபவங்களின் காரணமாக இந்நூலை தெளிவாக வழங்கியுள்ளார். இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த ஒருவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையையே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தையும், ஒரு வழக்கை எப்படி நுணுக்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்ற துல்லியத்தையும் இந்நூலைப் படிக்கும் போது வாசகர்கள் உணர முடியும்.
RS. 81 More...by ப.திருமாவேலன்
தங்கள் கடமைகளைச் செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் உள்ள இந்த நாட்டில் ‘அரசியல்வாதிகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் அரசியலைத் திருத்த முடியாது’ என்ற வரிகள்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. குடும்ப அரசியல், ‘நட்பு’ அரசியல், வாரிசு அரசியல், சினிமா அரசியல் என்று அத்தனை வகை அரசியல்களையும் சகித்துக்கொள்ளும் மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அதைப்பற்றிப் பேசி, பின் அதை மறந்துவிடுவார்கள். அரசியல்வாதிகளும் தாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே புதுப்பித்துக்கொள்வார்கள். ஆனால், ஊடகங்கள் மட்டுமே அமைச்சர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை; ஆன்மிகவாதிகள் முதல் ஆண்டிகள் வரை நிகழ்த்தும் தில்லாலங்கடி வேலைகளை அவ்வப்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். அந்த வகையில் விகடனில் வெளியாகும் அரசியல் கட்டுரைகள் அனைத்தும் மக்களின் மனக் குமுறல்களாகவே அமைந்திருக்கும். சாட்டையை எடுத்து விளாசினாலும் தார்க்குச்சி கொண்டு குத்தினாலும் அரசியல்வாதிகள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’த்தான் இருக்கும். ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தன் எழுத்தால், சொல் வன்மையால் அவர்கள் மேல் போர்த்தியிருக்கும் பல்வேறு ‘கலர்’ சட்டைகளைத் தோலுரித்துக் காட்டுகிறார் நூல் ஆசிரியர் திரு. ப.திருமாவேலன். கடந்த ஐந்து வருடங்களில் விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் கதம்பத் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் தேதி குறிப்பிட்டு இருப்பது, வாசகர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை.
RS. 95 More...by ரேவதி
ஃபாஸ்ட் புட் யுகத்திலிருந்து கொஞ்சம் விலகி வருவோமா? மாத்திரை மருத்துக்குக் கட்டுப்படாத நோயெல்லாம் மூலிகைக்குதான் கட்டுப்படுகிறது! கை வைத்தியம் எப்படி நம் உடலைப் பாதுகாக்கிறது என்பதைப் பற்றி இந்த நூலில் நூல் ஆசிரியர் ரேவதி விளக்கி எழுதியிருக்கிறார். பிரண்டைத் துவையலை சாப்பிட இன்றைய தலைமுறை விரும்புவதில்லை. ஆனால், அதில்தான் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது. பிரண்டையை நுனியாகப் பறிக்காமல் அடித் தண்டையும் சேர்த்துப் பறித்துச் சமைத்தால் அரிப்பும் எரிச்சலுமாக இருக்கும். வைத்தியம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. சுவையாகச் சமைக்கவும் தெரிய வேண்டும். பிரண்டை நீர் சுண்டினால் உப்புபோல படியும். குழந்தைகளுக்கு வாந்தி பேதி வந்தால் இந்த உப்பு மருந்தாகப் பயன்படும். இடியையே தாங்குகிற சக்தி வரகில் இருப்பதால்தான் அதைக் கோயில் கும்பத்தில் வைத்துப் பத்திரப் படுத்துகிறார்கள். தூதுயிலைப் பொடி பல்லை வெள்ளை வெளேர் என்று ஆக்கும். இவை போன்ற நுணுக்கமான ஏராளமான வித்தைகளை இதில் அள்ளித் தெளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். டிவி ரசித்துக்கொண்டே சிப்ஸைக் கொரிப்பதில்லையா அதுபோல வெறும் கைவைத்தியத்தை மட்டும் எழுதாமல் ஆங்காங்கே சொலவடைகளைச் சேர்த்து சுவை கூட்டி எழுதியிருப்பது புதுமை! டாக்டர் விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
RS. 63 More...by நீரை. மகேந்திரன்
வாடகை வீட்டில் இருப்பதில் பல அசௌகரியங்கள் உண்டு. எப்போது வீட்டுக்காரர் காலி செய்யச் சொல்லுவாரோ என்ற பயம் அடி மனதில் எப்போதும் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் காலி செய்யலாம் என்பதால் நம் இஷ்டத்துக்குச் சில பொருட்களைக்கூட வாங்க முடியது. ஆகவே, கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டுமானால் சொந்த வீடுதான் கட்ட வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். சொந்த வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதில் பல சிரமங்கள் இருப்பதால் அது கனவாகவே இருக்கும். அந்தக் கனவை நனவாக்கும் விதமாக இந்த நூலை எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் நீரை. மகேந்திரன். வீட்டு மனையை எப்படி வாங்க வேண்டும், மனையின் நாற்புற அளவுகளும் வெவ்வேறு அளவில் இருந்தால் எதனால் அதை வாங்கக் கூடாது, மனையை வாங்குவதற்கு முன் எப்படித் தேர்ந்து எடுப்பது, எப்படிப் பார்வையிடுவது, எந்தக் காலத்தில் போய்ப் பார்த்தால் பிற்காலத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம், மனையை வாங்குவதற்கு முன் எப்படி ஏமாறாமல் இருக்கலாம், எந்தெந்தப் பத்திரத்தைப் பார்வையிட வேண்டும் போன்ற சகல விஷயங்களையும் எழுதியிருக்கிறார். வீட்டு மனையை வாங்குவதில் தொடங்கி வீடு கட்டிக் குடியேறுவது வரை அத்தனை விஷயங்களையும் விளக்கி எழுதியிருக்கிறார். வீட்டைக் கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வரைபடம் தயாரித்தல், அதில் சிக்கல் இல்லாமல் முடிப்பது, கட்ட ஆரம்பிப்பதற்கு முன் பெற வேண்டிய மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கட்டும்போது கமர்ஷியல் அடிப்படை மின் இணைப்பு, கட்டி முடித்தவுடன் அதை வீட்டு உபயோகத்துக்கு மாற்றிக்கொள்வது, கட்டும்போது எந்தெந்தக் கட்டுமானத்துக்கு செங்கலோ, சிமென்டோ எப்படிப் பயன்படுத்துவது போன்ற நுணுக்கமான விஷயங்களை எழுதியிருக்கிறார். நாணயம் விகடனில் தொடராக வந்து பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் உங்கள் கைகளில் நூலாக இப்போது தவழ்கிறது. இந்த நூல் உங்கள் நிழலில் உங்களை வாழ வைக்கப்போவது உறுதி!
RS. 74 More...