Cart is Empty
by மதன்
ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அவர் கௌரவிக்கும் நேர்த்தியும், கிண்டலும் கேலியும் தொனிக்கும் கேள்விகளுக்கு அவர் அசராமல் விளாசித்தள்ளும் நகைச்சுவையான பதிலும்... படிக்கப் படிக்க திகட்டாதவை! மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது! இது 7வது தொகுப்பு. ஆனந்த விகடனில் நவம்பர் 2008 முதல் அக்டோபர் 2009 வரை வெளியான கேள்
RS. 67 More...by விகடன் பிரசுரம்
இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக இருப்பதற்கும் இன்னல்கள் நிறைந்தவையாக அமைவதற்கும் இந்தப் பருவத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள்தான் காரணம். டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது சில சந்தேகங்கள் சங்கடங்கள் எழும். அந்த நேரத்தில் என்ன செய்வது யாரிடம் ஆலோசனை கேட்பது என்று யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படிக் கேட்பதனால் தரம் தாழ்ந்துவிடுவோமோ, நம்மைத் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற ஒரு எண்ணமும் கூடவே எழுவது சகஜம்தான். இப்படி சங்கோஜப்படும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஆனந்த விகடன் இதழ்களில் ‘டீன் கொஸ்டீன்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி_பதில் பகுதி. இந்த நூலில், இளைஞர்களின் மனதில் எழும் கல்வி, உளவியல், உடற்கூறு, சட்டம் ஒழுங்கு என பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களே வழங்கிய ஆலோசனைகள், இளம் பருவத்தினருக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெற
RS. 56 More...by மதன்
அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களும் படித்துப் பாராட்டி வருகிறார்கள். நவீன உலகத்து நாகரிகம், விஞ்ஞானம், சினிமா போன்ற விஷயங்களை விவரிப்பது மட்டுமல்லாமல், பண்டைய காலத்து கலை, கலாசாரம், வரலாறு என அனைத்துத் துறை சார்ந்த கேள்விகளுக்கு தன் கண்ணோட்டத்தில் மதன் பதில் அளிக்கும் அழகும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களின் இயல்புகளை தனது எண்ணங்களில் கோத்து எழுதும் நேர்த்தியும் உண்மையிலேயே வாசகர்களின் அறிவுக்கு விருந்துதான்! ‘வாக்குறுதி தர ரொம்ப யோசிக்கிறவர்கள்தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள்!’ ‘சிறந்த மனிதனின் மனதில் ஓடுவது லட்சியங்கள். சாதாரண மனிதனின் மனதில் ஓடுவது ஆசைகள்!’ ‘விரோதிகளை ஒழித்துக் கட்ட சுலபமான ஒரு வழி _ அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டுவிடுங்கள்!’ _ இப்படி, சிந்தனைத் தெளிவு தரும் பதில்களும் ‘ஹாய் மத’னின் பலம்! ‘எனக்குப் பிடித்த அழகான சுற்றுலா தளம் _ புத்தகக் கடைகள்தான்’ என்று சொல்லும்
RS. 63 More...by விகடன் பிரசுரம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம்தொட்டு, சுதந்திர தேசத்தின் இன்றைய ஆட்சி முறை வரையில் தயங்காமல் விமரிசனங்களை வெளியிட்டு வருகிறது விகடன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என இந்தியச் சுதந்திரத் துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும், அவர்களின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவான கட்டுரைகள் வெளியிட்டு, மக்களிடம் சுதந்திர வேட்கையைப் பரப்பியதில் ஆனந்த விகடனுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரிட்டிஷாரை எதிர்த்துக் கார்ட்டூன்களும் தலையங்கங்களும் துணிந்து வெளியிட்டு, அவர்களின் ஒடுக்குதல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடிய சந்தர்ப்பங்களும் மறக்க இயலாதவை. கசந்து வடியும் பல உண்மைகளைக்கூட நகைச்சுவைத் தேன் தடவிக் கொடுப்பதன் மூலம்... சிரித்துக்கொண்டே ஜனங்களைச் சிந்திக்கச் செய்வது விகடனுக்கே உரிய பாணி! 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்ற தனது கொள்கையிலிருந்து இம்மியும் வழுவாமல்... அரசாங்கம், அதிகார அமைப்புகள், ஆன்மிகம், இலக்கியம், ஓவியம், இசை, நடனம், திரைப்படம் என சமுதாயத்தின் அத்தனை அம்சங்களிலும்... அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுவாரஸ்யமான செய்தி விருந்து அளித்து வந்திருக்கிறான் விகடன். ஆனந்த விகடன் பிறந்த 1926-ம் ஆண்டு தொடங்கி, 2000-ம் ஆண்டு வரையிலான 75 ஆண்டு கால விகடனின் விறுவிறுப்பான பதிவுகள்தான் 'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்’ என்கிற நூலாக உங்கள் கையில் கம்பீரமாக மின்னிக்கொண்டு இருக்கிறது. ஆழ்கடலில் முத்தாக அனைத்துத் தகவல்களையும் தேர்ந்தெடுத்து, அழகாகத் தொகுத்திருப்பவர்கள் ரவிபிரகாஷ், ராஜா. பக்கங்கள் புரளப் புரள... நம் தேசத்தின் கடந்த கால சரித்திரத்தை, நிகழ்காலத்தில் நின்றபடியே அணுஅணுவாகச் சுவைக்கப் போகிறீர்கள். அந்த வகையில், இந்தக் காலப் பெட்டகம் என்னும் பொக்கிஷத்துக்கு உங்கள் வீட்டு நூலகத்தில் நிரந்தரமான ஓர் இடம் நிச்சயம் உண்டு!
RS. 140 More...by டாக்டர் சங்கர சரவணன்
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வினாத்தாள்கள் தயாரித்து வருகின்றன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளைக்கூட தமிழில் எழுதலாம் என்பது நடைமுறையில் இருக்கிறது. TNPSC - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக ஏற்கெனவே ‘பொது அறிவுக் களஞ்சியம்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். போட்டித்தேர்வு எழுதுவோரிடம் இருந்தும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது, TNPSC - குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்காக, பொதுத் தமிழ்ப் பாடத்தை மட்டுமே மையமாக வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் இந்தப் ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’. தமிழ்ப் பாடங்களை எவ்வளவுதான் கரைத்துக் குடித்திருந்தாலும், ‘தேர்வு’ என்றவுடன் லேசான பயம் பற்றுவது இயல்பு. ஆனால், இந்த நூலைப் படித்தவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வுக் களத்தில் குதிக்கலாம். பத்தாம் வகுப்புத் தரத்திலிருந்து பட்டப்படிப்புத் தரம் வரை அமைந்த போட்டித் தேர்வு பொக்கிஷமான இந்த நூலில், பொதுத் தமிழ்ப் பாடத் திட்டம் பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டு, விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாதிரி வினா&விடை அளித்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழ்ப் பாடம் குறித்த அடிப்படை தொடங்கி, இலக்கணம் தொடர்பான ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய விளக்கங்களோடு, இதுவரை வெளிவராத நுணுக்கமான தகவல்களையும், அழகிய தமிழில் பழகிய வார்த்தைகளைக் கொண்டு தொகுத்து எழுதியிருக்கிறார் டாக்டர் சங்கர சரவணன். ஆன்றோர்களும் சான்றோர்களும் பாராட்டும்படியாக அமைந்திருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் அத்தியாயம், தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வமாக உள்ள அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமன்றி, தமிழின் சுவைக்காகவும், தகவல்கள் அறியும் ஆர்வத்துக்காகவும் இந்த நூலைப் படிக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறலாம். மொத்தத்தில் ஆசிரியர்கள், பள்ளி&கல்லூரி மாணவர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பயனுள்ள ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’ இது!
RS. 315 More...by விகடன் பிரசுரம்
அரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு, அதை நக்கல், நையாண்டி செய்து பேசத் தோன்றும். பத்திரிகைச் செய்திகளைப் படிப்பவர்கள், அறிவுபூர்வமான பல தகவல்களை அறிந்து கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சுவையாகச் சொல்லத் தோன்றும். இப்படி, நமது கருத்துகளையும், நமக்குத் தெரிந்த தகவல்களையும் மற்றவர்களுக்குச் சுவாரஸ்யமாகச் சொல்ல சிறந்த வழி கேள்வி_பதில் அமைப்புதான். நாம் தெரிந்துகொள்ளும் தகவல்களே சில நேரங்களில் நமக்குள் சில கேள்விகளை எழுப்புவதும் உண்டு. அதன் அடிப்படையில், ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களுக்குள் எழுந்த தகவல்களுக்கு, அவர்களே கேள்விகளை எழுப்பி, அதற்கு ‘சுருக்’கென்று பதிலும் எழுதத் தூண்டியபோது... பிரமிக்க வைத்தனர்! உதாரணமாக, சுவாரஸ்யமான, அறிவுபூர்வமான, சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்த பதில்கள் வாசகர்களின் ரசனையை வெளிப்படுத்தின. விமரிசனங்களுக்கு உரியவர்களின் மனம் புண்படாமல், நையாண்டி செய்து எழுதி அனுப்பிய பதில்கள் ரசிக்க வைத்தன! மொத்தத்தில், சிந்திக்க வைத்த அற்புதமான கேள்விகளும், பொருத்தமான பதில்களுமாக, வாசகர்களே படைத்து அளித்த பயனுள்ள தகவல்களின் பெட்டகம்தான், ‘நானே கேள்வி... நானே பதில்!’
RS. 50 More...by விகடன் பிரசுரம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டிய விகடனின் காலக் கண்ணாடி அந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை! அந்தப் புத்தகத்துக்கு வாசகர்களாகிய உங்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை எண்ணி மகிழ்ச்சியும் பிரமிப்பும் அடைந்த அதே வேளையில், உங்களில் பலர் தெரிவித்திருந்த ஒரு நியாயமான ஆதங்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ஒவ்வோர் ஆண்டும் நடந்த முக்கியச் சம்பவங்களை ஆனந்த விகடன் எப்படி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை ‘காலப் பெட்டகம்’ புத்தகம் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக... முக்கிய சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு துளியளவே படிக்கக் கிடைத்தது. உதாரணமாக, தமிழ் சினிமாவின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ படத்துக்கு கல்கி எழுதிய விமர்சனத்தில் ஆரம்பச் சில வரிகள்தான் எங்களுக்குப் படிக்கக் கிடைத்தன. அந்த வரிகளைப் படித்ததுமே, Ôஇந்த விமர்சனக் கட்டுரையை முழுமையாகப் படிக்க மாட்டோமாÕ என்று அடக்க முடியாத பேராவல் உண்டாகிவிட்டது. எனவே, அடுத்த முறை புத்தகம் வெளியிடும்போது, இதை மனத்தில் கொண்டு, அந்தக் காலத்தில் விகடனில் வெளியான சினிமா, அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகளை அதிகம் குறைக்காமல், முடிந்தால் முழுமையாக எங்களுக்குப் படிக்கக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று உங்களின் எண்ணத்தை கடிதம், இ-மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றச் சாதனங்களின் மூலம் எங்களிடம் தெரிவித்துள்ளீர்கள். இதோ, அது நிறைவேறுகிறது - இந்தப் பொக்கிஷத்தில்! காந்தி முதல் ஜெயலலிதா வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... இப்படி, அரசியல், சினிமா, ஆன்மிகம், இசை, நடனம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் அந்தந்த காலகட்டத்தில் ஆனந்த விகடனின் பங்களிப்பை அதே சுவையோடும் ரசனையோடும் தொகுத்துக் கொடுத்துள்ளோம். லக்ஷ்மி, ஜெயகாந்தன், சுஜாதா... என ஸ்டார் ரைட்டர்களின் சிறுகதைகளும் உண்டு. உங்கள் ரசனையும், தேடலும்தான் இந்தப் பொக்கிஷத்தில் மின்னும் அத்தனை மணிகளுக்கும் ஆதாரம்!
RS. 161 More...by பேராசிரியர் பா.சந்திரமோகன்
படிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெறுகிற ஒரு மாணவன் கல்லூரியில் சராசரி மதிப்பெண் வாங்கக்கூட தடுமாறும் நிலை. காரணம், தனக்குத் தகுந்த படிப்பு எது என்பதை அந்த மாணவன் அறியாததுதான். எதில் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள் உணரத் தவறுவதும், பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை மாணவர்களின் மீது திணிப்பதுமே இத்தகைய திண்டாட்டத்துக்கு வழிவகுக்கின்றன. இன்றைய நவீன உலகில் மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், புள்ளியியல், விண்வெளியியல், பொருளாதாரம், சட்டம், விவசாயம், அழகியல்... என எத்தனையோ விதமான படிப்புகள் உள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப, நம் கனவுக்குத் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு - நேற்றைய தலைமுறைக்கு வாய்க்காத வரம் இன்றைய மாணவர்களின் மடியில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கிறது. +2 முடித்த பிறகு நமக்கான சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கத் தேவையானது நிதானமான யோசனை. நமக்கான கோர்ஸ் எது, அதனை சிறப்பாக வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எவை என்பதை எல்லாம் ஆராய்ந்து மேற்படிப்பைத் தொடர்வதே சிறந்தது. அதற்காகவே பிரத்யேக முயற்சியுடன் பா.சந்திரமோகன் எழுதி இருக்கும் ஆக்கபூர்வ வழிகாட்டி இந்த நூல். பொறியியல், மருத்துவம் தொடங்கி சகலவிதமான படிப்புகள் குறித்தும், அதற்கேற்ற கல்லூரிகள் குறித்தும் நூலாசிரியர் விரிவாக எழுதி இருப்பது ஒவ்வொரு மாணவனையும் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் சேவைக்கு நிகரானது. மாணவர்கள் மட்டும் அல்லாது பெற்றோர்களும் படித்து, தக்க துணையாகக் கைகொள்ள வேண்டிய புத்தகம் இது. கிராமப்புற மாணவர்களை மனதில்கொண்டு, அவர்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம், எத்தகையப் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டு என்பதையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அனைவரும் படிக்கவேண்டிய பயனுள்ள துணைவன் இந்தப் புத்தகம்!
RS. 50 More...by ஸ்ரீநிவாஸ் பிரபு
“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் கல்வி நிலை. சுழன்றுகொண்டு இருக்கும் உலகில், நாமும் தினம் தினம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஓடுபவர்களின் வெற்றி இலக்கு என்ன, நல்லதொரு பணி; அதுவும் அரசுப் பணி. இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற நெக்குருகிப் படித்தாலும், ‘முடிவில் பாஸா... ஃபெயிலா? அதைச் சொல்லு’ என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் அதிவிரைவான எதிர்பார்ப்பு. இதை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தேர்வு என்றால் என்ன, எந்தெந்தத் துறை எப்படியெல்லாம் போட்டித் தேர்வை நடத்துகின்றது, தேர்வை சந்திக்கும் முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை, எந்தெந்தப் பாடப் பிரிவின் கீழ் இந்தப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்கிற விவரங்களின் தொகுப்புதான் இந்த நூல். மேலும், பல்வேறு தேர்வுக் குறிப்புகளுடன், போட்டித் தேர்வை GENERAL INTELLIGENCE, GENERAL LANGUAGE, NUMERICAL ABILITY, GENERAL KNOWLEDGE என, நான்கு பிரிவுகளாகப் பிரித்து அது அதற்கான விடைகளையும் கொடுத்து, உங்களைப் பயிற்சிக் களத்திலும் இறக்கியுள்ளார் நூலாசிரியர். அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு பாடத் திட்டம் தொடர்பான நுணுக்கமான சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டாலே வெற்றி நம்மை தொற்றிக்கொள்ளும். முடிந்தவரை முயற்சிப்பதைவிட, முடிக்கும்வரை முயற்சிப்பதே சிறப்பு!
RS. 88 More...by சி.கலா சின்னத்துரை
இன்றைய இளைஞர்கள் சவாலான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பு என்பது இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கனவாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஊதியத்தை எந்த அளவுக்குக் கொட்டிக் கொடுத்தாலும் அரசுப் பணி மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கில் இருக்கும் அரசுப் பணிகளுக்காக லட்சக்கணக்கிலான இளைஞர்கள் போட்டி போட்டு தேர்வு எழுதுகிறார்கள். மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்து மிகச் சிலரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நம் அரசு, அதற்கேற்றபடி கேள்விகளைக் கேட்கும் விதத்திலும், தேர்ந்தெடுக்கும் பக்குவத்திலும் மிகுந்த கவனம் காட்டுகிறது. வெறுமனே மனப்பாடம் செய்துகொண்டு தேர்வுக்குப் போய் மதிப்பெண் பெறுவது இனி சாத்தியம் இல்லாதது. தேர்வுத்துறை சமீபகாலமாகத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளில் பாடத்திட்டத்தின் பங்களிப்பு மிகுதியாக இருக்கிறது. 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருந்தே நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனை நுட்பமாக உணர்ந்து மிகச் சரியான முறையில் பொதுத் தமிழ்க் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமாக இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. எல்லாத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை இப்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்காக நாம் படிப்பதற்கும் போட்டித் தேர்வுகளுக்கு நாம் படிப்பதற்கும் வித்தியாசம் அதிகம். அந்த நுட்பத்தை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்தும். பாடத்திட்டங்களில் இருந்து எப்படி கேள்விகள் எடுக்கப்படுகின்றன? ஒரே கேள்வியை எப்படி மாற்றிக் கேட்பார்கள்? மிக முக்கிய வினாக்கள் எவை? நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய விவரங்கள் எவை என்கிற அத்தனை விதமான கேள்விகளுக்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது. தமிழக அரசுத் துறை சார்ந்த எந்தத் தேர்வாக இருந்தாலும் அதில் மிக முக்கியமான பகுதியாக பொதுத் தமிழ் இடம்பெறும். பொதுத் தமிழில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்களில் பாதி தமிழுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பொதுத் தமிழில் கவனம் செலுத்தினால் சுலபமாக அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பொதுத் தமிழுக்கான இலக்கணம், செய்யுள், உரைநடைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்கள், பயிற்சிக்கான கேள்விகள் என அற்புதமான தொகுப்பாக மிளிர்கிறது இந்த நூல். உங்களின் வெற்றிக்கு விகடன் பிரசுரத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!
RS. 130 More...